Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மத்திய பாஜக அரசின் சிஏஏவுக்கு எதிராக சாட்டையை சுழற்றுமா? உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: மத்திய பாஜக அரசின் சி.ஏ.ஏ. எனப்படும் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உள்ளிட்டவை தொடர்ந்த வழக்கை உச்சநீதிமன்றம் விசாரிக்கிறது. இன்றைய விசாரணையில் சி.ஏ.ஏ.வுக்கு எதிராக உச்சநீதிமன்றம் சாட்டையை சுழற்றுமா? என்பது பெரும் எதிர்பார்ப்பு.

இந்தியாவில் 11 ஆண்டுகளுக்கு மேலாக வசிக்கும் வெளிநாட்டவர் இந்திய குடியுரிமை பெறலாம் என்பது 1955-ம் ஆண்டு சட்டம். இந்த சட்டத்தில்தான் மத்தியில் ஆளும் பாஜக அரசு திருத்தம் கொண்டு வந்தது. அதாவது பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் நாட்டில் வசிக்கும் இந்துக்கள், கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள், பவுத்தர்கள், சமணர்கள், பார்சி இனத்தவர் எந்த ஆவணமும் இல்லாமல் இந்தியாவில் 6 ஆண்டுகள் வசித்தாலே இந்திய குடியுரிமை பெற முடியும் என்பது மத்திய பாஜக அரசு 2019-ல் கொண்டு வந்த திருத்தம். 2014-ம் ஆண்டு டிசம்பர் 31-ந் தேதிக்கு முன் குடியேறியவர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்கவும் இத்திருத்தம் வகை செய்கிறது. இந்த குடியுரிமை திருத்தச் சட்டம் 2019-ம் ஆண்டு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.

Supreme Court to hear pleas against Citizenship Act CAA rules today

மத்திய பாஜக அரசின் இந்த குடியுரிமை திருத்த சட்டம் என்பது மதத்தின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. வங்கதேசம், பாகிஸ்தான், பாகிஸ்தான் நாட்டின் முஸ்லிம்களுக்கு மட்டும் இந்திய குடியுரிமையை மறுக்கிறது என்பது பொதுவான எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டு. அதேபோல இலங்கையில் வசிக்கும் தமிழர்களும் இந்த குடியரிமை திருத்த சட்டத்தால் புறக்கணிக்கப்பட்டுள்ளனர் என்பது தமிழக கட்சிகளின் நிலைப்பாடு.

மத்திய அரசின் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக நாடு முழுவதும் பெரும் போராட்டங்கள் வெடித்தன. கொரோனா காலம் என்பதால் அப்போது போராட்டங்கள் ஒத்திவைக்கப்பட்டன. மேலும் சிஏஏவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்குகளும் தொடரப்பட்டன.

இந்நிலையில் கடந்த மாதம் குடியுரிமை திருத்த சட்டம் அமல்படுத்தப்படும் என மத்திய அரசு திடீரென அறிவித்தது. இந்த சட்டத்தைச் செயல்படுத்துவதற்கான விதிமுறைகளையும் மத்திய அரசு வெளியிட்டது. இதனால் சிஏஏ விவகாரம் பெரும் புயலைக் கிளப்பிவிட்டது. தமிழ்நாடு அரசு சிஏஏவை அமல்படுத்தாது என முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். ஆனால் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவோ, சிஏஏ அமல்படுத்த முடியாது என சொல்லும் அதிகாரம் மாநிலங்களுக்கு இல்லை என்றார்.

சிஏஏவுக்கு எதிராக ஏற்கனவே 200-க்கும் மேற்பட்ட மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்களுடன் கேரளா மாநில அரசும் இணைந்து சிஏஏவுக்கு எதிராக மனுத் தாக்கல் செய்தது. முஸ்லிம் லீக், இடதுசாரிகள் என பல தரப்பும் உச்சநீதிமன்றத்தில் சிஏஏவுக்கு எதிராக வழக்குகளை தொடர்ந்தன. இந்த வழக்குகளை விசாரித்த உச்சநீதிமன்றம் மத்திய அரசு பதிலளிக்க நோட்டீஸ் அனுப்பியிருந்தது. இந்த வழக்குகளின் விசாரணை இன்று உச்சநீதிமன்றத்தில் நடைபெற உள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+