இந்திய மிடில் கிளாஸ் மக்களை குறி வைக்கும் எலான் மஸ்க்கின் டெஸ்லா!
டெல்லி: இந்தியாவின் நடுத்தர வர்க்கத்தினரை இலக்கு வைக்க டெஸ்லா திட்டமிட்டுள்ளது. எனினும், அங்குதான் ஒரு சிக்கல் இருப்பதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
சமீபத்தில் டெஸ்லாவின் முதல் காலாண்டு வருவாய் குறித்த விவரங்கள் வெளியானது. இதில் நிறுவனத்தின் லாபம் 71% குறைந்திருந்தது. இந்தக் கூட்டத்தில் இந்தியா குறித்த முக்கிய தகவலை டெஸ்லா அதிகாரிகள் பகிர்ந்துகொண்டனர். இந்தியா ஒரு முக்கிய சந்தை என்றும், இங்கு நுழைய தீவிரமாக ஆலோசித்து வருவதாகவும் அவர்கள் தெரிவித்தனர். ஆனால், இந்தியாவின் பாதுகாப்பு கொள்கைகள் (protectionist policies) ஒரு தடையாக இருப்பதாக குறிப்பிட்டனர்.

டெஸ்லாவின் தலைமை நிதி அதிகாரி வைபவ் தனேஜா கூறுகையில், "நாங்கள் இந்தியாவுக்குள் நுழைய முயற்சித்து வருகிறோம். இந்தியா மிகவும் கடினமான சந்தை. குறிப்பாக, தற்போதைய வரி விதிப்பு முறைப்படி, நாங்கள் அனுப்பும் எந்த காருக்கும் 70% வரியும், கூடுதலாக 30% சொகுசு வரியும் விதிக்கப்படுகிறது. இதனால், நாங்கள் அனுப்பும் அதே கார் மற்ற இடங்களை விட இங்கு 100% அதிகமாக விலை உயர்ந்ததாகிறது" என்றார்.
மத்திய அரசு 2025 பட்ஜெட்டில் 40,000 டாலர்களுக்கு மேல் விலை கொண்ட இறக்குமதி கார்களுக்கான அடிப்படை சுங்க வரியை 125% இலிருந்து 70% ஆக குறைத்தது. மேலும், 10% சமூக நல கூடுதல் வரியை நீக்கியது. இந்த மாற்றங்களுக்கு பிறகும், அதிக வரி காரணமாக டெஸ்லா கார்களை வாங்க மக்கள் தயக்கம் காட்டுவதாக தனேஜா தெரிவித்தார். அதிக பணம் செலுத்த வேண்டியுள்ளதே இதற்கு காரணம் என்றும், அந்தப் பணம் அரசுக்குச் செல்கிறதே தவிர நிறுவனத்துக்கு இல்லை என்றும் அவர் குறிப்பிட்டார். எனவே, இந்தியாவுக்குள் நுழைய சரியான நேரம் எது என்பதை கவனமாக ஆராய்ந்து வருவதாகவும் அவர் கூறினார்.
முன்னதாக, டெஸ்லா தலைமை நிர்வாக அதிகாரி எலான் மஸ்க், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை பிப்ரவரியில் சந்தித்து, தொழில்நுட்பம் மற்றும் புதுமைகளில் ஒத்துழைப்பு குறித்து பேசியிருந்தார்.
இந்த ஆண்டு டெஸ்லா இந்தியச் சந்தையில் நுழையலாம் என சந்தை ஆய்வாளர்கள் கருதுகின்றனர். டெஸ்லா நிறுவனம் இந்தியாவில் பணியாளர்களை நியமிக்கத் தொடங்கியுள்ளதும், சமீபத்தில் புதுப்பிக்கப்பட்ட 2025 மாடல் Y கார் மும்பைக்கு அருகே சோதனை செய்யப்பட்டதும் இதற்கு வலு சேர்க்கிறது.

டெஸ்லா இந்த ஆண்டு இந்தியாவுக்கு வருமா என்பதை நிறுவனம் உறுதிப்படுத்தவில்லை. ஆனால், இந்தியாவின் பரந்த நடுத்தர வர்க்க சந்தையை இலக்கு வைக்க விரும்புவதாக தனேஜா தெரிவித்தார். இந்திய நுகர்வோருக்காக ரூ.20-25 லட்சம் விலையில் ஒரு மலிவு விலை மாடலை அறிமுகப்படுத்த டெஸ்லா பரிசீலித்து வருவதாக ஒரு அறிக்கை கூறுகிறது. அமெரிக்காவில் டெஸ்லா கார்களின் விலை சுமார் ரூ.36 லட்சத்தில் தொடங்கி ரூ.85 லட்சம் வரை உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த முன்னேற்றங்கள் டெஸ்லாவின் இந்திய வருகைக்கான வாய்ப்புகளை அதிகரித்துள்ளன. எலான் மஸ்க் இந்த ஆண்டின் பிற்பகுதியில் இந்தியாவுக்கு வருகை தரவும் திட்டமிட்டுள்ளார்.
டெஸ்லாவின் இந்தியத் திட்டங்கள் ஒருபுறம் இருந்தாலும், நிறுவனத்தின் லாபம் குறைந்து வருவது மஸ்க் மற்றும் அவரது குழுவுக்கு உடனடி சவாலாக உள்ளது. முதல் காலாண்டில் டெஸ்லாவின் வருவாய் 9% குறைந்து, லாபம் 71% சரிந்துள்ளது. வாகன விற்பனை வருவாய் 20% குறைந்துள்ளது. அதே காலகட்டத்தில் ஒட்டுமொத்த மின்சார வாகனங்களின் விற்பனை 7% அதிகரித்துள்ளது.
குறைந்த வருவாய் காரணமாக, டெஸ்லா மீது கவனம் செலுத்த எலான் மஸ்க் முடிவெடுத்துள்ளார். அரசு தொடர்பான பணிகளில் தனது ஈடுபாட்டை குறைத்துக்கொண்டு வாரத்தில் ஒன்றிரண்டு நாட்கள் மட்டும் ஒதுக்கி, டெஸ்லாவில் அதிக கவனம் செலுத்த உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
-
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்? -
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்! -
தவெக கூட்டத்தில் மதுபாட்டில் வீச்சு.. சிக்கிய 2 பேர்.. யார் இவர்கள்? போலீஸ் சொன்ன ஷாக் தகவல் -
கண் முன்னே வெடிக்கும் உலக போர்! வளைகுடா மோதலில் உள்ளே வரும் உலக நாடுகள்.. உச்சக்கட்ட பதற்றம் -
ஈரானின் புதிய சுப்ரீம் லீடரும் மரணம்? குழப்பத்தில் பொதுமக்கள்.. ரஷ்யா தரப்பு சொன்ன முக்கியமான தகவல்












Click it and Unblock the Notifications