கடைசி வரை ஓடி கரைசேர்ந்ததில்.. கடைசியிலிருந்து 10வது இடம்! அண்ணாமலை ஓடிய ட்ரையத்லான்.. ரிசல்ட் என்ன?
டெல்லி: கோவாவில் நடைபெற்ற சவால் மிகுந்த அயர்ன்மேன் (Iron Man) 70.3 போட்டியில், பெங்களூரு தெற்கு தொகுதி எம்.பி. தேஜஸ்வி சூர்யா மற்றும் தமிழக பாஜக மூத்த தலைவர் கே. அண்ணாமலை (Annamalai) ஆகியோர் இலக்கு நேரத்திற்குள் பந்தயத்தை வெற்றிகரமாக முடித்தனர். இந்தச் சவால், 1.9 கி.மீ நீச்சல், 90 கி.மீ சைக்கிள் ஓட்டுதல், மற்றும் 21.1 கி.மீ ஓட்டம் ஆகியவற்றை உள்ளடக்கியது.
போட்டியாளர்கள் மொத்தமாக 8.5 மணி நேரத்திற்குள் பந்தயத்தை முடிக்க வேண்டும். ஒவ்வொரு பிரிவிற்கும் குறிப்பிட்ட இடைநிலை நேரக் கட்டுப்பாடுகளும் உண்டு. இதில் கலந்துகொண்ட 1,300 வீரர்களில், 805 பேர் நிர்ணயிக்கப்பட்ட நேரத்திற்குள் பந்தயத்தை நிறைவு செய்தனர். அண்ணாமலை தனது முதல் முயற்சியிலேயே 8 மணி 13 நிமிடங்கள் 55 வினாடிகளில் முடித்தார்.

அண்ணாமலை சொன்னது என்ன?
கடந்த ஆண்டு பங்கேற்ற தேஜஸ்வி சூர்யா, இந்த ஆண்டு 7 மணி 49 நிமிடங்கள் 6 வினாடிகளில் பந்தயத்தை நிறைவு செய்தார். இந்த வெற்றி குறித்து அண்ணாமலை பேசுகையில், "இந்த ஆண்டு தொடக்கத்தில், கோவாவில் நடந்த அயர்ன்மேன் 70.3 போட்டிக்குத் தயாராகும் போது, எனது உடற்பயிற்சி இலக்குகளைத் தொடர்வதற்கும், மன உறுதியை வளர்ப்பதற்கும் முடிவு எடுத்தேன். ஒரு விளையாட்டு வீரரின் மனநிலையை வளர்த்துக் கொள்வதற்கும் எனக்கு நானே ஒரு உறுதிமொழி எடுத்தேன்.
கட்டுப்பாடும், விடாமுயற்சியும் இருந்தால், சாத்தியமற்றதாகத் தோன்றுவதையும் வெல்ல முடியும் என்று நான் நம்பினேன். இந்த போட்டி முடித்த பிறகு, இந்தச் சவால் எனது உடல் வலிமையை மட்டுமல்ல, மனதின் வலிமையையும் சோதித்தது என்பதை நான் பணிவுடன் ஒப்புக்கொள்கிறேன்" என்று கூறினார்.
இந்த வெற்றியாளர்களான இரண்டு பாஜக தலைவர்களுக்கும் பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்தார். தனது சமூக வலைதளப் பதிவில், "கோவாவில் இன்று நடைபெற்ற அயர்ன்மேன் 70.3 போன்ற நிகழ்வுகளில் இளைஞர்கள் அதிக அளவில் பங்கேற்பதைக் கண்டு மகிழ்ச்சி அடைகிறேன். இத்தகைய நிகழ்வுகள் #FitIndia இயக்கத்திற்கு பங்களிக்கின்றன
இதில் பங்கேற்ற அனைவருக்கும் வாழ்த்துகள். அயர்ன்மேன் ட்ரையத்லானை வெற்றிகரமாக முடித்த நமது இளம் கட்சி சகாக்களான அண்ணாமலை மற்றும் தேஜஸ்வி சூர்யா ஆகியோர் மத்தியில் இருப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்" என்று மோடி குறிப்பிட்டிருந்தார்.
அண்ணாமலை பெற்ற இடம் என்ன?
கோவாவில் நடந்த சவாலான அயர்ன்மேன் 70.3 பந்தயத்தில், பெங்களூரு தெற்கு நாடாளுமன்ற உறுப்பினர் தேஜஸ்வி சூர்யா மற்றும் தமிழக பா.ஜ.க.வின் மூத்த தலைவர் கே. அண்ணாமலை ஆகியோர் இலக்கு நேரத்திற்குள் பந்தயத்தை வெற்றிகரமாக முடித்தனர். இந்தப் பந்தயம் 1.9 கி.மீ நீச்சல், 90 கி.மீ சைக்கிள் ஓட்டுதல் மற்றும் 21.1 கி.மீ ஓட்டம் ஆகியவற்றை உள்ளடக்கியது.
இந்த அயர்ன்மேன் போட்டியில் மொத்தம் 805 பேர் பங்கேற்றனர். இதில், 40 முதல் 44 வயதுக்குட்பட்ட பிரிவில் 121 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். இந்த வயதுப் பிரிவில் அண்ணாமலை 114வது இடத்தைப் பிடித்தார், அதாவது இந்தப் பிரிவில் கடைசி எட்டு இடங்களில் இவரும் ஒருவர்.
மொத்தம் பங்கேற்ற 805 பேரில் 684 பேர் ஆண்கள். இதில் அண்ணாமலை 639வது இடத்தைப் பிடித்தார். மேலும், போட்டியில் பங்கேற்ற 121 பெண்களில் 116 பேர் அண்ணாமலையை விட முன்னணியில் இருந்தனர். அவரைத் தாண்டி வெறும் ஐந்து பெண்கள் மட்டுமே பந்தயத்தை முடித்தனர். இதேபோல், 45 ஆண்கள் அண்ணாமலைக்குப் பின்னால் பந்தயத்தை நிறைவு செய்தனர். ஒட்டுமொத்தமாக, அண்ணாமலை 755வது இடத்தைப் பிடித்தார். அதாவது மொத்த போட்டியில் கடைசியிலிருந்து 10வது இடத்தை அண்ணாமலை பிடித்தார்.












Click it and Unblock the Notifications