ஆமாம்..விமானத்தின் அவசரகால கதவை தற்செயலாக திறந்தார் பாஜக எம்பி தேஜஸ்வி.. ஒப்புக் கொண்ட மத்திய அரசு!
இண்டிகோ விமானத்தின் அவசகார கதவை பாஜக எம்பி தேஜஸ்வி சூர்யா திறந்தது தொடர்பாக மத்திய அரசு விளக்கம் தந்துள்ளது.
டெல்லி: இண்டிகோ விமானத்தின் அவசரகால கதவை எதிர்பாராதவிதமாகத்தான் பாஜக எம்பி தேஜஸ்வி சூர்யா திறந்துவிட்டார் என நாடாளுமன்றத்தில் மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.
கர்நாடகா மாநில பாஜக எம்பி தேஜஸ்வி சூர்யா. இவரது பல கருத்துகள் நாடு முழுவதும் பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்தி இருக்கிறது. கடந்த ஆண்டு டிசம்பர் 10-ந் தேதி தேஜஸ்வி சூர்யாவும் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலையும் சென்னையில் இருந்து திருச்சிக்கு இண்டிகோ விமானத்தில் பயணித்தனர். இந்த பயணத்தின் போது எமர்ஜென்சி கால- அவசரகால கதவை தேஜஸ்வி சூர்யா திறந்ததால் பயணிகள் பெரும் பதற்றமடைந்தனர். இதனால் 2 மணிநேரம் விமானம் தாமதமாக புறப்பட்டது. மேலும் தங்களது செயலுக்கு தேஜஸ்வி சூர்யா மன்னிப்பு கேட்டார் என தகவல்கள் வெளியாகின.

தமிழ்நாடு அமைச்சர் செந்தில்பாலாஜி இந்த தகவலை முதலில் தமது ட்விட்டர் பக்கத்தில் பகிரங்கப்படுத்தினார். இது தொடர்பாக தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை பல்வேறு விதமான கருத்துகளை கூற அதுவும் சர்ச்சையானது. சுமார் 1 மாத காலத்துக்கும் மேலாக இந்த விமான பயண சர்ச்சை நீடித்தது. காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் இந்த விவகாரத்தில் பாஜகவை கடுமையாக விமர்சித்தன.
இதன் பின்னர் மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஜோதிராதித்யா சிந்தியா, பாஜக எம்பி தேஜஸ்வி சூர்யா விமானத்தின் கதவை தவறுதலாகவே திறந்துவிட்டார் என ஒரு விளக்கம் தந்தார். அத்துடன் தமது செயலுக்காக தேஜஸ்வி சூர்யா மன்னிப்பும் கேட்டார் எனவும் சுட்டிக்காட்டி இருந்தார் மத்திய அமைச்சர் ஜோதிராதித்யா சிந்தியா. இதனால் ஒருவழியாக இந்த விமான பஞ்சாயத்து முடிந்தது.

இந்நிலையில் நாடாளுமன்றத்தில் விமானத்தின் அவசரகால கதவை தேஜஸ்வி சூர்யா திறந்தது தொடர்பாக திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் எம்பி லாலாராய் கேள்வி எழுப்பினார். இதற்கு மத்திய இணை அமைச்சர் விகே சிங் பதிலளித்துள்ளார். அந்த பதிலில், விமானத்தின் அவசரகால கதவை தேஜஸ்வி சூர்யா தற்செயலாகவே திறந்தார். அவர் வேண்டும் என்றே அவசரகால கதவை திறக்கவில்லை. தாம் அப்படி திறகக் நேரிட்டதற்காக தேஜஸ்வி சூர்யா அப்போதே பைல்ட் உள்ளிட்டோரிடம் மன்னிப்பு கேட்டுக் கொண்டார். உரிய விதிகளின் படி இத்தகைய சம்பவம் பதிவும் செய்யப்பட்டது எனவும் மத்திய இணை அமைச்சர் விகே சிங் விளக்கம் தந்தார்.
-
இன்னும் சற்று நேரத்தில் NDA கூட்டணி தொகுதிப் பங்கீடு.. அதிமுக அலுவலகத்துக்கு விரைந்த பியூஷ் கோயல் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
TN Election: 1-ல்தான் பாஜக ஜெயிக்குமா? திமுக 180-ஆ? டெல்லியை அதிர வைத்த ANS அதிர்ச்சி சர்வே! -
முடிவுக்கு வரும் பாஜக பஞ்சாயத்து.. தமிழகம் வந்த பியூஸ் கோயல்! அமித் ஷாவுக்கு எடப்பாடி ஓகே சொல்வாரா? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
பொறுப்பு வழங்கப்பட்டால்தானே செயல்பட முடியும்! முடிவுக்கு வரும் பாஜகவுடனான சரத்குமாரின் பயணம்? -
பாஜகவில் இருந்து விலகலா.. ஆதரவாளர்களுடன் ஆலோசனை குறித்து சரத்குமார் பரபரப்பு விளக்கம் -
ஆதரவாளர்களுடன் சரத்குமார் ரகசிய ஆலோசனை.. மீண்டும் உதயமாகிறதா சமக.. அதிர்ச்சியில் பாஜக -
புதுச்சேரியில் 9 தொகுதிகளுக்கு பாஜக வேட்பாளர்கள் அறிவிப்பு.. ஜான் குமாருக்கு மீண்டும் சீட்! -
மம்தாவுக்கு குடைச்சலை கொடுக்கும் பாஜக.. மேற்கு வங்கத்தில் மலரும் தாமரை? 7 முக்கிய பாயிண்டுகள்











Click it and Unblock the Notifications