நாளை கூடுகிறது காங்கிரஸ் செயற்குழு.. இடைக்கால தலைவராகிறார் முகுல் வாஸ்னிக்?
டெல்லி: காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டம் நாளை அக்கட்சியின் புதிய இடைக்காலத் தலைவரை தேர்வு செய்ய உள்ளது.
லோக்சபா தேர்தலில் பாஜக அமோக வெற்றி பெற்றதால், கடந்த மே மாதம் ராகுல் காந்தி காங்கிரஸ் தலைவர் பதவியிலிருந்து விலகினார். பின்னர் காங்கிரஸ் கட்சித் தலைவர் பதவி காலியாகவே உள்ளது.
இந்த நிலையில், நாளை நடைபெற உள்ள காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தில், காங்கிரசுக்கு இடைக்கால தலைவர் தேர்வு செய்யப்பட உள்ளார்.
மூத்த தலைவர், முகுல் வாஸ்னிக் இந்த பதவியை ஏற்க அதிக வாய்ப்புள்ளதாம்.
அப்படி ஒன்று நடந்தால், காந்தி குடும்பம் அல்லாத ஒருவர், 20 வருடங்களில் முதல் முறையாக காங்கிரஸஸ் கட்சித் தலைவராவார். ராகுல் காந்தி, சோனியா காந்தி மற்றும் பிரியங்கா காந்தி ஆகியோர் தற்போது தீவிர அரசியலில் உள்ளபோதிலும், மற்றொருவருக்கு அந்த வாய்ப்பு செல்லப்போகிறது.
ஏ.கே. ஆண்டனி, அகமது படேல், கே.வி.வேணுகோபால் போன்ற மூத்த தலைவர்கள் கலந்து கொண்ட இன்றைய காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.