3 மாதத்துக்கு மேலான கர்ப்பிணிகள் பணிபுரிய தகுதியற்றவர்கள்.. 'சர்ச்சை' உத்தரவை வாபஸ் வாங்கிய எஸ்பிஐ
டெல்லி: 3 மாதத்துக்கு மேலான கர்ப்பிணிகள் பணிபுரிவதற்கு தற்காலிகமாக தகுதியற்றவர்கள் என பாரத ஸ்டேட் வங்கி( எஸ் பி ஐ) புதிய விதிமுறைகள் வெளியிட்டது. பல்வேறு தரப்பில் இருந்தும் கண்டனம் வந்த நிலையில் எஸ் பி ஐ இந்த உத்தரவை வாபஸ் வாங்கியுள்ளது.
நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கிகளில் ஒன்று பாரத ஸ்டேட் வங்கி( எஸ் பி ஐ). இந்த எஸ் பி ஐ அறிவித்துள்ள புதிய வழிகாட்டு நெறிமுறைகள்தான் தற்போது சர்ச்சைக்கு காரணமாக அமைந்துள்ளது.

கர்ப்பிணிகள் பணிக்கு தகுதியற்றவர்கள்
அதாவது 3 மாதத்துக்கு மேல் கர்ப்பமாக இருக்கும் பெண்கள் எஸ் பி ஐ யில் புதிதாக பணியில் அமர்த்தப்பட மாட்டார்கள். அவர்களுக்கு பதவி உயர்வு வழங்கப்பட மாட்டாது என்று எஸ் பி ஐ அறிவித்துள்ளது. இந்த கர்ப்பிணிகள் தற்காலிகமாக தகுதியற்றவராக கருதப்படுவார்கள் என்றும் குழந்தை பிறந்த நான்கு மாதங்களுக்குள் அவர்கள் பணியில் சேர அனுமதிக்கப்படுவார்கள் என்றும் எஸ் பி ஐ வெளியிட்டுள்ள விதிகளில் கூறப்பட்டுள்ளது.

டெல்லி மகளிர் ஆணையம் நோட்டீஸ்
பெண்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தும் விதமாக அமைந்துள்ளன எஸ் பி ஐ.யின் இந்த விதிகளுக்கு பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இதற்கு டெல்லி மகளிர் ஆணையமும் கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும், 3 மாத கர்ப்பிணிகளை பணியில் சேரவிடாமல் தடுத்துள்ள பாரத ஸ்டேட் வங்கிக்கு டெல்லி மகளிர் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது

மகப்பேறு சலுகைகளுக்கு முரணானது
இது தொடர்பாக அந்த ஆணையத்தின் தலைவர் ஸ்வாதி மாலிவால் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'எஸ்பிஐயின் நடவடிக்கை பாரபட்சமானது மற்றும் சட்டவிரோதமானது, இது சட்டத்தின் கீழ் வழங்கப்படும் மகப்பேறு சலுகைகளை பாதிக்கும்.இந்த எதிர்ப்பை திரும்பப் பெறக் கோரி எஸ்.பி.ஐ-க்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளோம். இது மிகவும் தீவிரமான விஷயம்.ஏனெனில் இது சமூக பாதுகாப்பு கோட், 2020 இன் கீழ் வழங்கப்படும் மகப்பேறு சலுகைகளுக்கு முரணானது.

எஸ் பி ஐ கூறுவது என்ன?
இந்த வழிகாட்டுதல்கள் எவ்வாறு உருவாக்கப்பட்டன என்பதன் பின்னணியில் உள்ள செயல்முறையை விளக்குமாறும், அவற்றை அங்கீகரித்த அதிகாரிகளின் பெயர்களைக் குறிப்பிடுமாறும் விளக்கம் கேட்டுள்ளதாக ஸ்வாதி மாலிவால் கூறியுள்ளார். இது தவிர எஸ்.பி.ஐ.க்கு பலரும் கண்டனம் தெரிவித்தனர். இந்த அறிவிப்பு பாலின சமன்பாட்டுக்கு எதிரானது என்று கடும் விமர்சனத்தை முன்வைத்தனர்.

உத்தரவை வாபஸ் வாங்கிய எஸ்.பி.ஐ
மதுரை எம்.பி சு.வெங்கடேசனும் எஸ்.பி.ஐ.க்கு எதிராக பொங்கியெழுந்தார். இது குறித்து பாரத ஸ்டேட் வங்கி நீண்ட நேரம் விளக்கம் அளிக்காமல் இருந்த நிலையில் கண்டனங்கள் குவிந்தன. இந்த நிலையில் கருவுற்று 3 மாதங்கள் மேலேயான பெண்களுக்கு பணி நியமனம் இல்லை என்ற உத்தரவை வாபஸ் பெற்றது எஸ்.பி.ஐ வங்கி. எதிர்ப்பு வலுத்ததால் எஸ்.பி.ஐ உத்தரவை வாபஸ் வாங்கியுள்ளது.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications