அதிருப்தி எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்ய சபாநாயகரிடம் மனு
டெல்லி: கர்நாடக அதிருப்தி எம்எல்ஏக்கள் தொடர்ந்த வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது.
கர்நாடகாவில் காங்கிரஸ்-மதசார்பற்ற ஜனதாதளம் கட்சிகளின் கூட்டணி ஆட்சி நடைபெறுகிறது. இதனிடையே, அடுத்தடுத்து, 16 எம்எல்ஏக்கள், தங்கள் பதவிகளை ராஜினாமா செய்தனர். 13 பேர் காங்கிரசையும், 3 பேர் மஜத கட்சியையும் சேர்ந்தவர்கள். ஆனால் இதுவரை இவர்கள் ராஜினாமா கடிதங்களை சபாநாயகர் ஏற்கவில்லை.
இதையடுத்து முதலில் 10 எம்எல்ஏக்களும், பின்னர் 5 எம்எல்ஏக்களும், சபாநாயகர் தங்கள் ராஜினாமா கடிதங்களை ஏற்க வேண்டும் என்று கோரி சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். சபாநாயகர், முதல்வர், எம்எல்ஏக்கள் தரப்பு வாதங்களை கேட்டறிந்த சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி அமர்வு இன்று காலை 10.30 மணிக்கு தீர்ப்பு வழங்கியது.
அதிருப்தி எம்எல்ஏக்கள் ராஜினாமா விவகாரத்தில் எப்போது முடிவெடுக்க வேண்டும் என்பது சபாநாயகர் அதிகார வரம்பிற்கு உட்பட்டது. அதேநேரம், ராஜினாமா கொடுத்த எம்எல்ஏக்கள் சபாநாயகர் முடிவெடுக்கும் வரை சட்டசபைக்கு செல்ல வேண்டும் என்று யாரும் வற்புறுத்த முடியாது என்று அதிரடி தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. எம்எல்ஏக்களுக்கு சுதந்திரம் கொடுக்கப்பட்டுள்ளதால், கர்நாடக அரசு சிக்கலில் சிக்கியுள்ளது.
இதுதொடர்பான உடனடி அப்டேட்டுகளுக்கு, இந்த லைவ் பக்கத்தில் இணைந்திருங்கள்.
#WATCH Karnataka CM HD Kumaraswamy declines to comment, when asked about Supreme Court's verdict on Karnataka rebel MLAs. #Karnataka pic.twitter.com/aR1ww6aNgl
— ANI (@ANI) July 17, 2019

-
பிரியங்காவால் கர்நாடகா முதல்வர் பதவியை இழக்கும் சித்தராமையா.. டிகே சிவக்குமார் வென்றது இப்படித்தான் -
"முதல்வர் பதவி ராஜினாமா".. அறிவித்ததுமே சித்தராமையா காலில் விழுந்து ஆசி வாங்கிய டிகே சிவக்குமார் -
டி.கே.சிவகுமாருக்கு செக்! கடைசி நேரத்தில் சாதி வாரிக் கணக்கெடுப்பு அறிக்கையை பெற்ற சித்தராமையா! -
டி.கே.சிவக்குமார் Vs சித்தராமையா.. சர்ப்ரைஸ் என்ட்ரியாக வரும் கார்கே.. கர்நாடகாவில் அரசியல் சுனாமி! -
"தமிழகம் என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளட்டும்!" மேகதாது விவகாரத்தில்.. வாயை விட்ட டிகே சிவக்குமார் -
இன்பதுரை எடுத்த சுப்ரீம் ஆயுதம்? சபாநாயகர் போட்ட 5 நிமிட உத்தரவு! சுப்ரீம் கோர்ட்டில் சிக்கும் தவெக? -
ஒருவழியாக இறங்கி வந்த சித்தராமையா.. ஆனால் அடுத்த நொடியே வைத்த செக்! உச்சக்கட்ட டென்ஷனில் சிவக்குமார் -
69% இடஒதுக்கீடு வழக்கை முடித்து வைத்தது உச்சநீதிமன்றம்.. மனுக்கள் தள்ளுபடி.. என்ன நடந்தது? -
உச்ச நீதிமன்ற நீதிபதியாகும் கோவை மூத்த பெண் வழக்கறிஞர் மோகனா! யார் இவர்? -
எல்லாம் சரிதான்! SIRல் தவறு எதுவும் இல்லை! எல்லா மனுக்களையும் மொத்தமாக தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம் -
விஜய்க்கு முதல் அக்னி பரீட்சை.. காரணம் வேற யாரும் இல்லை காங்கிரஸ் தான்.. அடுத்து என்ன? -
தமிழ்நாடு 69% இட ஒதுக்கீடு.. உச்சநீதிமன்றத்தில் இன்று முக்கிய விசாரணை.. விஜய்க்கு பெரிய சவால்












Click it and Unblock the Notifications