ரூ2,000 நோட்டு வாபஸ் வழக்கு.. அவசரமாக விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு
டெல்லி: 2 ஆயிரம் ரூபாய் நோட்டுக்களை வங்கிகளில் அடையாள ஆவணங்கள் இன்றி மாற்றிக்கொள்ளலாம் என்ற அறிவிப்புக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது. இந்த மனுவை அவசரமாக விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுத்து விட்டது.
கடந்த 2016-ம் ஆண்டு நவம்பர் 8-ந் தேதி மத்திய அரசு பணமதிப்பிழப்பு நடவடிக்கை மேற்கொண்டது. அதாவது அப்போது புழக்கத்தில் இருந்த ரூ.500, ரூ.1,000-ம் செல்லாது என்ற அறிவிப்பு வெளியானது. அதன்பிறகு புதிதாக ரூ.2 ஆயிரம் ரூபாய் தாள்கள் அறிமுகம் செய்யப்பட்டது. துவக்கத்தில் இரண்டாயிரம் ரூபாய் நோட்டுக்கள் மத்தியில் அதிகம் புழக்கத்தில் இருந்தாலும் சில ஆண்டுகளில் கணிசமாக புழக்கத்தில் குறைந்தது.

அதேபோல், ஏடிஎம்களில் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுக்கள் கொடுப்பது முற்றிலும் நிறுத்தப்பட்டது. புதிதாக அச்சடிக்கப்படவும் இல்லை. இந்த நிலையில், புழக்கத்தில் உள்ள 2 ஆயிரம் ரூபாய் நோட்டுக்களை திரும்ப பெறுவதாக ரிசர்வ் வங்கி கடந்த வாரம் அறிவித்தது. செப்டம்பர் 30 ஆம் தேதி வரை வங்கிகளில் மாற்றிக்கொள்ளலாம் என்றும் நாள் ஒன்றுக்கு 20 ஆயிரம் வரை மாற்றிக்கொள்ள எந்த ஒரு ஆவணமும் தேவையில்லை எனவும் வங்கிகள் தெரிவித்தன.
2 ஆயிரம் ரூபாய் நோட்டுக்களை எந்த ஒரு ஆவணமும் இன்றி மாற்றிக்கொள்ளலாம் என்ற எஸ்.பி.ஐ வங்கியின் அறிவிப்புக்கு எதிராக டெல்லி உயர் நீதிமன்றத்தில் பொது நல மனு தாக்கல் செய்யப்பட்ட்டது. இந்த மனுவை டெல்லி உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. இந்த நிலையில், டெல்லி உயர் நீதிமன்றத்தின் இந்த உத்தரவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மூத்த வழக்கறிஞர் அஸ்வினி உபத்தாய் மேல் முறையீடு செய்தார்.
இந்த மனு உச்ச நீதிமன்றத்தின் விடுமுறைக்கால அமர்வு நீதிபதிகள் சுதன்ஷூ துலியா மற்றும் கேவி விஸ்வநாதன் ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. இந்த மனுவை அவசர வழக்காக விசாரணைக்கு எடுத்துக்கொள்ள மறுத்த நீதிபதிகள் தலைமை நீதிபதியிடம் முறையிடுமாறு மனுதாரரை அறிவுத்தினர்.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி












Click it and Unblock the Notifications