கொரோனாவால் இறந்தவர்களுக்கு ரூ4 லட்சம் இழப்பீடு வழங்க சாத்தியமே இல்லை- உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு
டெல்லி: கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களுக்கு மாநில அரசுகளால் ரூ4 லட்சம் இழப்பீடு வழங்குவது என்பது சாத்தியமற்றது என்று உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
கொரோனாவால் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு நாடு முழுவதும் மாநில அரசுகள் ரூ4 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்பது பொதுநலன் வழக்கு. வழக்கறிஞர்கள் ரீபக் கன்சால், கவுரவ் பன்சால் ஆகியோர் இந்த பொதுநலன் வழக்கை தொடர்ந்தனர்.

183 பக்க பதில்
இதனை விசாரணைக்கு ஏற்ற உச்சநீதிமன்றம் மத்திய அரசு பதிலளிக்க உத்தரவிட்டிருந்தது. இதையடுத்து மத்திய அரசு 183 பக்கங்களுடனான பதில் மனுவை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்தது.

கொரோனா- இயற்கை பேரிடர் மரணங்கள்
அதில், இயற்கை பேரிடர்கள் என்பது குறிப்பிட்ட இடங்களில் மட்டுமே நிகழக் கூடியது. அதற்கு இழப்பீடுகளை வழங்க இயலும். ஆனால் கொரோனா மரணங்கள் என்பது உலகம் முழுவதும் நாள்தோறும் நிகழ்ந்து கொண்டே இருக்கிறது.

இழப்பீடு சாத்தியம் இல்லை
நமது நாட்டில் இதுவரை 3.85 லட்சம் பேர் கொரோனாவால் உயிரிழந்திருக்கின்றனர். இவ்வளவு பேருக்கும் மாநில அரசுகள் இழப்பீடு வழங்குவது என்பது சாத்தியம் இல்லாதது. அதேநேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோருக்கான உதவிகள் செய்ய மத்திய அரசு தயாராகவே இருக்கிறது.

உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை
கொரோனா குறித்த கொள்கை முடிவுகளை மத்திய அரசுதான் மேற்கொள்ள முடியும். உச்சநீதிமன்றத்தால் இந்த கொள்கை முடிவுகளில் தலையிட முடியாது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. மத்திய அரசின் பதில் மனுவைத் தொடர்ந்து இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வருகிறது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக












Click it and Unblock the Notifications