2024 இல் மோடியே பிரதமர் வேட்பாளரானால்! பாஜக அழிஞ்சிடும்.. சுப்பிரமணியன் சுவாமி பரபரப்பு ட்வீட்
டெல்லி: 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் பிரதமர் வேட்பாளராக மோடி இல்லாவிட்டால் பாஜக வெற்றி பெற்று செழிப்பாக வளரும் இல்லாவிட்டால் அவ்ளவுதான் என பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.
பாஜக மூத்த நிர்வாகி சுப்பிரமணியன் சுவாமி சொந்த கட்சியையே கடுமையாக விமர்சித்து வருகிறார். தமிழக சட்டசபை தேர்தலின் போது தமிழக பாஜக தோற்கும் என தெரிவித்திருந்தார்.

அது போல் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலின் போதும் பாஜக போட்டியிடவில்லை. கூட்டணி தலைமையான அதிமுகவே களம் கண்டது. இதுகுறித்து சுப்பிரமணியன் சுவாமியிடம் கேட்ட போது தமிழகத்தில் பாஜக தனியாக போட்டியிட வேண்டும்.
எல்லா தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்தி போட்டியிட வேண்டும். அப்போதுதான் பாஜக வளர்வதாக அர்த்தம். ராகுல்காந்தியுடன் கமல்ஹாசன் சேர்ந்தால் இருக்கிற வாய்ப்பும் போய்விடும் என சென்னையில் பாஜக மூத்தத் தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார். சொந்த கட்சியாக இருந்தாலும் பாஜகவை சுப்பிரமணியன் சுவாமி கடுமையாக விமர்சிப்பார்.
பொருளாதாரம் குறித்து எதுவுமே தெரியாதவர் நிதியமைச்சர் என நிர்மலா சீதாராமனை விமர்சித்தார். அது போல் கடந்த 2021 ஆம் ஆண்டு தமிழக சட்டசபை தேர்தலின்போது சுப்பிரமணியன் சுவாமி திருப்பதியில் பேசிய போது தமிழகத்தில் பாஜக 2, 3 தொகுதிகளில் வெற்றி பெறும். இல்லாவிட்டால் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறாமல் போகும் என்றார்.
அது போல் கடந்த ஆண்டு இறுதியில் ஒரு ட்வீட் போட்டிருந்தார். அதில் தமிழகத்தில் திமுகவை எதிர்ப்பதற்கு நான் ஒருத்தர் மட்டும் இருப்பதாகவே தெரிகிறது. திமுகவை எதிர்ப்பதில் தமிழ்நாடு பாஜக பூனைக்குட்டிகள். முதல்வர் ஸ்டாலின் கர்ஜித்தால் இந்த பூனைக்குட்டிகள் மியாவ் என மட்டும் சொல்கின்றன. சினிமா கலாச்சாரத்தால் தமிழக பாஜக சீரழிந்துவிட்டது என தெரிவித்திருந்தார். இதன் மூலம் தமிழக பாஜகவை நேரடியாக விமர்சித்திருந்தார்.

இது போல் தொடர்ந்து சொந்த கட்சியினரை கடுமையாக விமர்சித்து வந்த சுப்பிரமணியன் சுவாமி அவ்வப்போது நெட்டிசன்கள் கேட்கும் கேள்விகளுக்கும் பதில் அளிப்பார். அது போல் அவரிடம் ஒரு நெட்டிசன்,அண்மைக்காலமாக நிறைய நிகழ்ச்சிகளில் உங்களை போன்ற தலைவர்களை பாஜக ஓரங்கட்டுவது போல் இருக்கிறதே. எனவே பாஜக வீழ்ச்சியடையும் என குறிப்பிட்டிருந்தார்.
இதற்கு சுப்பிரமணியன் சுவாமி பதிலளிக்கையில் வரும் 2024 ஆம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடி பிரதமர் வேட்பாளராக இல்லாவிட்டால் பாஜக வெல்லும். அதன் பிறகு பாஜக செழிப்பாக வளரும். ஒரு வேளை அவரையே பிரதமர் வேட்பாளராக நிறுத்தினால் முதுகெலும்பற்று கொஞ்சம் கொஞ்சமாக அழியும் கட்சியாக பாஜக இருக்கும் என தெரிவித்துள்ளார்.
-
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
சிங்காநல்லூர் அல்லது கவுண்டம்பாளையம்.. ஒரு தொகுதியை கொடுங்க.. பியூஷ் கோயலிடம் கேட்ட அண்ணாமலை? -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை? -
நடிகை கவுதமியை மீண்டும் ஏமாற்றிய அதிமுக – பாஜக.. ராஜபாளையம் ஜான் பாண்டியனுக்கு ஒதுக்கியதன் பின்னணி -
முடிவுக்கு வரும் பாஜக பஞ்சாயத்து.. தமிழகம் வந்த பியூஸ் கோயல்! அமித் ஷாவுக்கு எடப்பாடி ஓகே சொல்வாரா? -
மதுரை வடக்கில் சரவணனுக்கு சீட் இல்லையா? தாமரை சின்னத்தில் களமிறங்கும் திருமாறன்.. பின்னணியில் மூவர்! -
3 முறை பிரதமர்.. பாஜகவிற்கே எடப்பாடி 27 தான் தந்துள்ளார்.. காங்கிரசுக்கு 28.. திமுகவினர் குமுறல் -
பாமக வரலாற்றிலேயே முதல் முறையாக.. 35 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகக் குறைவான தொகுதிகளில் போட்டி! -
“காருக்குள் வைத்து தவறாக நடக்க முயற்சி”.. பாஜக முக்கிய நிர்வாகி மீது மகளிரணி தலைவி பரபரப்பு புகார் -
Annamalai: அதிமுக அலுவலகத்தில் அண்ணாமலையை காணோமே! ஆதரவாளர்கள் அப்செட்! எடப்பாடி கண்டிஷனா? -
இன்னும் சற்று நேரத்தில் NDA கூட்டணி தொகுதிப் பங்கீடு.. அதிமுக அலுவலகத்துக்கு விரைந்த பியூஷ் கோயல் -
அசைக்க முடியாத சாதனையைச் செய்த மோடி! 8,931 நாள் அரசு பதவி! உலக அளவில் உயரும் டிஜிட்டல் செல்வாக்கு!












Click it and Unblock the Notifications