சும்மா வீட்ல இருக்காங்கன்னு சொல்லாதீங்க! இல்லத்தரசிகளின் உழைப்புக்கு மாதம் ரூ.30,000 மதிப்பு! சூப்பர்!
டெல்லி: வீட்டைக் கவனிப்பது, குழந்தைகளை வளர்ப்பது, குடும்ப உறுப்பினர்களின் தேவைகளை பூர்த்தி செய்வது என தினமும் ஓய்வில்லாமல் உழைக்கும் இல்லத்தரசிகளின் பணிக்கு பொருளாதார மதிப்பு அளிக்கப்பட வேண்டுமா என்ற விவாதம் நீண்ட காலமாக இருந்து வருகிறது. இந்த நிலையில், இல்லத்தரசிகளின் உழைப்பை அங்கீகரிக்கும் வகையில் உச்சநீதிமன்றம் முக்கிய தீர்ப்பு ஒன்றை வழங்கியுள்ளது.
சாலை விபத்தில் உயிரிழக்கும் இல்லத்தரசிகளுக்கான இழப்பீட்டை கணக்கிடும்போது, அவர்கள் வீட்டில் செய்த பணிகளின் மதிப்பை மாதம் குறைந்தபட்சம் ரூ.30,000 எனக் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று உச்சநீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது.

மேலும், இல்லத்தரசிகள் வெறும் குடும்பப் பொறுப்புகளை மேற்கொள்பவர்கள் மட்டுமல்ல, "தேசத்தை உருவாக்குபவர்கள்" என்ற அங்கீகாரத்திற்குத் தகுதியானவர்கள் என்றும் உச்ச நீதிமன்றம் ஒரு வழக்கின் தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளது.
பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த ரேஷ்மா என்ற இல்லத்தரசி, 2001-ம் ஆண்டு நடந்த சாலை விபத்தில் உயிரிழந்ததைத் தொடர்ந்து அவரது குடும்பத்தினர் இழப்பீடு கோரி நீதிமன்றத்தை அணுகியிருந்தனர். கணவர் மற்றும் மூன்று குழந்தைகள் தொடர்ந்த இந்த வழக்கு பல ஆண்டுகள் நீதிமன்றங்களில் நிலுவையில் இருந்து, சுமார் 20 ஆண்டுகளுக்குப் பிறகே இறுதி கட்ட விசாரணைக்கு வந்தது.
இந்த வழக்கை நீதிபதிகள் சஞ்சய் கரோல் மற்றும் என். கோடீஸ்வர் சிங் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது. அப்போது 20 ஆண்டுகால தாமதம் குறித்தும் உச்சநீதிமன்றம் கவலை தெரிவித்துள்ளது. சாலை விபத்து இழப்பீட்டு வழக்குகள் நீண்ட காலம் நிலுவையில் இருக்கக் கூடாது என்றும், இயன்றவரை ஓராண்டுக்குள் விசாரணையை முடித்து இழப்பீடு வழங்கும் நடவடிக்கையை நீதிமன்றங்கள் உறுதி செய்ய வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளது.
இதுவரை பல வழக்குகளில், இல்லத்தரசிகளின் வருமானத்தை கணக்கிடும்போது திறன்மிக்க தொழிலாளர்களின் ஊதியத்துடன் ஒப்பிட்டு மதிப்பீடு செய்யும் நடைமுறை பின்பற்றப்பட்டு வந்தது. ஆனால் அந்த அணுகுமுறை, வீட்டுப் பராமரிப்பு மற்றும் குடும்ப நிர்வாகப் பணிகளின் உண்மையான பொருளாதார மதிப்பை பிரதிபலிக்கவில்லை என்று நீதிபதிகள் சுட்டிக்காட்டினர்.
இந்த தீர்ப்பில், வீட்டை நிர்வகிப்பது என்பது சாதாரண பணியாக கருத முடியாது என்றும், குடும்பத்தின் ஒட்டுமொத்த செயல்பாட்டிற்கும் இல்லத்தரசிகள் ஆற்றும் பங்களிப்பு அளவிட முடியாதது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. அவர்கள் செய்யும் பணிகளுக்கு நேரடி ஊதியம் வழங்கப்படவில்லை என்பதற்காக, அந்த உழைப்பை குறைத்து மதிப்பிடக் கூடாது என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
இல்லத்தரசிகளின் பங்களிப்பு குறித்து உச்சநீதிமன்றம் ஏற்கனவே பல வழக்குகளில் கருத்து தெரிவித்துள்ளது. குடும்பத்தில் அவர்கள் மேற்கொள்ளும் சமையல், குழந்தை பராமரிப்பு, முதியோர் கவனிப்பு, வீட்டு நிர்வாகம் உள்ளிட்ட பணிகள் அனைத்தும் சமூக மற்றும் பொருளாதார ரீதியாக மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தவை என்றும் நீதிமன்றம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.
இந்த தீர்ப்பின் மூலம், இல்லத்தரசிகளின் உழைப்புக்கு உரிய மதிப்பு அளிக்கப்பட வேண்டும் என்ற கருத்து மேலும் வலுப்பெற்றுள்ளது. குறிப்பாக சாலை விபத்து இழப்பீட்டு வழக்குகளில், குடும்பத் தலைவிகளின் உழைப்பை பண மதிப்பில் கணக்கிட்டு இழப்பீடு வழங்கும் நடைமுறைக்கு இந்த தீர்ப்பு முக்கிய வழிகாட்டுதலாக அமையும் என்று சட்ட நிபுணர்கள் கருதுகின்றனர். நீண்ட காலமாக பொருளாதார மதிப்பீட்டில் புறக்கணிக்கப்பட்டு வந்த இல்லத்தரசிகளின் பங்களிப்பை அங்கீகரிக்கும் வகையில் வந்துள்ள இந்த தீர்ப்பு, பெண்களின் உழைப்புக்கு சமூக அங்கீகாரத்தையும், சட்ட ரீதியான முக்கியத்துவத்தையும் வழங்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பாக பார்க்கப்படுகிறது.
-
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா?












Click it and Unblock the Notifications