கொரோனாவில் மரணமடைந்த ஆஷிஷ் யெச்சூரி - பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீத்தாராம் யெச்சூரியின் மூத்த மகன் ஆஷிஸ் யெச்சூரி கொரோனாவால் மரணமடைந்துள்ளார். அவரது மறைவுக்கு திமுக தலைவர் மு.க ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
டெல்லி : சிபிஎம் பொதுச்செயலாளர் சீத்தாராம் யெச்சூரியின் மூத்த மகன் ஆஷிஸ் யெச்சூரி மறைவுக்கு பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார். ஆஷிஷின் துயர மற்றும் அகால மறைவுக்கு சீதாராம் யெச்சூரி அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல், ஓம் சாந்தி என்று பதிவிட்டுள்ளார்.
Recommended Video
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் கோரத்தாண்டவமாடி வருகிறது. சிறுவர்கள், இளைஞர்கள் முதல் முதியவர்கள் வரை லட்சக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். தினசரியும் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்து வருகின்றனர்.

மார்க்சிஸ்ட் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி மகன் ஆஷிஷ் யெச்சூரி நாளிதழ் ஒன்றில் பணியாற்றி வந்த நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டார்.
டெல்லி அருகே குருகிராம் தனியார் மருத்துவமனையில் ஆஷிஷ் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று அதிகாலையில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். தனது மூத்த மகன் ஆஷிஷ் இறந்தது வேதனை அளிப்பதாக சீதாராம் யெச்சூரி தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

சீதாராம் யெச்சூரி மகனின் மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். ஆஷிஷின் துயர மற்றும் அகால மறைவுக்கு சீதாராம் யெச்சூரி மற்றும் அவரது குடும்பத்தினருக்கு இரங்கல். ஓம் சாந்தி என்று பிரதமர் மோடி பதிவிட்டுள்ளார்.
டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் மார்க்சிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரியின் மூத்த மகன் ஆஷிஷ் யெச்சூரி காலமான செய்தியறிந்து மிகுந்த வேதனையடைந்திருப்பதாக தெரிவித்துள்ளார்.

மகனை இழந்து வாடும் தோழர் யெச்சூரிக்கு இந்த சோகத்தை தாங்கும் வலிமையை இயற்கை வழங்கட்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மார்க்சிஸ்ட் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரியின் மூத்த மகன் ஆஷிஷ் யெச்சூரி உயிரிழந்தது மிகவும் வேதனையளிக்கிறது. இது தோழர் யெச்சூரிக்கு தாங்க முடியாத இழப்பு. அவருக்கு எனது இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதாகவும் அன்புமணி ராமதாஸ் பதிவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications