ஆஷிஷ் யெச்சூரியின் இழப்பை அறிந்து வருத்தமும், வேதனையும் அடைந்தேன் - மு.க. ஸ்டாலின் இரங்கல்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீத்தாராம் யெச்சூரியின் மூத்த மகன் ஆஷிஸ் யெச்சூரி கொரோனாவால் மரணமடைந்துள்ளார். அவரது மறைவுக்கு திமுக தலைவர் மு.க ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
டெல்லி : சிபிஎம் பொதுச்செயலாளர் சீத்தாராம் யெச்சூரியின் மூத்த மகன் ஆஷிஸ் யெச்சூரி கொரோனாவால் மரணமடைந்துள்ளார் அவருக்கு வயது 34. ஆஷிஷ் யெச்சூரியின் இழப்பை அறிந்து வருத்தமும், வேதனையும் அடைந்தேன் என திமுக தலைவர் மு.க ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
Recommended Video
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் கோரத்தாண்டவமாடி வருகிறது. சிறுவர்கள், இளைஞர்கள் முதல் முதியவர்கள் வரை லட்சக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். தினசரியும் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்து வருகின்றனர்.

மார்க்சிஸ்ட் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி மகன் ஆஷிஷ் யெச்சூரி நாளிதழ் ஒன்றில் பணியாற்றி வந்த நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
டெல்லி அருகே குருகிராம் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் ஆஷிஷ் யெச்சூரி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தனது மூத்த மகன் ஆஷிஷ் இறந்தது வேதனை அளிப்பதாக சீதாராம் யெச்சூரி தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
சீதாராம் யெச்சூரி மகனின் மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். கேரள முதல்வர் பினராயி விஜயன், ஆஷிஷ் யெச்சூரி மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். ஆஷிஷ் யெச்சூரியை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கும் பினராயி விஜயன் தனது வருத்தங்களை தெரிவித்துள்ளார்.

இதே போல திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், ஆஷிஷ் யெச்சூரியின் இழப்பை அறிந்து வருத்தமும், வேதனையும் அடைந்தேன். ஆஷிஷ் மறைவு மிகுந்த வேதனை அளிப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

மகனை இழந்து வாடும் சீதாராம் யெச்சூரி குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கு ஆழ்ந்த இரங்கல் என்று மு.க ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications