Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

உதயநிதி சனாதனத்தை எதிர்த்தாரே! அந்த சாபம்தான்.. சத்தீஸ்கரில் மூழ்கியது காங்.. சொன்னது யாருனு பாருங்க

Subscribe to Oneindia Tamil

டெல்லி: சத்தீஸ்கர், மத்திய பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் காங்கிரஸ் கட்சி தோல்வி அடைந்ததற்கு உதயநிதியின் சனாதன எதிர்ப்பு பேச்சுகள்தான் காரணம் என காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஆச்சார்யா பிரமோத் கிருஷ்ணம் தெரிவித்துள்ளார்.

ராஜஸ்தான், தெலுங்கானா, மத்திய பிரதேசம், சத்தீஸ்கர் ஆகிய 4 மாநிலங்களின் தேர்வு முடிவுகள் இன்று வெளியாகி வருகின்றன. இதில் தென்னிந்திய மாநிலமான தெலுங்கானாவில் பிஆர்எஸ் கட்சி ஆட்சியை இழக்கிறது. அங்கு காங்கிரஸ் ஆட்சி அமைக்கிறது.

Sanathana is the only reason for congress defeat in Chhattisgarh?

இந்த நிலையில் மற்ற 3 மாநிலங்களிலும் இரு மாநிலங்களில் ஆட்சியை தக்க வைத்துக் கொள்ளவில்லை. இன்னொரு மாநிலத்தில் ஆட்சியை இழந்துவிட்டது. இதில் சத்தீஸ்கரை பொருத்தமட்டில் காங்கிரஸ் ஆட்சியை இழக்கிறது.

அதாவது பாஜக 55 இடங்களில் முன்னணி வகித்து வருகிறது. ஆனால் ஆளும் காங்கிரஸோ 32 இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது. சத்தீஸ்கரில் விவசாயிகள், பெண்கள், பழங்குடியினர் உள்ளிட்டோர் நலனுக்கு பல்வேறு திட்டங்களை காங்கிரஸ் ஆட்சி செய்துள்ளது. எனினும் காங்கிரஸ் தோல்வி அடைந்துள்ளது.

அடுத்த ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் இது காங்கிரஸ் கட்சியின் செல்வாக்கை நிரூபிக்கும் அரையிறுதி போட்டியாகும். ஆனால் இதில் காங்கிரஸின் செல்வாக்கு சரிந்துள்ளது. இதுகுறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் ஆச்சார்யா பிரமோத் கிருஷ்ணம் கூறியிருப்பதாவது: சனாதன எதிர்ப்பு பேச்சுகள் கட்சியை தோல்வி கடலில் மூழ்கடித்துவிட்டது.

ஜாதி ரீதியிலான அரசியலை இந்த நாடு ஒரு போதும் ஏற்றுக் கொள்ளாது. சனாதனத்தை எதிர்த்ததற்கு இது சாபம் என தெரிவித்துள்ளார். அது போல் அரசியல் நிபுணர் டெஷீன் பூனாவாலா கூறியிருப்பதாவது: முதலில் தெலுங்கானாவில் காங்கிரஸ் கட்சி வென்றிருப்பதற்கு பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

சத்தீஸ்கர், மத்திய பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் காங்கிரஸ் ஏன் தோற்றது என்பது குறித்து சுயபரிசோதனை செய்ய வேண்டும். இதற்கு முழு காரணம் சனாதனத்தை எதிர்த்ததே ஆகும். மேலும் ஓபிசி கணக்கெடுப்பு நடத்துவதாக அறிவித்ததும் ஒரு காரணமாகும். அதிலும் மத்திய பிரதேசத்திலும் சத்தீஸ்கரிலும் ஓபிசி கணக்கெடுப்பு நடத்துவதாக பேசியது முக்கிய காரணியாக உள்ளது என தெரிவித்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+