களத்தில் சோனியா.. அதுவும் நீண்ட இடைவெளிக்கு பிறகு..! ஒன்றுகூடும் காங்கிரஸ் தலைவர்கள்! என்ன மேட்டர்
டெல்லி: நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் வரும் ஜூலை 21-ம் தேதி தொடங்குகிறது. இந்த கூட்டத்தொடரில் காங்கிரஸின் வியூகத்தை வகுக்கக் காங்கிரஸ் நாடாளுமன்றக் குழு இன்று சோனியா காந்தி தலைமையில் கூடுகிறது. இதில் பீகார் வாக்காளர் பட்டியல் சிறப்புத் திருத்தம் மற்றும் ஆபரேஷன் சிந்துார் குறித்து விவாதிக்கப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது.
நமது நாட்டில் வழக்கமாக ஜூலை மாதம் நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் நடைபெறும். அதன்படி இந்தாண்டு அடுத்த வாரம் அதாவது ஜூலை 21ம் தேதி மழைக்காலக் கூட்டத்தொடர் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வழக்கமாக மழைக்காலக் கூட்டத்தொடர் ஆகஸ்ட் 14ம் தேதி வரை நடைபெறும். ஆனால், இந்த முறை ஒரு வாரம் நீட்டிக்கப்பட்டு ஆகஸ்ட் 21ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதில் அணுசக்தித் துறையில் தனியார் நிறுவனங்களை அனுமதிக்கும் சட்ட மசோதா உள்ளிட்ட முக்கிய சட்டங்களை அரசு கொண்டு வர உள்ளது.

சோனியா காந்தி தலைமையில் ஆலோசனை
இதற்கிடையே இந்தக் கூட்டத்தில் காங்கிரஸ் வியூகத்தை வகுக்க அக்கட்சியின் நாடாளுமன்றக் குழு இன்று கூடுகிறது. காங்கிரஸின் நாடாளுமன்றத் தலைவர் சோனியா காந்தி தலைமையில் கூட்டம் நடைபெற உள்ளது. இதில் காங்கிரஸ் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி, கே.சி. வேணுகோபால், ஜெய்ராம் ரமேஷ், மணீஷ் திவாரி, சசி தரூர், மாணிக்கம் தாகூர் உள்ளிட்டோர் கலந்துகொள்கின்றனர்.
முக்கியமான விஷயம் என்ன
இன்று கூடும் கூட்டத்தில் பஹல்காம் தாக்குதல், ஆபரேஷன் சிந்துார் குறித்து காங்கிரஸ் தலைவர்கள் விவாதிக்க உள்ளனர். மேலும், அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வர்மா மீது குற்றவியல் நடவடிக்கை குறித்தும் ஆலோசிக்க உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.. நீதிபதி யஷ்வந்த் வர்மாவுக்கு ஆதரவாகச் சில காங்கிரஸ் தலைவர்கள் இருப்பதால், இந்த விஷயத்தில் காங்கிரஸ் மற்றும் பிற கட்சிகளுக்குள் கருத்து வேறுபாடு நிலவுகிறது. எனவே, இது குறித்து முக்கியமாக ஆலோசனை நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஏனென்றால் அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் மற்றொரு நீதிபதியான சேகர் யாதவ் மீது குற்றவியல் நடவடிக்கை எடுப்பது தொடர்பான எதிர்க்கட்சிகளின் நோட்டீஸில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் நீதிபதி யஷ்வந்த் வர்மா மீது நடவடிக்கை எடுக்கும்போது, நீதிபதி சேகர் யாதவ் விஷயத்தை எதிர்க்கட்சிகள் எழுப்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அடுத்தகட்ட நடவடிக்கை
முதலில் காங்கிரஸ் கட்சிக்குள் ஒருமித்த உணர்வு எட்டப்பட்ட பிறகு இந்தியா கூட்டணிக் கட்சிகளை இணைத்து ஒரு கூட்டத்தை நடத்தக் காங்கிரஸ் முடிவு செய்துள்ளது. அதில் நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைந்து செயல்படுவதில் முடிவெடுக்கப்படும். எதிர்வரும் நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் பீகாரில் நடக்கும் சிறப்பு வாக்காளர் திருத்த நடவடிக்கையையே முக்கியமான விஷயமாக எதிர்க்கட்சிகள் எழுப்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏனென்றால் இந்த நடவடிக்கையால் சுமார் இரண்டு கோடி வாக்காளர்கள் தங்கள் வாக்களிக்கும் உரிமையை இழக்கக்கூடும் என்று எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுகின்றன.
மேலும், இந்தியா பாகிஸ்தான் மோதலைத் தான் முடிவுக்குக் கொண்டு வந்ததாக டிரம்ப் சொல்வது, இந்த மோதலில் ஏற்பட்ட ராணுவ இழப்புகள், பொருளாதாரம் சூழல், விலைவாசி உயர்வு, வேலையில்லாத் திண்டாட்டம் போன்ற பிரச்சினைகளையும் எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டு வருவதாகச் சொல்லப்படுகிறது.
-
அடித்து ஆடிய எடப்பாடி.. திமுக கேம்பில் எதிர்பார்க்காத குளறுபடி.. ஸ்டாலின் மனதில் என்ன இருக்கிறது?.. -
விலை பேசப்படும் காங்கிரஸ் சீட்டுகள்! ராகுல் காந்திக்கு பறந்த புகார்! -
பாஜக கூட ஓகே.. தவெகதான் பிரச்சனை.. செல்வப்பெருந்தகை சரமாரி குற்றச்சாட்டு -
வன்னியர் மட்டும் வாழக் கூடாதா? காங்கிரஸ் கட்சிக்குள் வெடித்த மோதல்! சீனியர் தலை போட்ட பரபர மீட்டிங்! -
கேரளா தலையெழுத்தை தீர்மானிக்கும் "அந்த" சில ஆயிரம் வாக்குகள்.. கரையேறுமா காங்கிரஸ்? -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
தங்கம் வைத்திருப்போருக்கு பெரிய மாற்றம்! ஏப் 1 முதல் 6 டிஜிட் HUID கட்டாயம்! உங்க பழைய நகை என்னாகும் -
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்?












Click it and Unblock the Notifications