Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Saina Nehwal குறித்து அவதூறு ட்வீட்.. நடிகர் சித்தார்த்தின் ட்விட்டர் கணக்கு முடக்கப்படுகிறதா?

Subscribe to Oneindia Tamil

டெல்லி: பாட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால் குறித்து அவதூறு ட்வீட் போட்ட நடிகர் சித்தார்த்தின் ட்விட்டர் கணக்கு முடக்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

Recommended Video

    Saina Nehwal கொச்சைப்படுத்திய Siddharth? | Oneindia Tamil

    தமிழில் பாய்ஸ் படங்கள் மூலம் அறிமுகமானவர் சித்தார்த். இவர் ட்விட்டர், இன்ஸ்டா உள்ளிட்ட சமூகவலைதளங்களில் ஆக்ட்டிவாக இருப்பவர். சமூகம் சார்ந்த பிரச்சினைகளுக்கு அவ்வப்போது குரல் கொடுத்து வருகிறார்.

    இந்த நிலையில் சித்தார்த் அண்மைக்காலமாக மத்திய அரசையும் அதை ஆதரிப்பவர்களையும் கண்டித்து ட்விட்டரில் தனது கோபத்தை வெளிப்படுத்தி வருகிறார். இவரது ட்வீட்டுகள் பெரும் தாக்கத்தையும் கண்டனங்களையும் ஏற்படுத்தும் விதமாகவே உள்ளது.

    பஞ்சாப் வருகை

    பஞ்சாப் வருகை

    பிரதமர் நரேந்திர மோடியின் பஞ்சாப் வருகையின் போது பாதுகாப்பு குளறுபடி குறித்து கட்சிக்கு அப்பாற்பட்டு நிறைய பேர் கண்டனம் தெரிவித்தார்கள். அது போல்தான் பாட்மிண்டன் வீராங்கனையான சாய்னா நேவால் ஒரு கருத்தை பதிவிட்டிருந்தார். அதில் பிரதமரின் பாதுகாப்பிலேயே சமரசம் செய்யப்பட்டால் இந்த நாட்டில் யாரும் பாதுகாப்பாக இருப்பதாக சொல்ல முடியாது.

    அராஜகம்

    அராஜகம்

    பிரதமர் நரேந்திர மோடி மீது அராஜகவாதிகளால் நடத்தப்பட்ட கோழைத்தனமான தாக்குதலை கண்டிக்கிறேன் என பதிவிட்டிருந்தார். இதற்கு நடிகர் சித்தார்த் பாலியல் ரீதியான சர்ச்சைக்குரிய கருத்தை ட்வீட் செய்துள்ளார். அவரது ட்வீட்டுக்கு கண்டனங்கள் வலுத்துள்ளன. எம்பி பிரியங்கா சதுர்வேதி, பாடகி சின்மயி, நடிகை குஷ்பு, தேசிய மகளிர் ஆணையத் தலைவி ரேகா சர்மா உள்ளிட்டோரும் கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளனர்.

    ரேகா சர்மா

    ரேகா சர்மா

    இதற்கு நடிகர் சித்தார்த், தான் எந்த கருத்தையும் தரக்குறைவாக சொல்லவில்லை. அவமரியாதை செய்யும் நோக்கத்தில் எதையும் சொல்லவில்லை என குறிப்பிட்டுள்ளார். இந்த நிலையில் நடிகர் சித்தார்த்துக்கு தேசிய மகளிர் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இதுகுறித்து மகளிர் ஆணைய தலைவி ரேகா சர்மா வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் சாய்னா நேவால் குறித்து நடிகர் சித்தார்த் கூறிய கருத்துகளை தேசிய மகளிர் ஆணையம் பார்த்தது.

    பெண்களின் கண்ணியம்

    பெண்களின் கண்ணியம்

    சமூகவலைதளங்களில் பெண்களின் கண்ணியத்தை அவமதிக்கும் வகையில் மூர்க்கத்தனமான கருத்தாகவே சித்தார்த்தின் கருத்து பார்க்கப்படுகிறது. இந்த விவகாரத்தில் தானாக வந்து வழக்குப் பதிவு செய்கிறது தேசிய மகளிர் ஆணையம். சமூகவலைதளங்களில் பெண்களுக்கு எதிராக முறையற்ற ஆபாச வார்த்தைகளை பதிவிட்ட நடிகர் சித்தார்த்திற்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    ட்விட்டர் கணக்கு முடக்கம்?

    ட்விட்டர் கணக்கு முடக்கம்?

    இது போல் அவர் ஆபாசமாக பதிவிட்டதற்கு அவரது ட்விட்டர் கணக்கை முடக்க வேண்டும் என ரேகா சர்மா கேட்டுக் கொண்டுள்ளார். இதையடுத்து சித்தார்த் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. சித்தார்த்தை எதிர்த்தும் சாய்னாவுக்கும் ஆதரவாகவும் சமூகவலைதளங்களில் குரல்கள் எழுந்துள்ளன. எனவே அவரது ட்விட்டர் கணக்கு சிறிய காலத்திற்கு நிறுத்தி வைக்கப்படும் என்றே தெரிகிறது.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+