களத்தில் சோனியா.. அதுவும் நீண்ட இடைவெளிக்கு பிறகு..! ஒன்றுகூடும் காங்கிரஸ் தலைவர்கள்! என்ன மேட்டர்
டெல்லி: நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் வரும் ஜூலை 21-ம் தேதி தொடங்குகிறது. இந்த கூட்டத்தொடரில் காங்கிரஸின் வியூகத்தை வகுக்கக் காங்கிரஸ் நாடாளுமன்றக் குழு இன்று சோனியா காந்தி தலைமையில் கூடுகிறது. இதில் பீகார் வாக்காளர் பட்டியல் சிறப்புத் திருத்தம் மற்றும் ஆபரேஷன் சிந்துார் குறித்து விவாதிக்கப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது.
நமது நாட்டில் வழக்கமாக ஜூலை மாதம் நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் நடைபெறும். அதன்படி இந்தாண்டு அடுத்த வாரம் அதாவது ஜூலை 21ம் தேதி மழைக்காலக் கூட்டத்தொடர் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வழக்கமாக மழைக்காலக் கூட்டத்தொடர் ஆகஸ்ட் 14ம் தேதி வரை நடைபெறும். ஆனால், இந்த முறை ஒரு வாரம் நீட்டிக்கப்பட்டு ஆகஸ்ட் 21ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதில் அணுசக்தித் துறையில் தனியார் நிறுவனங்களை அனுமதிக்கும் சட்ட மசோதா உள்ளிட்ட முக்கிய சட்டங்களை அரசு கொண்டு வர உள்ளது.

சோனியா காந்தி தலைமையில் ஆலோசனை
இதற்கிடையே இந்தக் கூட்டத்தில் காங்கிரஸ் வியூகத்தை வகுக்க அக்கட்சியின் நாடாளுமன்றக் குழு இன்று கூடுகிறது. காங்கிரஸின் நாடாளுமன்றத் தலைவர் சோனியா காந்தி தலைமையில் கூட்டம் நடைபெற உள்ளது. இதில் காங்கிரஸ் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி, கே.சி. வேணுகோபால், ஜெய்ராம் ரமேஷ், மணீஷ் திவாரி, சசி தரூர், மாணிக்கம் தாகூர் உள்ளிட்டோர் கலந்துகொள்கின்றனர்.
முக்கியமான விஷயம் என்ன
இன்று கூடும் கூட்டத்தில் பஹல்காம் தாக்குதல், ஆபரேஷன் சிந்துார் குறித்து காங்கிரஸ் தலைவர்கள் விவாதிக்க உள்ளனர். மேலும், அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வர்மா மீது குற்றவியல் நடவடிக்கை குறித்தும் ஆலோசிக்க உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.. நீதிபதி யஷ்வந்த் வர்மாவுக்கு ஆதரவாகச் சில காங்கிரஸ் தலைவர்கள் இருப்பதால், இந்த விஷயத்தில் காங்கிரஸ் மற்றும் பிற கட்சிகளுக்குள் கருத்து வேறுபாடு நிலவுகிறது. எனவே, இது குறித்து முக்கியமாக ஆலோசனை நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஏனென்றால் அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் மற்றொரு நீதிபதியான சேகர் யாதவ் மீது குற்றவியல் நடவடிக்கை எடுப்பது தொடர்பான எதிர்க்கட்சிகளின் நோட்டீஸில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் நீதிபதி யஷ்வந்த் வர்மா மீது நடவடிக்கை எடுக்கும்போது, நீதிபதி சேகர் யாதவ் விஷயத்தை எதிர்க்கட்சிகள் எழுப்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அடுத்தகட்ட நடவடிக்கை
முதலில் காங்கிரஸ் கட்சிக்குள் ஒருமித்த உணர்வு எட்டப்பட்ட பிறகு இந்தியா கூட்டணிக் கட்சிகளை இணைத்து ஒரு கூட்டத்தை நடத்தக் காங்கிரஸ் முடிவு செய்துள்ளது. அதில் நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைந்து செயல்படுவதில் முடிவெடுக்கப்படும். எதிர்வரும் நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் பீகாரில் நடக்கும் சிறப்பு வாக்காளர் திருத்த நடவடிக்கையையே முக்கியமான விஷயமாக எதிர்க்கட்சிகள் எழுப்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏனென்றால் இந்த நடவடிக்கையால் சுமார் இரண்டு கோடி வாக்காளர்கள் தங்கள் வாக்களிக்கும் உரிமையை இழக்கக்கூடும் என்று எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுகின்றன.
மேலும், இந்தியா பாகிஸ்தான் மோதலைத் தான் முடிவுக்குக் கொண்டு வந்ததாக டிரம்ப் சொல்வது, இந்த மோதலில் ஏற்பட்ட ராணுவ இழப்புகள், பொருளாதாரம் சூழல், விலைவாசி உயர்வு, வேலையில்லாத் திண்டாட்டம் போன்ற பிரச்சினைகளையும் எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டு வருவதாகச் சொல்லப்படுகிறது.
-
“திருவள்ளுவர் கறுப்பா? சிவப்பா? தாடி இருந்ததா?” - பக்தவத்சலம் ஆட்சியில் நடந்த சர்ச்சை! -
கள்ள நோட்டு கும்பல் கைது.. களத்தூரில் குடிசைகள் தீ வைப்பு.. காமராஜரின் 10 ஆண்டுகால ஆட்சி! -
திடீரென மயங்கி விழுந்த கிரிஷ் சோடங்கர்.. கைத்தாங்கலாக தூக்கி வந்த காங்கிரஸ் நிர்வாகிகள்! -
காங்கிரஸ் போட்டியிடும் 28 தொகுதிகள் என்னென்ன? டெல்லி தலைகளுடன் சென்னையில் நடந்த முக்கிய ஆலோசனை! -
பாஜக எதிர்ப்பில் மென்மை போக்கு.. விஜய் கையாண்ட மோசமான யுக்தி.. காங்கிரஸ் கூட்டணிக்கு வராததன் பின்னணி -
புதுச்சேரி கூட்டணியில் குஸ்தி.. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் 2 இடங்களில் தனித்து போட்டி.. திமுக ஷாக்! -
அர்ஜுன் டெண்டுல்கர் திருமணத்திற்கு கூட வரலையே.. சுப்மன் கில் - சாரா டெண்டுல்கர் பிரேக் அப்? -
நகைக்கடன் தள்ளுபடி கூட்டுறவு வங்கியின் சர்ப்ரைஸ் வரட்டும்! ஊழியர்களுக்கு ரூ.8000 ஏறிய ஊதியம் பாருங்க -
விஜய்க்கு எதிராக வெளியான வீடியோ.. அதிர்ந்து போன நடிகை அம்பிகா! ஆதங்கத்துடன் பதிலடி -
2020ல் ஒரு கோடிக்கு 'இதை' வாங்கியிருந்தால் இன்று 75 கோடி லாபம்.. எஸ்பிஐயில் 6 கோடி.. தங்கம் 4 கோடி -
எடப்பாடி பழனிசாமி மீது அதிருப்தி! திமுகவில் இணைந்த முன்னாள் எம்எல்ஏ இளையக்கண்ணு! -
தமிழ்நாட்டின் ஹிட்லர்.. மனைவி, மகளை விரட்டிவிட்டு மகளிர் தின விழாவா! விஜய்யை சாடிய இயக்குநர் அமீர்












Click it and Unblock the Notifications