நபிகள் நாயகம் குறித்த சர்ச்சை.. நுபுர் சர்மாவுக்கு எதிராக.. தென்கொரியாவில் இஸ்லாமியர்கள் போராட்டம்
டெல்லி: நபிகள் நாயகம் குறித்து நுபர் சர்மா கூறிய சர்ச்சைக்குரிய கருத்தைக் கண்டித்து இஸ்லாமியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பாஜகவின் முன்னாள் செய்தித் தொடர்பாளர் இருந்த நுபுர் சர்மா சில வாரங்களுக்கு முன்பு டிவி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றுப் பேசினார்.
பணவீக்கம்.. விலைவாசி உயர்வு.. மத்திய அரசுக்கு எதிராக வீதி நாடகம்.. சிவன் வேடமிட்ட நபர் அதிரடி கைது
அதில் அவர் இஸ்லாமிய இறைத் தூதர் நபிகள் நாயகம் குறித்து சில சர்ச்சை கருத்துகளைத் தெரிவித்தார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
நுபர் சர்மா
இதற்கு இந்தியா மட்டுமின்றி உலகெங்கும் இருந்து கடும் எதிர்ப்புகள் கிளம்பியது. ஐக்கிய அமீரகம், சவுதி அரேபியா, பாகிஸ்தான் எனப் பல இஸ்லாமிய நாடுகள் இந்த விவகாரத்திற்கு தங்கள் அதிருப்தியைத் தெரிவித்து இருந்தன. இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்த நிலையில், அவர் கட்சியில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டார்.
பதற்றம்
அதேபோல இந்த விவகாரத்தில் மற்றொரு பாஜக நிர்வாகி நிரந்தரமாக நீக்கப்பட்டார். இதையடுத்து ராஜஸ்தான் மாநிலத்தில் இந்த விவகாரம் தொடர்பாக சில அசம்பாவித சம்பவங்களும் நடைபெற்றன. இதையடுத்து அங்குப் பதற்றமான ஒரு சூழல் உருவானது. அங்கு அமைதி திரும்பவே சில நாட்கள் வரை ஆனது.
பக்ரீத்
இந்தச் சூழலில் இன்று பக்ரீத் இஸ்லாமியர்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றாகும். இறைத்தூதர் இப்ராஹிம் நபியின் தியாகத்தைக் குறிக்கும் வகையில் இந்த பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. இஸ்லாமியர்களின் நாள்காட்டியில் ஹஜ் மாதம் 10ம் தேதி இந்த பண்டிகை கொண்டாடப்படுகிறது. உலகெங்கும் உள்ள இஸ்லாமியர்கள் பக்ரீத் திருநாளைக் கொண்டாடினர்.
போராட்டம்
இந்தச் சூழலில் நபிகள் நாயகம் மீதான அவதூற்றைக் கண்டித்தும், நுபுர் சர்மாவைக் கைது செய்ய வலியுறுத்தியும் தென்கொரியாவில் பக்ரீத் பெருநாள் தொழுகை முடித்ததுடன் பதாகைகளை ஏந்தி அமைதி போராட்டம் நடத்தினர். இந்தியா, உஸ்பெகிஸ்தான், வங்கதேசம் உள்ளிட்ட பல நாடுகளைச் சேர்ந்த தொழிலாளர்கள் சுமார் 500 பேர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.