தீபாவளி பட்டாசு வழக்கு.. தென்மாநிலங்களுக்கு உச்ச நீதிமன்றம் அளித்த சிறப்பு சலுகை என்ன தெரியுமா?
தீபாவளி அன்று பட்டாசு வெடிக்க ஏற்ற நேரத்தை தேர்வு செய்து கொள்ளும்படி தென்மாநிலங்களுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
Recommended Video

டெல்லி: தீபாவளி அன்று பட்டாசு வெடிக்க ஏற்ற நேரத்தை தேர்வு செய்து கொள்ளும்படி தென்மாநிலங்களுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
தீபாவளி அன்று பட்டாசு வெடிக்க கூடுதல் நேரம் ஒதுக்க முடியாது. பட்டாசு வெடிக்க 2 மணி நேரம் மட்டுமே அனுமதிக்க முடியும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

தீபாவளி அன்று பட்டாசு வெடிக்க கூடுதல் நேரம் கேட்ட தமிழக அரசின் மனுவில் உச்ச நீதிமன்றம் இந்த தீர்ப்பை வழங்கியுள்ளது. நீதிபதிகள் ஏ.கே.சிக்ரி, அசோக் பூஷண் அமர்வு இதில் தீர்ப்பு வழங்கியுள்ளது.
[தீபாவளியன்று பட்டாசு வெடிக்க 2 மணிநேரம்தான் அனுமதி.. தமிழக அரசின் மனு நிராகரிப்பு.. அதிர்ச்சி!]
இந்த நிலையில் வடமாநிலங்களில் இரவு 2 மணி நேரம் மட்டுமே வெடி வெடிக்க அனுமதி வழங்கப்பட்டு இருக்கிறது. ஆனால் தென் மாநிலங்களுக்கு முக்கிய சலுகை ஒன்று வழங்கப்பட்டுள்ளது.
தென்மாநிலங்களும் இரண்டு மணி நேரம் மட்டுமே வெடி வெடிக்க முடியும். ஆனால் அந்த இரண்டு மணி நேரத்தை தென் மாநிலங்கள் தங்களுக்கு ஏற்றபடி தேர்வு செய்து கொள்ள முடியும். அதாவது காலையில் வெடிப்பதா, மாலையில் வெடிப்பதா, இரவில் வெடிப்பதா என்று முடிவு செய்து கொள்ள முடியும்.
இரவில் ஒரு மணி நேரம் பகலில் ஒரு மணி நேரம் என்று மாற்றி மாற்றி வெடிக்கவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆனால் அந்தந்த தென்மாநில அரசுகள் இதற்கான அறிவுரைகளை மக்களுக்கு வழங்க வேண்டும் என்று நீதிபதிகள் கூறியுள்ளனர்.
வடக்கிலும், தெற்கிலும் கொண்டாடப்படும் தீபாவளி கொண்டாட்டங்களில் அதிக வேறுபாடு உள்ளது. வடமாநிலங்களில் பொதுவாக மக்கள் ராவணனை ராமன் வதம் செய்ததை நினைவு கூறும் வகையில் இரவில் வெடி வெடிப்பார்கள். ஆனால் தென்னிந்திய மக்கள், குறிப்பாக தமிழர்கள் நரகாசுரனை வதம் செய்யப்பட்டதை கொண்டாடும் வகையில் அதிகாலையிலேயே வெடி வெடிப்பார்கள்.
இந்த கலாச்சார வேறுபாட்டை மதிக்கும் வகையில் இந்த சலுகை தென்மாநிலங்களுக்கு வழங்கப்பட்டு இருக்கிறது. தமிழக அரசு இந்த நேர தேர்வு குறித்த அறிவிப்பை விரைவில் வெளியிட வாய்ப்புள்ளது.












Click it and Unblock the Notifications