ஹை அலர்ட் கொடுத்த உளவுத்துறை! நாடு முழுவதும் 3 நகரங்களுக்கு ஸ்கெட்ச்! உஷாரான போலீஸ்
டெல்லி: உலகம் முழுவதும் இன்று தொடங்கி அடுத்த 8 நாட்களுக்கு யூதர்கள் 'ஹனுக்கா' எனும் தங்களது புனித பண்டிகையை கொண்டாடுகின்றனர். இந்நிலையில் ஆஸ்திரேலியாவில் யூதர்களை குறிவைத்து துப்பாக்கிச்சூடு சம்பவம் நடைபெற்றிருக்கிறது. இந்தியாவில் யூதர்களை குறி வைத்து தீவிரவாத தாக்குதல் நடத்தப்படலாம் என்று உளவுத்துறை எச்சரித்துள்ளது. எனவே போலீசார் அலர்ட் செய்யப்பட்டிருக்கின்றனர்.
டெல்லி, பெங்களூரு, மும்பை ஆகிய நகரங்களிலுள்ள யூத நிறுவனங்களை குறிவைத்து பெரிய தாக்குதலை நடத்த பயங்கரவாத அமைப்புகள் திட்டமிட்டிருப்பதாக உளவுத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. உளவுத்துறை தகவல்கள் மிகவும் தீவிரமானதாகக் கருதப்படுவதால், குறிப்பிட்ட முக்கியமான இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

இன்று முன்னதாக, அவுஸ்திரேலியாவின் சிட்னியில் உள்ள பாண்டி கடற்கரையில், யூத மத நிகழ்வு ஒன்றின்போது, துப்பாக்கி ஏந்திய இரண்டுபேர் கண்ணில் தென்பட்டவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினர். யூத பண்டிகையின் தொடக்கத்தைக் கொண்டாட நூற்றுக்கணக்கானோர் கடற்கரையில் கூடியிருந்த நிலையில், சுமார் 50 ரவுண்டுகள் சுடப்பட்டதாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் கூறுகின்றனர்.
சம்பவம் நடந்த பகுதியில் போலீசார் பதில் தாக்குதல் நடத்தினர். இதில் துப்பாக்கிச்சூட்டில் ஈடுபட்ட ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டிருக்கிறார். இந்த சம்பவத்தில் காவல்துறையினர் உட்பட சுமார் 11 பேர் காயமடைந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நியூ சவுத் வேல்ஸ் காவல்துறை ஆணையர் மால் லான்யன், இந்தத் துப்பாக்கிச்சூட்டை பயங்கரவாதச் சம்பவம் என்று அறிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications