காவிரி: கர்நாடகா தர வேண்டியது 53 டிஎம்சி- வந்தது 15 டிஎம்சி.. உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு வழக்கு!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: காவிரியில் கர்நாடகா அரசு தமிழ்நாட்டுக்கு 53 டி.எம்.சி. நீர் திறந்துவிட வேண்டிய நிலையில் வெறும் 15 டி.எம்.சி. நீர் மட்டுமே திறந்துவிட்டுள்ளதாக உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு வழக்கு தொடர்ந்துள்ளது.

காவிரியில் ஒவ்வொரு மாதமும் தமிழ்நாட்டுக்கு கர்நாடகா எவ்வளவு காவிரி நீரை திறந்துவிட வேண்டும் என்பது ஏற்கனவே வரையறை செய்யப்பட்டுள்ளது. காவிரி நடுவர் மன்றத்தின் இந்த உத்தரவை உச்சநீதிமன்றமும் உறுதி செய்திருக்கிறது.

Tamil Nadu Karnataka Water War moves to Supreme Court

தமிழ்நாட்டுக்கு ஆகஸ்ட் 9-ந் தேதி வரை கர்நாடகா அரசு, காவிரியில் 53 டி.எம்.சி. நீரை திறந்துவிட்டிருக்க வேண்டும். ஆனால் தமிழ்நாட்டுக்கு வெறும் 15 டி.எம்.சி. நீரைத்தான் கர்நாடகா திறந்துவிட்டிருந்தது.

டெல்லியில் அண்மையில் நடைபெற்ற காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்திலும் இதனை தமிழ்நாட்டு அதிகாரிகள் சுட்டிக்காட்டி இருந்தனர். தமிழ்நாட்டுக்கு காவிரியில் தரப்பட வேண்டிய 37.9 டிஎம்சி நீரை கர்நாடகா உடனே திறந்துவிட வேண்டும் எனவும் தமிழ்நாடு அரசு தரப்பில் வலியுறுத்தப்பட்டது. ஆனால் தமிழ்நாட்டின் கோரிக்கை ஏற்கப்படாததால் காவிரி ஆணையக் கூட்டத்தில் இருந்து தமிழ்நாட்டு பிரதிநிதிகள் வெளிநடப்பும் செய்தனர்.

இதனைத் தொடர்ந்து தமிழ்நாடு அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் இன்று கர்நாடகாவுக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளது. அதில், தமிழ்நாட்டுக்கான காவிரி நீரின் அளவை கர்நாடகாவை முழுமையாக திறந்துவிடவில்லை. காவிரி ஆணையமும் இதற்கான உத்தரவை பிறப்பிக்கவில்லை. இதனால் காவிரி டெல்டாவில் பயிர்கள் கருகி வருகின்றன. இதனால் தமிழ்நாட்டுக்கு திறந்துவிட வேண்டிய எஞ்சிய 37.9 டி.எம்.சி. காவிரி நீரை கர்நாடகா திறந்துவிட உத்தரவிட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+