குக்கூ.. இந்திய ரயில்வேயில் புதிய 'ஏஐ' ரோபோட் அறிமுகம்.. உஸ்தாதுக்கு ஒரு ஹாய் சொல்லுங்க!
இந்திய ரயில்வேயில் தற்போது உஸ்தாத் என்ற ரோபோட் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.
டெல்லி: இந்திய ரயில்வேயில் தற்போது உஸ்தாத் என்ற ரோபோட் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.
உலகம் முழுக்க தற்போது பல்வேறு துறைகளில் ரோபோட்கள் பயன்படுத்தப்பட்டு வருகிறது. முக்கியமாக கார் உள்ளிட்ட வாகனங்கள் தயாரிப்பில் அதிக அளவில் ரோபோட்கள் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
இந்த நிலையில்தான் தற்போது இந்திய ரயில்வேயில் ரோபோட் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு உஸ்தாத் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.

என்ன மாதிரியான ரோபோட்
இந்த ரோபோட் ஆர்டிபிஷியல் இண்டலிஜென்ஸ் எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மூலம் செயல்படும் ரோபோட் ஆகும். உஸ்தாத் USTAAD -Undergear Surveillance Through Artificial Intelligence Assisted Droid என்று பொருள் ஆகும். உஸ்தாத் என்றால் ஹிந்தியில் பயில்வான் என்றும் பொருள்படும் என்பது குறிப்பிடத்தக்கது. இது ரயில் உற்பத்தியில் உதவவும், ரயிலில் ஏற்பட்டு இருக்கும் கோளாறுகளை கண்காணிக்கவும் உதவும்.

எப்படி செய்யும்
இந்த ரோபோட்டில் அனைத்து பக்கங்களிலும் எச்.டி கேமராக்கள் இருக்கும். இந்த கேமராக்கள் அனைத்து பக்கங்களிலும் சுழல கூடியது. இது ரயிலின் அடிப்பாகத்தில் சென்று அங்கு இருக்கும் கோளாறுகளை கண்டுபிடிக்க உதவும். ரயில் உட்பகுதிக்குள்ளும் இதன் மூலம் செல்ல முடியும். இது வைஃபை மூலம் அருகில் இருக்கும் சோதனை கூடத்தில் இணைக்கப்பட்டு இருக்கும்.

எளிதான சோதனை
சோதனை கூடத்தில் இருக்கும் அதிகாரிகள் இந்த வீடியோவை உடனுக்குடன் பார்த்து, கோளாறுகளை கண்டுபிடிப்பார்கள். இந்த கோளாறுகளை பின் நபர்கள் வைத்து இவர்கள் சரி செய்வார்கள். இந்த ரோபோட் ஆர்டிபிஷியல் இண்டலிஜென்ஸ் மூலம் இயங்கும் என்பதால் எப்படி இயங்க வேண்டும் எப்படி தவறுகளை கண்டுபிடிக்க வேண்டும் என்று இதற்கே தெரியும். நாம் வீடியோவை பார்த்து கண்காணித்தால் மட்டும் போதும்.

எல்லா இடங்களிலும்
இதை தற்போது நாக்பூர் ரயில் உற்பத்தி மையத்தில் மட்டும் வைத்து சோதனை செய்து வருகிறார்கள். இதன் முழு வெற்றிக்கு பின் இந்தியா முழுக்க இது அறிமுகப்படுத்தப்படும். இந்திய ரயில்வே துறையில் ரோபோட் ஒன்று அறிமுகப்படுத்தப்படுவது இதுவே முதல்முறையாகும்.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு












Click it and Unblock the Notifications