நம்ம சின்னம்..! பானை சின்னம் ...! திருமாவளவனுக்கு ஒதுக்கியது தேர்தல் ஆணையம்
Recommended Video
டெல்லி:சிதம்பரம் லோக்சபா தொகுதியில் போட்டியிடும் விசிக தலைவர் திருமாவளவனுக்கு பானை சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
லோக்சபா தேர்தலில் திமுக கூட்டணியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி இடம் பெற்றுள்ளது. அந்த கட்சிக்கு சிதம்பரம், விழுப்புரம் ஆகிய 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
அதில் சிதம்பரம் தொகுதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் போட்டியிடுகிறார். மற்றொரு தொகுதியான விழுப்புரத்தில் அக்கட்சியின் முன்னாள் எம்எல்ஏ ரவிக்குமார் களம் காண்கிறார்.
வேட்பாளர்களை அக்கட்சி ஏற்கனவே அறிவித்துவிட்டது. விழுப்புரம் தொகுதியில் போட்டியிடும் ரவிக்குமார் திமுகவின் உதய சூரியன் சின்னத்தில் போட்டியிடுவார் என்று திருமாவளவன் அறிவித்திருந்தார்.
சமூகத்தின் பல்வேறு பிரிவையும்.. வேட்பாளர்களாக்கி அழகு பார்த்த கமல்.. யார் இந்த "சகலகலா வல்லவர்கள்"?
தாம் எந்த சின்னத்தில் போட்டியிடுவது என்பது குறித்து பின்னர் அறிவிக்கப்படும் என்றும், தேர்தல் ஆணையத்திடம் சின்னம் கேட்டு விண்ணப்பித்து இருப்பதாகவும் தெரிவித்திருந்தார்.
இந் நிலையில், அவருக்கு பானை சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பதாக தேர்தல் ஆணையம் அறிவித்திருக்கிறது. இது தொடர்பான தகவல் அவரது கட்சிக்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளது என்று தேர்தல் ஆணையம் கூறியிருக்கிறது.