Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சில எதிர்க்கட்சிகள் பாஜகவை ஆதரித்தன - துணை ஜனாதிபதி தேர்தல் தோல்விக்கு பின் ஆல்வா பகிரங்க புகார்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: இந்திய குடியரசுத் துணைத் தலைவர் தேர்தல் பாஜக சார்பில் போட்டியிட்ட ஜெகதீப் தன்கர் வெற்றி பெற்று இருக்கும் நிலையில் சில எதிர்க்கட்சிகள் பாஜகவை ஆதரித்ததாக எதிர்க்கட்சி வேட்பாளர் மார்க்கரெட் ஆல்வா குற்றம்சாட்டியுள்ளார்.

Recommended Video

    கொடநாடு வழக்கு: EPSஐ கவிழ்க்கும் OPS?|

    அதேபோல் குடியரசு துணைத் தலைவர் வெங்கய்யா நாயுடுவின் பதவிகாலம் முடிவடைய இருப்பதால் 14 வது குடியரசு துணைத் தலைவருக்கான தேர்தல் இன்று நடைபெற இருப்பதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது.

    ஜூலை 6 ஆம் தேதி தொடங்கிய குடியரசுத் துணைத் தலைவருக்கான வேட்புமனுத் தாக்கல் ஜூலை 19 ஆம் தேதியுடன் நிறைவடைந்தது.

    வேட்பாளர்கள்

    வேட்பாளர்கள்

    இதில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் வேட்பாளராக மேற்கு வங்க மாநில ஆளுநர் ஜெகதீப் தங்கர் அறிவிக்கப்பட்டார். எதிர்க்கட்சிகளின் வேட்பாளராக முன்னாள் மத்திய அமைச்சர் மார்க்கரெட் ஆல்வா ஆகியோர் போட்டியிட்டார். இந்த நிலையில் இன்று டெல்லியில் நாடாளுமன்றத்திலும் மாநில தலைமைச் செயலகங்களிலும் பலத்த பாதுகாப்புகளுக்கு மத்தியில் வாக்குப்பதிவு நடைபெற்றது.

    வாக்குப்பதிவு

    வாக்குப்பதிவு

    பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், எதிர்க்கட்சித் தலைவர்கள், மாநில முதலமைச்சர்கள், அனைத்து மாநில சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் காலையிலிருந்தே வாக்குகளை செலுத்தினர். 5 மணியளவில் குடியரசுத் துணைத் தலைவர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நிறைவடைந்தது.

    ஜெகதீப் தன்கர் வெற்றி

    ஜெகதீப் தன்கர் வெற்றி

    அதன் தொடர்ச்சியாக வாக்குகள் எண்ணப்பட்டன. இதில் 725 பேர் வாக்களித்தனர். 92.94% வாக்குகள் பதிவாகின. பாஜக வேட்பாளர் ஜெகதீப் தன்கர் 528 வாக்குகளையும் மார்க்கரெட் ஆல்வா 182 வாக்குகளையும் பெற்று உள்ளார். 15 வாக்குகள் செல்லாத வாக்குகளாக அறிவிக்கப்பட்டு உள்ளன. இதன் மூலம் ஜெகதீப் தன்கர் வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டு இருக்கிறார்.

    மார்க்கரெட் ஆல்வா கருத்து

    மார்க்கரெட் ஆல்வா கருத்து

    இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள எதிர்க்கட்சி வேட்பாளர் மார்க்கரெட் ஆல்வா, "புதிய துணை குடியரசுத் துணைத் தலைவராக தேர்வு செய்யப்பட்ட தன்கருக்கு வாழ்த்துக்கள். எனக்கு வாக்களித்த அனைத்து எதிர்க்கட்சித் தலைவர்கள், அனைத்து கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவருக்கும் நன்றி. எனக்காக பிரச்சாரம் செய்த அனைவருக்கும் நன்றி. இந்த தேர்தல் எதிர்க்கட்சிகள் இணைந்து பணியாற்றவும், நம்பிக்கையை வளர்த்துக்கொள்வதற்கும் வாய்ப்பாக அமைந்தது.

    எதிர்க்கட்சிகள் மீது விமர்சனம்

    எதிர்க்கட்சிகள் மீது விமர்சனம்

    ஆனால், சில எதிர்கட்சிகள் நேரடியாகவோ மறைமுகமாகவோ பாஜகவை ஆதரித்தன. இதன் மூலம் இதுபோன்ற கட்சிகளும் அவற்றின் தலைவர்களும் தங்களின் நம்பகத்தன்மையை சிதைத்துக்கொண்டார்கள் என்று நினைக்கிறேன். தேர்தல் முடிந்துவிட்டது. நமது அரசியலமைப்பை பாதுகாப்பதற்காகவும், நமது ஜனநாயகத்தை வலுப்படுத்துவதற்காகவும், நாடாளுமன்றத்தில் கண்ணியத்தை மீட்டெடுப்பதற்காகவும் நடக்கும் போராட்டம் தொடரும்.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+