சுதேசின்னா வெளிநாட்டு பொருட்களை புறக்கணிக்கனும் என்பது அவசியம் இல்லை- ஆர்.எஸ்.எஸ். மோகன் பகவத்
டெல்லி: சுதேசி கொள்கை என்றால் வெளிநாட்டுப் பொருட்களை புறக்கணிக்க வேண்டும் என புரிந்து கொள்ள தேவை இல்லை என்று ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் கூறியுள்ளார்.
கொரோனா லாக்டவுன் காலத்தில் பிரதமர் மோடி தற்சார்பு கொள்கையை வலியுறுத்தி வருகிறார். அண்மையில் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் 101 ராணுவ சாதனங்கள், தளவாடஙக்ளை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்வதற்கு தடை விதிப்பதாகவும் இது தற்சார்பு கொள்கையை வலிமையாக்கும் என கூறியிருந்தார்.

இதனிடையே இணையவழி புத்தக வெளியீட்டு விழா ஒன்றில் பங்கேற்ற ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத், சுதேசி தொடர்பாக விளக்கம் அளித்துள்ளார். மோகன் பகவத் கூறியிருப்பதாவது:
ஒவ்வொரு வெளிநாட்டுப் பொருளையும் புறக்கணிப்பதுதான் சுதேசி என்பது அர்த்தம் அல்ல. ஒருநாட்டில் குறிப்பிட்ட தொழில்நுட்பம் அல்லது பொருட்கள் கிடைக்காமல் போகும் நிலையில் வெளிநாடுகளில் இருந்து அவற்றை பெற்றுக் கொள்ளலாம்.
கொரோனா லாக்டவுன் காலமானது, உலகமயமாக்கல் கொள்கையை கேள்விக்குறியாக்கி உள்ளது. ஒற்றை பொருளாதார மாதிரி என்பது அனைத்து காலங்களுக்கும் பொருந்தக் கூடியதாக இல்லை. வெளிநாடுகளின் பொருட்களை புறக்கணிப்பதற்கு பதில் உள்நாட்டில் அவற்றை மேம்படுத்துவதற்கு நாம் முன்னுரிமை தரவேண்டும்.
வெளிநாடுகளில் இருந்து பெறப்படும் தொழில்நுட்பத்தை நமது தேசத்திற்கேற்ப மறுவடிவமைப்பு செய்து கொள்ள வேண்டும். சுதந்திரத்துக்குப் பின்னர் நமது தேசத்தின் கொள்கைகள் மேற்கத்திய நாடுகளால்தான் தீர்மானிக்கப்பட்டு வருகிறது. இதனால் உள்நாட்டுப் பொருட்கள், தொழில்நுட்பத்தை மேற்கத்திய பொருட்கள் அழித்துவிட்டன.
மத்திய அரசின் புதிய பொருளாதார கொள்கையானது தற்சார்பு பொருளாதாரத்தை முன்னிறுத்துகிறது. அந்த நோக்கம் மிக சரியானது. இவ்வாறு மோகன் பகவத் பேசினார்.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன்












Click it and Unblock the Notifications