4 மடங்கு ஆக்சிஜன் கூடுதலாக வாங்கிய டெல்லி அரசு; 12 மாநில பாதிப்புக்கு காரணம்- உச்சநீதிமன்ற குழு
டெல்லி: நாடு முழுவதும் கொரோனா உச்சகட்ட பாதிப்பை ஏற்படுத்திய போது கெஜ்ரிவால் தலைமையிலான டெல்லி அரசு தேவையைவிட 4 மடங்கு ஆக்சிஜனை கூடுதலாக வாங்கி வைத்துக் கொண்டது; இதனால் 12 மாநிலங்கள் ஆக்சிஜன் கிடைக்காமல் கடுமையாக பாதிக்கப்பட்டன என்று உச்சநீதிமன்ற குழு குற்றம்சாட்டியுள்ளது.
கொரோனா சிகிச்சைக்கான ஆக்சிஜன் சப்ளை தொடர்பாக ஆராய்வதற்காக எய்ம்ஸ் இயக்குநர் ரந்தீப் குலேரியா தலைமையில் உச்சநீதிமன்றம் ஒரு குழுவை அமைத்தது. இந்த குழுவில் டெல்லி அரசின் முதன்மை உள்துறை செயலர் பூபிந்தர் பல்லா, மேக்ஸ் இயக்குநர் சந்தீப் புத்திராஜா, மத்திய நீர்வளத்துறை இணை செயலர் சுபோத் யாதவ் ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.

4 மடங்கு ஆக்சிஜன்
இந்த குழு உச்சநீதிமன்றத்தில் தமது அறிக்கையை தாக்கல் செய்திருக்கிறது. அதில் டெல்லி அரசுக்கு தேவையான ஆக்சிஜன் என்பது 284 முதல் 372 மெட்ரிக் டன்னாக மட்டுமே இருந்தது. ஆனால் இதனைப் போல 4 மடங்கு ஆக்சிஜன் அதாவது 1,140 மெட்ரிக் டன் ஆக்சிஜனை வாங்கி வைத்துக் கொண்டது என குறிப்பிடப்பட்டுள்ளது.

12 மாநிலங்களுக்கு பிரச்சனை
அத்துடன் இப்படி டெல்லி அரசு கூடுதலான ஆக்சிஜனை வாங்கி வைத்துக் கொண்டதால் 12 மாநிலங்கள் பற்றாக்குறையை சந்திக்க நேரிட்டது என்றும் இந்த குழு குற்றம்சாட்டியுள்ளது. டெல்லியில் உள்ள சிங்கால் மருத்துவமனை, அருணா ஆசிப் அலி மருத்துவமனை, ஈஎஸ்ஐசி மருத்துவமனை, லைப்ரே மருத்துவமனை ஆகியவற்றில் சில படுக்கைகளே இருக்கின்றன. ஆனால் கூடுதல் ஆக்சிஜன் தேவை என கூறி டெல்லி அரசிடம் வாங்கி வைத்து கொண்டன.

பயன்படுத்தியது குறைவுதான்
இதனால்தான் டெல்லி அரசு கூடுதல் ஆக்சிஜனை கேட்க வேண்டிய நிலையும் ஏற்பட்டது என்றும் உச்சநீதிமன்ற குழு சுட்டிக்காட்டியுள்ளது. ஏப்ரல் 29 முதல் மே 10-ந் தேதி வரை டெல்லி அரசுக்கு 350 மெட்ரிக் டன்னுக்கு அதிகமான ஆக்சிஜன் தேவைப்படவே இல்லை என்பதையும் உச்சநீதிமன்றக் குழு தமது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

வரும் 30-ல் விசாரணை
ஏற்கனவே டெல்லிக்கு 700 மெட்ரிக் டன் ஆக்சிஜன் தினமும் சப்ளை செய்ய வேண்டும் என்று மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது. இந்த வழக்கின் விசாரணை வரும் 30-ந் தேதி நடைபெற உள்ளது.
-
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
29 + 9.. அதிமுக கூட்டணியில் பாஜக - அமமுகவுக்கு எத்தனை சீட்? இறங்கி வராத எடப்பாடி பழனிச்சாமி -
உலக நாடுகளுக்கே மிகப்பெரிய ஆபத்து.. நிலைமை கையை மீறி போகுது.. ரஷ்யா புதின் தந்த 'ஷாக்' வார்னிங் -
"நீங்கள் ஸ்டாலினை சீண்டி இருக்கலாம்.. ஆனால் என்னிடம் வேண்டாம்.!" ஆளுநர் ரவிக்கு மம்தா எச்சரிக்கை -
பவன் கல்யாண் போட்ட தூண்டில்.. நாமக்கல்லில் 70% எகிறும் விஜய் கிராஃப்.. திமுகவுக்கு 4 பக்கம் ஆபத்து? -
எடப்பாடியை முதல்வராக மோடி - அமித்ஷா அறிவிக்காதது ஏன்.. காரணம் இதுதான்.. உடைத்த பிரபலம் -
விசிக 8, மதிமுக 4.. நாளைக்குள் தொகுதி பங்கீட்டை முடிக்கும் திமுக.. குறைந்த தொகுதிகளில் உதயசூரியன்! -
ஒரு குண்டு கூட வீசாமல்.. அமெரிக்காவை காலி செய்யும் சீனாவின் "ரகசிய" ஆயுதம்.. ஆட்டம் மொத்தமா மாறுது -
பச்சை, வெள்ளை, சர்க்கரை ரேஷன் அட்டையில் அரசு சலுகைகள்! 3 மாதம் பொருட்கள் வாங்காவிட்டால் கார்டு கட்? -
175 சீட் "மாஸ்டர் பீஸ்" தலைகீழாக போகுதே? கியரை மாற்றிய திமுக, அஇஅதிமுக.. லட்டு சான்ஸ் மிஸ் ஆகிறதே? -
நாடு முழுதும் ESMA அமல்.. கியாஸ் சிலிண்டர் தட்டுப்பாட்டால் மத்திய அரசு அதிரடி.. மீறினால் அவ்வளவுதான்












Click it and Unblock the Notifications