ரஷ்யா தயாரிப்பு கொரோனா தடுப்பு மருந்து ஸ்புட்னிக்-V நவம்பரில் இந்தியாவில் கிடைக்கும்?
டெல்லி: ரஷ்யா தயாரித்து வரும் கொரோனாவுக்கான ஸ்புட்னிக் (Sputnik-V) தடுப்பு மருந்து வரும் நவம்பர் மாதம் இந்தியாவில் கிடைப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ரஷ்யாவின் Fund தலைமை செயல் அதிகாரி கிரில் டிமித்ரிவ் தெரிவித்துள்ளார்.
உலக நாடுகளில் கொரோனா பாதிப்பு 3 கோடியை தாண்டியுள்ளது. கொரோனாவுக்கான தடுப்பு மருந்துகளை கண்டுபிடிப்பதில் உலக நாடுகள் படுதீவிரமாக உள்ளன.

சீரம் நிறுவனம் ஆய்வு
இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்ட் பல்கலைக் கழகம் கண்டுபிடித்திருக்கும் கொரோனா தடுப்பு மருந்தின் 3-வது கட்ட பரிசோதனைகள் நடைபெற்று வருகின்றன. இந்த மருந்தை இந்தியாவின் சீர நிறுவனமும் பரிசோதித்து வருகிறது. ஆக்ஸ்போர்டின் மருந்தை மனிதர்களுக்கு செலுத்தும் சோதனைகளுக்கும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

ரஷ்யாவின் Sputnik-V
இதேபோல் ரஷ்யாவின் Sputnik-V கொரோனா தடுப்பு மருந்தை இந்தியாவில் டாக்டர் ரெட்டி லேபாரட்டரீஸ் ஒப்பந்தம் செய்துள்ளது. ரஷ்யாவின் இந்த Sputnik-V 100 மில்லியன் டோஸ், இந்தியாவில் தயாரிக்கப்பட இருக்கிறது. இந்த மருந்தை மனிதர்களுக்கு கொடுத்து பரிசோதனைகள் மேற்கொள்ளவும் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.

மனித பரிசோதனைக்கு அனுமதி
இது தொடர்பாக டாக்டர் ரெட்டி லேபாரட்டரீஸ் நிர்வாக இயக்குநர் ஜிவி பிரசாத் கூறுகையில், ரஷ்யாவின் கொரோனா தடுப்பு மருந்தை மனிதர்களுக்கு செலுத்தி சோதனை செய்ய மருந்துகள் கட்டுப்பாட்டு இயக்குநரகத்திடம் அனுமதி கேட்டிருக்கிறோம்; ரஷ்யாதான் முதல் கொரோனா தடுப்பு மருந்தை வழங்கும் என கூறியுள்ளார்.

நவம்பரில் கொரோனா மருந்து
மேலும் கொரோனா தடுப்பு மருந்து தயாரிக்கும் ரஷ்யா நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி கிரில் டிமித்ரிவ் கூறுகையில், இந்தியாவில் நவம்பரில் கொரோனா தடுப்பு மருந்து கிடைக்க வாய்ப்புள்ளது என்றார். மேலும், கொரோனா தடுப்பு மருந்துகளை தயாரித்து கொரோனாவுக்கு எதிரான நடவடிக்கைகளில் இந்தியா மிக முக்கிய பங்களிப்பை வழங்கும் என்று நம்பிக்கை இருப்பதாகவும் அவர் தெரிவித்திருக்கிறார்.
-
சீனாவை சுற்றி வளைக்கும் இந்தியா.. இதுதான் ரியல் மாஸ்டர் பிளான்.. இனிமேல் தான் இருக்கு ஆட்டமே -
வீரர்களே இல்லாமல் ரஷ்யாவை அலறவிடும் உக்ரைன்! புதினே எதிர்பார்க்காத சீக்ரெட் ஆயுதம் இறக்கிய ஜெலன்ஸ்கி -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு












Click it and Unblock the Notifications