கனிம வளங்களுக்கு வரி விதிக்க மாநில அரசுகளுக்கு உரிமை உண்டு:- உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: கனிம வளங்களுக்கு வரி விதிக்க மாநில அரசுகளுக்கு அதிகாரம் உண்டு; மத்திய அரசு தரும் ராயல்டி என்பது வேறு; மாநிலங்கள் விதிக்க அதிகாரம் உள்ள வரி என்பது வேறு என உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி டிஒய் சந்திரசூட் தலைமையிலான பெஞ்ச் அதிரடித் தீர்ப்பளித்தது. 9 நீதிபதிகளைக் கொண்ட உச்சநீதிமன்ற பெஞ்ச் விசாரித்த இந்த வழக்கில் 8 நீதிபதிகள் ஒருமித்த தீர்ப்பை வழங்கினர். நீதிபதி நாகரத்தினா மட்டும் மாறுபட்ட தீர்ப்பு வழங்கினார்.

கனிம வளங்களுக்கு மாநில அரசுகள் வரி விதிக்க முடியுமா? இல்லையா? என்பது தொடர்பான வழக்குகள் 30 ஆண்டுகளுக்கு மேலாக நீடிக்கிறது. 1989-ம் ஆண்டு, 2004-ம் ஆண்டும் உச்சநீதிமன்றம் இது தொடர்பான வழக்குகளில் தீர்ப்பு வழங்கி இருந்தது. இந்த இரு தீர்ப்புகளும் முரண்பட்டதாக இருந்தன. அதாவது 1989-ம் ஆண்டு இந்தியா சிமெண்ட்ஸ் vs தமிழ்நாடு வழக்கில் மத்திய அரசு தரும் ராயல்டியும் வரியின் கீழ் வரும் என தீர்ப்பளிக்கப்பட்டிருந்தது. 2004-ம் ஆண்டு மேற்கு வங்க அரசு vs கேசோராம் இண்டஸ்ட்ரீஸ் வழக்கில் ராயல்டி ஒரு வரி என 1989-ல் உச்சநீதிமன்றம் தவறாக குறிப்பிட்டுவிட்டது; ராயல்டி மீதான செஸ்வரி என திருத்தம் செய்தது அத்தீர்ப்பு.

supreme court india

இந்த நிலையில் கனிம வளங்களுக்கு மாநில அரசுகள் வரி விதிக்க உரிமை இல்லை என உத்தரவிடக் கோரி கனிம நிறுவனங்கள் உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தன. இது தொடர்பாக 80-க்கும் மேற்பட்ட மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. 2011-ம் ஆண்டு இந்த மனுக்களை விசாரிக்க தலைமை நீதிபதியை உள்ளடக்கிய 9 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன பெஞ்ச் அமைக்கப்பட்டது.

கனிம வளங்கள் மீதான மாநிலங்களின் உரிமை தொடர்பான இந்த வழக்கின் விசாரணையை 9 நீதிபதிகள் பெஞ்ச் கடந்த மார்ச் மாதம் முதல் நடத்தி வந்தது. இந்த விசாரணைகளின் போது, கனிம வளங்களுக்காக மத்திய அரசு தரும் ராயலடிதான் வரி; ஆகையால் மாநில அரசு தனியாக வரி விதிக்க முடியாது என கனிம வள நிறுவனங்கள் வாதிட்டன. மத்திய அரசு தரப்பிலோ, கனிம வளங்கள் மீது மாநில அரசுகள் வரி விதிக்க தொடங்கிவிட்டால் அவற்றின் விலை மிக கடுமையாக உயர்ந்து விடும்; மாநில அரசுகளுக்கு அப்படியான அதிகாரமே இல்லை என வாதிட்டது.

இந்த வழக்கில் இன்று தலைமை நீதிபதி டிஒய் சந்திரசூட் தலைமையிலான 9 நீதிபதிகள் கொண்ட பெஞ்ச் தீர்ப்பளித்தது. 9 நீதிபதிகளில் 8 பேர், கனிம வளங்கள் மீது வரி விதிக்க மாநிலங்களுக்கு உரிமை உண்டு என தீர்ப்பளித்தனர். கனிம வளங்களுக்காக மத்திய அரசிடம் இருந்து மாநிலங்கள் பெறுகிற ராயல்டி தொகையை வரியாக கருத முடியாது; கனிம வளம் உள்ள நிலத்தின் மீதான வரி விதிக்கும் உரிமை மாநில அரசுக்குதான் உண்டு. நிலம் என குறிப்பிட்டாலே கனிம வளம் உள்ள நிலத்தையும் சேர்த்துதான் குறிக்கும் என 8 நீதிபதிகள் ஒருமித்த தீர்ப்பளித்தனர். நீதிபதி நாகரத்தினா மட்டும் மாறுபட்ட தீர்ப்பளித்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+