''அக்யூஸ்ட்'' என்று விமர்சித்த ரவிசங்கர் பிரசாத்.. மானநஷ்ட வழக்கு தொடுத்தார் சசிதரூர்!
சுனந்தா புஷ்கர் மரணம் தொடர்பாக தவறான கருத்து தெரிவித்ததாக மத்திய சட்ட அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் மீது சசிதரூர் மானநஷ்ட வழக்கு தொடுத்துள்ளார்.
டெல்லி: சுனந்தா புஷ்கர் மரணம் தொடர்பாக தவறான கருத்து தெரிவித்ததாக மத்திய சட்ட அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் மீது முன்னாள் மத்திய அமைச்சர் சசிதரூர் மானநஷ்ட வழக்கு தொடுத்துள்ளார்.
காங்கிரஸின் முன்னாள் மத்திய அமைச்சர் சசி தருரின் மனைவி சுனந்தா புஷ்கர் கடந்த 2014-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 17ம் தேதி மர்மமான முறையில் மரணம் அடைந்தார்.
சுனந்தாவின் மரணம் இயற்கை மரணம் அல்ல என்று அறிக்கை வந்ததை அடுத்து அதுகுறித்த வழக்கு விசாரிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இது தொடர்பாக ரவிசங்கர் பிரசாத் தெரிவித்த கருத்து பிரச்சனை ஆகி இருக்கிறது.

சசிதரூர் என்ன சொன்னார்
சில நாட்களுக்கு சசிதரூர் தனது டிவிட்டரில் பிரதமர் மோடி குறித்து கருத்து தெரிவித்து இருந்தார். அதில் ''பிரதமர் மோடி ஒரு சிலந்தி போன்றவர். அவர் வீட்டின் உயரமான இடத்தில் இருக்கிறார். அவரை விரட்டுவது மிகவும் கடினம். ஆனால் விரட்டித்தான் ஆக வேண்டும்'' என்று கூறியுள்ளார்.

பதில் அளித்தார்
இதற்கு பதில் அளித்த மத்திய சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் ''சசிதரூர் ஒரு கொலை குற்றம் சாட்டப்பட்டவர், அவர் கடவுள் சிவனை நிந்தனை செய்வதா?'' என்று கோபமாக கேள்வி எழுப்பி இருந்தார்.

மன்னிப்பு கேட்க வேண்டும்
இந்த நிலையில் ரவிசங்கர் பிரசாத் தனது கருத்திற்கு 48 மணி நேரத்தில் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று சசிதரூர் அவருக்கு கடிதம் எழுதினார். இதற்கு பதில் அளித்த ரவிசங்கர் பிரசாத்தின் வழக்கறிஞர், ரவிசங்கர் பிரசாத் சொன்னதில் தவறு கிடையாது என்று கூறினார். மேலும், சுனந்தா புஷ்கர் வழக்கில் சசிதரூர் விசாரிக்கப்படுவதால், ரவிசங்கர் பிரசாத் அப்படி கூறியதில் தவறில்லை என்றார்.

வழக்கு தொடுத்தார்
இந்த நிலையில் தற்போது ரவிசங்கர் பிரசாத்திற்கு எதிராக சசிதரூர் மானநஷ்ட வழக்கு தொடுத்து இருக்கிறார். தன்னை தகாத முறையில் சமூக வலைத்தளங்களில் பேசியதாகவும், இதற்கு ரவிசங்கர் பிரசாத் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் வழக்கு தொடுத்துள்ளார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications