Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சுதந்திர தினத்தன்று.. அடுத்தடுத்து நடைபெற்ற கிரைனட் தாக்குதல்! பெரும் பரபரப்பு

Subscribe to Oneindia Tamil

டெல்லி: சுதந்திர தினத்தன்று அடுத்தடுத்து நடைபெற்ற கிரைனட் தாக்குதல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Second grenade attack in Srinagar in an hour on Independence Day, cop injured

இந்தியா ஆங்கிலேயர்களிடம் இருந்து சுதந்திரம் பெற்று இன்றுடன் 75 ஆண்டுகள் நிறைவடைகிறது. இதையொட்டி டெல்லி செங்கோட்டையில் பிரதமர் நரேந்திர மோடி தேசியக் கொடியை ஏற்றினார்.

அதேபோல பல்வேறு மாநில முதல்வர்களும் தங்கள் மாநிலங்களில் தேசியக் கொடியை ஏற்றினர். நாடு முழுவதும் அமைதியான முறையில் கோலாகலமாகச் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது.

இந்தச் சூழலில் காஷ்மீரில் சுதந்திர தினத்தன்று அடுத்தடுத்து பயங்கரவாதிகள் தாக்குதல் சம்பவம் அரங்கேறியது.

ஸ்ரீநகரில் உள்ள காஷ்மீர் போலீஸ் கட்டுப்பாட்டு அறையில் மீது பயங்கரவாதிகள் கிரானைட் குண்டை வீசினர். இந்தச் சம்பவத்தில் போலீசார் ஒருவர் பலத்த காயம் அடைந்தார்.

காயமடைந்த அந்த காவலர் அருகே இருக்கும் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். இந்தச் சம்பவம் நடப்பதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்னதாக தான் மற்றொரு பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தி இருந்தனர்.

காஷ்மீரின் புத்காம் மாவட்டத்தில் உள்ள சதூரா பகுதியில் பயங்கரவாதிகள் மக்கள் நடமாட்டம் அதிகம் இருந்த கிரானைட் குண்டை வீசினர். இதில் கரண் குமார் சிங் என்பவர் காயம் அடைந்தார். அவருக்கு ஸ்ரீநகர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

சுதந்திர தினத்தன்று அடுத்தடுத்து நடைபெற்ற கிரைனட் தாக்குதல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+