ரேடார் குறித்து பிரதமரின் பேச்சு அபத்தமாக உள்ளது.. சீதாராம் யெச்சூரி விமர்சனம்
டெல்லி: மேகங்களால் பாகிஸ்தானின் ரேடார் கண்காணிப்பில் இருந்து இந்திய விமானங்கள் தப்பிவிடும் என பிரதமர் மோடி பொறுப்பற்ற வகையில் பேசுவதாக மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி தெரிவித்துள்ளார்.
புல்வாமா தாக்குதலில் 40 சிஆர்பிஎஃப் படையினர் உயிரிழந்தனர். இந்த நிலையில் பாகிஸ்தானின் பாலகோட் பகுதியில் உள்ள தீவிரவாதிகளின் முகாம்கள் மீது இந்திய விமான படை தாக்குதல் நடத்தியது.
இதுகுறித்து பிரதமர் நரேந்திர மோடி தனியார் சேனலுக்கு பேட்டியளித்துள்ளார், அப்போது அவர் கூறுகையில் திட்டமிட்ட நாளில் வானிலை மோசமாக இருந்ததால் வேறு நாளில் தாக்குதல் நடத்தலாம் என நிபுணர்கள் தெரிவித்தனர்.

சர்ச்சை
ஆனால் மேகங்களால் இந்திய விமானங்கள் பாகிஸ்தானின் ரேடார் கண்காணிப்பிலிருந்து தப்பிவிடும் என்பதால் தாக்குதல் அளிக்க அனுமதி அளிக்கப்பட்டது என மோடி கூறியிருந்தார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

பொறுப்பற்ற முறை
இதுகுறித்து சீதாராம் யெச்சூர் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறுகையில் ரேடார்கள் குறித்து பிரதமர் மோடி அபத்தமாகவும் கேலிக்குரிய வகையிலும் பேசியுள்ளார். 6-ஆவது கட்ட தேர்தல் நடைபெறுவதற்கு சில மணி நேரத்துக்கு முன்பு அவர் பாதுகாப்பு படைகள் குறித்து இவ்வாறு கூறியுள்ளதால் அவர் மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
|
தேர்தல் விதிமீறல்
இது முற்றிலும் விதிமீறல். எனவே மோடி மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். தேசத்தின் பாதுகாப்பை கவனக்குறையாக எடுத்துக் கொள்ளக் கூடாது. மோடியிடம் இருந்து இது போன்ற பொறுப்பற்ற கருத்துகள் மிகவும் ஆபத்தானவை. இது போல் பொறுப்பற்றவர்கள் இந்தியாவின் பிரதமராக நீடிக்க கூடாது என தெரிவித்துள்ளார் யெச்சூரி. இதுதொடர்பாக கடிதத்தையும் தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பியுள்ளார்.

டுவிட்டரில் நீக்கம்
ரேடார் குறித்த கருத்தை மோடி வெளியிட்டவுடன் பெரும் சர்ச்சை எழுந்ததால் அதை டுவிட்டரிலிருந்து அக்கட்சியினர் நீக்கிவிட்டனர். பிரதமரின் பேட்டி குறித்து காங்கிரஸ் கட்சி கூறுகையில் ரேடார் எப்படி செயல்படுகிறது என்பது குறித்து பிரதமருக்கு யாரும் விளக்கவில்லையா. இது சிரிப்பதற்கான விஷயம் அல்ல, தேசத்தின் பாதுகாப்பு தொடர்புடையது என விமர்சனம் செய்துள்ளது.
-
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications