இதை முன்கூட்டியே பிரக்யா தாகூர் செய்திருந்தால்.. இந்த பிரச்சினை வந்திருக்காது.. ஸ்பைஸ்ஜெட் விளக்கம்
Recommended Video
டெல்லி: பாஜக பெண் எம்பியும் சர்ச்சைக்குரிய பெண் சாமியாருமான பிரக்யா தாகூர் விமானத்தில் பயணிகளுடன் தகராறில் ஈடுபட்டது தொடர்பாக ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் விளக்கம் ஒன்றை அளித்துள்ளது.
ஸ்பைஸ்ஜெட்டுக்கு சொந்தமான பம்பார்டியர் க்யூ 400 என்ற 78 இருக்கைகள் கொண்ட விமானம் டெல்லியிலிருந்து போபாலுக்கு இயக்கப்படுகிறது. இந்த விமானத்தில் முதல் வரிசை அவசர கால இருக்கை ஆகும். இந்த இருக்கை சக்கர நாற்காலி பயணிகளுக்கு ஒதுக்கப்படாது.
இந்த நிலையில் நேற்று முன் தினம் இந்த விமானத்தில் போபால் செல்ல பிரக்யா தாகூர் முன் பதிவு செய்திருந்தார். அவர் முன்பதிவு செய்திருந்த முன்வரிசையில் அமர்ந்தார்.

பாதுகாப்பு
அவர் சக்கர நாற்காலியில் அமர்ந்திருந்ததை கண்ட விமான ஊழியர்கள் இது அவசர கால இருக்கை என்பதால் பாதுகாப்பு காரணங்களுக்காக இதை சக்கர நாற்காலி பயணிகளுக்கு ஒதுக்கீடு செய்ய முடியாது என்றனர்.

மக்கள் பிரதிநிதி
இதற்கு பிரக்யாவோ மறுப்பு தெரிவித்தார். மேலும் பாதுகாப்பு காரணங்களை கூறி பயணிகளும் அவரை பின் இருக்கைக்கு செல்லுமாறு வலியுறுத்தினர். எனினும் அவர் மறுத்துவிட்டார். சக பயணிகளில் ஒருவர் மக்கள் பிரதிநிதியான தாங்களே இது போல் செய்யலாமா என கேட்டார்.

இறக்க கூறிய பயணிகள்
அதற்கு பிரக்யா மசியவில்லை. இதனால் விமானம் புறப்பட தாமதமாவதை உணர்ந்த சக பயணிகள் ஒன்று அவர் தனது இருக்கையை மாற்றிக் கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் அவரை இறக்கிவிடுங்கள் என தெரிவித்தனர்.

இருக்கை
அப்போது சக்கர நாற்காலி பயணிகள் முதல் வரிசையில் உட்காரக் கூடாது என்பதற்கான விதிகள் அடங்கிய ஆவணங்களை காண்பிக்குமாறு விமான ஊழியர்களிடம் கேட்டார். அது அவருக்கு காண்பிக்கப்பட்டது. இதையடுத்து பிரக்யா தனது இருக்கையை மாற்றி கொள்ள ஒப்புக் கொண்டு பின் இருக்கைக்கு சென்றார்.

முன் பதிவு
பிரக்யா தாகூரின் பிடிவாதத்தால் விமானம் 45 நிமிடங்கள் தாமதமானது. இதுகுறித்து ஸ்பெஸ்ஜெட் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. அதில் முதல் வரிசை எப்போதும் சக்கர நாற்காலி பயணிகளுக்கு ஒதுக்கீடு செய்யப்படாது. தான் சக்கர நாற்காலியுடன் பயணிப்பேன் என்பதை பிரக்யா முன்பதிவு செய்யும் போது தெரிவிக்கவில்லை.

குழப்பங்களுக்கு காரணம்
இதனால் இவர் சக்கரநாற்காலி பயணி என்பது விமான ஊழியர்களுக்கு தெரியவில்லை. அவர் முன்பதிவு செய்த போதே இதை தெரிவித்திருந்தால் அவருக்கு முதல் வரிசை ஒதுக்கப்பட்டிருக்காது. அவர் குறிப்பிடாததுதான் இந்த பிரச்சினைகளுக்கும் குழப்பங்களுக்கும் காரணம் என கூறியுள்ளது.
-
NDA கூட்டணியில் தவெக? துணை முதல்வராகிறாரா விஜய்? சாணக்கியத்தனத்தை சொல்லி கொடுத்த பிரபல நடிகர் -
“சவுதியிலிருந்து உடனே வெளியேறுங்கள்..” முதல் முறையாக அறிவித்த அமெரிக்கா! ஆக்ரோஷமான ஈரான் -
விஜய்க்கு எதிராக வெளியான வீடியோ.. அதிர்ந்து போன நடிகை அம்பிகா! ஆதங்கத்துடன் பதிலடி -
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
Next CM: தமிழகத்தில் ஆட்சியை பிடிப்பது யார் தெரியுமா? சித்தர் கணிப்பை பாருங்க! அப்போ விஜய்? -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்! -
எடப்பாடி கோட்டையில் திமுகவுக்கு ஷாக்! அதிமுகவுக்கு தாவிய முன்னாள் எம்.எல்.ஏ! -
படக்குனு 10 கிராமாவது வாங்கிப் போடுங்க! 19,000 சரிவில் தங்க விலை! அள்ளிப் போட இது தான் சரியான நேரம்! -
90, 60, 55, 25: தமிழகத்தின் அடுத்த முதல்வர் இவர்தான்? 2 துணை முதல்வர்கள் யார்? பலே பாஜக.. அப்ப விஜய் -
செவ்வாழை ரகசியம்: 48 நாட்கள் தொடர்ந்து பழத்தை சாப்பிட்டால் உடலில் நடக்கும் அந்த அதிசயம்..! -
வாடகை வீடுகளில் வசிக்கிறீங்களா? வந்தது 'பம்பர்' பரிசு.. மத்திய அரசின் புது வாடகை விதி! நோட் பண்ணுங்க












Click it and Unblock the Notifications