ஓபிசி பிரிவை போலவே எஸ்சி பிரிவிலும் கிரீமி லேயர் வரையறை வேண்டும்! சுப்ரீம் கோர்ட் முக்கிய கருத்து

Subscribe to Oneindia Tamil

டெல்லி: எஸ்சி பிரிவில் உள் இட ஒதுக்கீடு வழங்குவது தொடர்பான வழக்கில், உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது. உள் இட ஒதுக்கீடு வழங்கலாம் என தீர்ப்பளித்த நீதிமன்றம், ஓபிசி பிரிவில் இருப்பதைப் போலவே எஸ்சி பிரிவினருக்கும் இட ஒதுக்கீட்டில் கிரீமி லேயர் வரைமுறை கொண்டு வர வேண்டும் என்று கூறியுள்ளது.

தமிழ்நாட்டில் கடந்த 2009ம் ஆண்டில் எஸ்சி பிரிவினருக்கான 18% இட ஒதுக்கீட்டில் அருந்ததியர் சாதியினருக்கு 3% உள் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டது.. இந்த உள் இட ஒதுக்கீட்டுக்குத் தடை கோரி புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி வழக்கு தொடர்ந்தார்.

reservation supreme court

அதேபோல பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநிலங்களிலும் எஸ்பி பிரிவினருக்கான இட ஒதுக்கீட்டில் உள் இட ஒதுக்கீடு வழங்கியிருந்தது. இதற்கு எதிராகவும் வழக்கு தொடரப்பட்டன. இதுபோல நாடு முழுக்க 20 மனுக்களை இருந்த நிலையில், அதை ஒரே வழக்காக உச்சநீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றது. இந்த வழக்கு தலைமை நீதிபதியை உள்ளடக்கிய 7 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன பெஞ்சுக்கு இந்த வழக்குகள் மாற்றப்பட்டது.

இந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது. அதாவது பட்டியலினத்தவர்- பழங்குடியினருக்கான இட ஒதுக்கீட்டில் உள் இட ஒதுக்கீடு வழங்க மாநிலங்களுக்கு உரிமை இருப்பதாக நீதிமன்றம் தீர்ப்பளித்தது. மேலும், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மற்றும் எஸ்சி, எஸ்டி பிரிவுகளில் ஒரு தரப்பு மட்டுமே பலன்களை அனுபவித்தால் அதில் தலையிடும் உரிமை மாநில அரசுகளுக்கு உள்ளதாக உச்சநீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்தனர்.

மேலும், இந்த வழக்கில் கிரீமி லேயர் தொடர்பாகவும் 4 நீதிபதிகள் சில கருத்துகளைத் தெரிவித்தனர். அதில், "ஓபிசி பிரிவில் கிரீமி லேயர் என்ற பிரிவு இருக்கிறது. அதேபோல எஸ்சி பிரிவினருக்கான இட ஒதுக்கீட்டிலும் கிரீமி லேயர் வரையறை கொண்டு வர வேண்டும். பட்டியலினத்தைச் சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரியின் மகனையும், ஒரு கிராமத்தில் அரசுப் பள்ளியில் படிக்கும் பின்தங்கிய நிலையில் இருக்கும் ஒருவரையும் ஒரே நிலையில் எப்படி வைத்துப் பார்க்க முடியும்.

எனவே, முதல் தலைமுறையைச் சேர்ந்தவர்கள் இட ஒதுக்கீடு மூலம் உயர்ந்த அந்தஸ்துக்கு வந்துவிட்டால்.. 2ம் தலைமுறையினருக்கு இட ஒதுக்கீடு வழங்கக்கூடாது" என்று நீதிபதிகள் தெரிவித்தனர். 7 நீதிபதிகளைக் கொண்ட அரசியல் சாசன அமர்வில் 4 நீதிபதிகள் இந்தக் கருத்தைத் தெரிவித்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+