இந்தியாவில் கொரோனா பாதிப்பு 21.5 லட்சத்தை கடந்தது- உயிரிழப்பு எண்ணிக்கை 43,379
டெல்லி: இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 21.5 லட்சத்தை கடந்துள்ளது. இந்தியாவில் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 43,379 ஆக உயர்ந்துள்ளது.
உலக நாடுகளில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 19,833,083. கொரோனா மரணங்கள் எண்ணிக்கை 730,190. கொரோனா பாதித்து குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 12,739,953.

இந்தியாவில் நேற்று ஒரேநாளில் 64,399 பேருக்கு கொரோனா உறுதியானது. இதனால் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கையானது 21,53,011 ஆக அதிகரித்தது.
இந்தியாவில் ஒரே நாளில் 861 பேர் கொரோனாவுக்கு பலியாகினர். கொரோனாவால் இந்தியாவில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 43,379..
இந்தியாவில் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 14,80,885. தற்போது கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருவோர் எண்ணிக்கை 628,747.
இந்தியாவில் 3-வது நாளாக ஒருநாள் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 60 ஆயிரத்தை தாண்டியதாக இருந்தது. கடந்த வெள்ளிக்கிழமையன்று கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 21 லட்சத்தை தாண்டியது.












Click it and Unblock the Notifications