நந்தவனத்தில் ஓர் ஆண்டி... பாஜகவில் இருந்து வெளியேறுகிறாரா சுப்பிரமணியன் சுவாமி? மீண்டும் ஜனதா கட்சி?
டெல்லி: பாரதிய ஜனதா கட்சியின் ஐடி விங் தலைவர் அமித் மால்வியாவை நாளைக்குள் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று அக்கட்சியின் தலைவர் ஜே.பி. நட்டாவுக்கு ராஜ்யசபா எம்.பி. சுப்பிரமணியன் சுவாமி கெடு விதித்துள்ளார். அமித் மால்வியாவை நீக்காவிட்டால் பாஜகவை விட்டு சுப்பிரமணிய சுவாமி வெளியேற கூடும் என தெரிகிறது.
ஜனதா கட்சியின் தலைவராக இருந்த சுப்பிரமணியன் சுவாமி, அக்கட்சியை பாஜகவில் இணைத்தார். பின்னர் ராஜ்யசபா எம்.பி.யாக பதவி பெற்றார். ஆனாலும் தமக்கு நிதி அமைச்சர் பதவி கிடைக்கும் என்பது சுப்பிரமணியன் சுவாமியின் நீண்டகால கனவு.
நிதி அமைச்சராக அருண்ஜேட்லி இருந்த போதும் பாஜக எம்.பி.யாக இருந்த சுப்பிரமணியன் சுவாமி குடைச்சல் கொடுத்தார். அதேபோல் தற்போதைய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு எதிராகவும் விமர்சனங்களை முன்வைத்து கொண்டே இருக்கிறார் சுப்பிரமணியன் சுவாமி. நிர்மலா சீதாராமனுக்கு பொருளாதாரமே தெரியாது என்பது சுப்பிரமணியன் சுவாமி கருத்து.

அமித் மால்வியா- சு.சுவாமி மோதல்
ஆனாலும் பாஜக தலைவர்கள் சுப்பிரமணியன் சுவாமியை பொருட்டாக மதிப்பதும் இல்லை. இதனிடையே பாஜகவின் ஐடி விங் தலைவர் அமித் மால்வியா மீது தொடர்ச்சியாக சுப்பிரமணியன் சுவாமி குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகிறார். அமித் மால்வியாவின் தூண்டுதலின் பேரில் தம்மை சமூக வலைதளங்களில் அவதூறாக விமர்சிக்கிறார்கள் எனவும் சுப்பிரமணியன் சுவாமி ட்விட்டரில் கொந்தளித்திருந்தார்.

ஜேபி நட்டாவுக்கு சுவாமி கெடு
இதன் உச்சகட்டமாக தற்போது, பாஜக ஐடிவிங் தலைவர் பதவியில் இருந்து அமித் மால்வியாவை நாளைக்குள் நீக்க வேண்டும் என பாஜக தேசியத் தலைவர் நட்டாவுக்கு கெடு விதித்துள்ளார் சுப்பிரமணியன் சுவாமி. இது தொடர்பான தமது ட்விட்டர் பதவியில், அமித் மால்வியாவை நீக்காவிட்டால் பாஜக என்னை பாதுகாக்கவில்லை; பாஜகவில் எனக்கு இடம் இல்லை என்று அர்த்தம். இதனால் அடுத்த கட்டம் குறித்து கட்சி தொண்டர்களின் கருத்துகளை கேட்டு முடிவெடுப்பேன் எனவும் மிரட்டல் விடுத்துள்ளார்.

பாஜகவை விட்டு விலகல்?
சுப்பிரமணியன் சுவாமி புகாரை எல்லாம் மதித்து பாஜக தலைமை நடவடிக்கை எதுவும் எடுக்காது என்றே தெரிகிறது. தமக்கு முக்கியமான பதவி கிடைக்கும் என இலவுகாத்த கிளியாக இருந்த சுப்பிரமணியன் சுவாமிக்கு எதுவும் கிடைக்கவில்லை. இதனால் கடும் அதிருப்தியில் இருக்கும் சுப்பிரமணியன் சுவாமி, அமித் மால்வியா பிரச்சனையை முன்வைத்து பாஜகவை விட்டு வெளியேறக் கூடும் என்றே தெரிகிறது.

ஜனதா கட்சியை மீண்டும் தொடங்கும் சு.சுவாமி
அப்படி பாஜகவில் இருந்து சுப்பிரமணியன் சுவாமி வெளியேறினால் மீண்டும் ஜனதா கட்சி எனும் லெட்டர் பேடு கட்சியையே அவர் தொடர்ந்து நடத்துவார் எனவும் தெரிகிறது. ஜனதா கட்சியில் சுப்பிரமணியன் சுவாமியும் முன்னாள் ஐ.ஏ.எஸ்.. அதிகாரி சந்திரலேகாவும்தான் இருந்தனர். இருந்த இருவரும் இணைந்து மீண்டும் ஜனதா கட்சியின் பெயரால் பாஜகவுக்கு எதிரான பிரசாரங்களை முன்னெடுக்க வாய்ப்பு உள்ளது என்கின்றன டெல்லி தகவல்கள்.
-
பழைய பன்னீர்செல்வமா வாங்க.. அண்ணாமலையை விடாத அமித் ஷா! பாஜக அள்ளிக் கொடுக்கும் ரெண்டு லட்டு! என்ன? -
பாஜக போல் வேண்டாம்.. அண்ணாமலையின் பிளான் என்ன? கிறிஸ்தவர் + இஸ்லாமியர்களையும் அரவணைத்து தனிக்கட்சி -
நம்ப வச்சு கழுத்தறுத்து.. டெல்லிக்கே சென்று சாதித்த நயினார்! அண்ணாமலை ஆங்கிரிக்கு இது தான் காரணம்! -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
பலே ஆளுங்க அண்ணாமலை.. ‘பயோ’வைப் பாருங்களேன்! பிள்ளையையும் கிள்ளி.. தொட்டிலையும் ஆட்டி.. பரபர பாஜக! -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
அண்ணாமலை தலைவராக இருந்தால் இந்த வெற்றி கூட வந்திருக்காது.. பாஜக துணை தலைவர் கேபி ராமலிங்கம் விளாசல் -
பாஜக கொடியை நீக்கிய அண்ணாமலை.. உருவாகும் 'மக்கள் சக்தி இயக்கம்'.. காரில் வரும் புதிய கொடி! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
நேரம் ஒதுக்காத அமித்ஷா.. கிரீன் சிக்னல் கொடுக்காத பாஜக தலைமை! டெல்லியில் காத்திருக்கும் அண்ணாமலை -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான்












Click it and Unblock the Notifications