கொரோனாவால் இறந்தவர்களுக்கு ரூ4 லட்சம் இழப்பீடு வழங்க சாத்தியமே இல்லை- உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு
டெல்லி: கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களுக்கு மாநில அரசுகளால் ரூ4 லட்சம் இழப்பீடு வழங்குவது என்பது சாத்தியமற்றது என்று உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
கொரோனாவால் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு நாடு முழுவதும் மாநில அரசுகள் ரூ4 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்பது பொதுநலன் வழக்கு. வழக்கறிஞர்கள் ரீபக் கன்சால், கவுரவ் பன்சால் ஆகியோர் இந்த பொதுநலன் வழக்கை தொடர்ந்தனர்.

183 பக்க பதில்
இதனை விசாரணைக்கு ஏற்ற உச்சநீதிமன்றம் மத்திய அரசு பதிலளிக்க உத்தரவிட்டிருந்தது. இதையடுத்து மத்திய அரசு 183 பக்கங்களுடனான பதில் மனுவை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்தது.

கொரோனா- இயற்கை பேரிடர் மரணங்கள்
அதில், இயற்கை பேரிடர்கள் என்பது குறிப்பிட்ட இடங்களில் மட்டுமே நிகழக் கூடியது. அதற்கு இழப்பீடுகளை வழங்க இயலும். ஆனால் கொரோனா மரணங்கள் என்பது உலகம் முழுவதும் நாள்தோறும் நிகழ்ந்து கொண்டே இருக்கிறது.

இழப்பீடு சாத்தியம் இல்லை
நமது நாட்டில் இதுவரை 3.85 லட்சம் பேர் கொரோனாவால் உயிரிழந்திருக்கின்றனர். இவ்வளவு பேருக்கும் மாநில அரசுகள் இழப்பீடு வழங்குவது என்பது சாத்தியம் இல்லாதது. அதேநேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோருக்கான உதவிகள் செய்ய மத்திய அரசு தயாராகவே இருக்கிறது.

உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை
கொரோனா குறித்த கொள்கை முடிவுகளை மத்திய அரசுதான் மேற்கொள்ள முடியும். உச்சநீதிமன்றத்தால் இந்த கொள்கை முடிவுகளில் தலையிட முடியாது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. மத்திய அரசின் பதில் மனுவைத் தொடர்ந்து இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வருகிறது.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது












Click it and Unblock the Notifications