மொத்தமாக நிறுத்தப்பட்ட ரூ.2000 நோட்டு அச்சடிப்பு.. புழக்கமும் குறையும்.. அதிர வைக்கும் காரணம்!
2000 ரூபாய் நோட்டை அச்சடிப்பது திடீரென்று நிறுத்தப்பட்டுள்ளது.
Recommended Video

டெல்லி: 2000 ரூபாய் நோட்டை அச்சடிப்பது திடீரென்று நிறுத்தப்பட்டுள்ளது. இதற்கு பின் நிறைய திடுக்கிடும் காரணம் இருப்பதாக தகவல்கள் வந்துள்ளது.
கடந்த 2016 நவம்பர் 8ம் தேதி பிரதமர் மோடியால் டிமானிடைசேஷன் கொண்டு வரப்பட்டது. இதனால் அப்போது வழக்கில் இருந்த 500, 1000 ரூபாய் நோட்டுகள் அனைத்தும் செல்லாது என்று அறிவிக்கப்பட்டது.
இது மக்களின் மத்தியில் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது பல கோடி தொழிலாளர்களை, மக்களை நடுத்தெருவிற்கு கொண்டு வந்து நிறுத்தியது.

2000 ரூபாய் நோட்டு
இந்த நிலையில் 1000 ரூபாய் நோட்டிற்கு பதிலாக புதிதாக 2000 ரூபாய் நோட்டு கொண்டு வரப்பட்டது. பிங்க் நிறத்தில் கொண்டு வரப்பட்ட இந்த நோட்டில் சிப் இருந்ததாக முதலில் வதந்திகள் பரவியது. அதேபோல் இதில் நிறைய பாதுகாப்பு அம்சங்கள் இருக்கிறது. இதை கள்ள நோட்டு அடிக்க முடியாது என்றும் செய்திகள் வந்தது.

மொத்தமாக நிறுத்தம்
இந்த நிலையில் தற்போது 2000 ரூபாய் நோட்டு தயாரிக்கப்படுவது மொத்தமாக நிறுத்தப்பட்டுள்ளது. கடந்த ஒரு மாதமாக புதிதாக 2000 ரூபாய் நோட்டுகள் எதுவும் தயாரிக்கப்படவில்லை. இனியும் புதிய இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகள் அச்சடிக்கப்படாது என்றும் தெரிவித்து இருக்கிறார்கள்.

திரும்ப பெறுகிறார்கள்
அதேபோல் தற்போது வெளியே இருக்கும் 2000 ரூபாய் நோட்டுகள் மீண்டும் ஆர்பிஐ வசம் வந்த பின், அதை வெளியே புழக்கத்திற்கு விட மாட்டார்கள் என்றும் கூறியுள்ளனர். இதனால் 2000 ரூபாய் பயன்பாடு கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து மொத்தமாக இல்லாமல் போக வாய்ப்பு உள்ளது. ஆனால் இப்போது இருக்கும் 2000 ரூபாய் நோட்டு எப்போதும் போல செல்லுபடி ஆகும்.

காரணம் என்ன
2000 ரூபாய் நோட்டை அச்சடிப்பதை நிறுத்தியதற்கு நிறைய காரணங்கள் சொல்லப்படுகிறது. அதன்படி இந்த நோட்டில் போதிய பாதுகாப்பு அம்சங்கள் இல்லாதது முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. 2000 ரூபாய் நோட்டை எளிதாக கள்ள நோட்டு அடிக்க முடிவதால் இதை பயன்படுத்துவது சரியாக இருக்காது என்று ஆர்பிஐ மற்றும் மத்திய அரசு இந்த முடிவை எடுத்துள்ளது.

அட
அதேபோல் 2000 ரூபாய் நோட்டு காரணமாக நிறைய பண பதுக்கல் செய்யப்படுவதும் தெரிய வந்துள்ளது. ஒரு கட்டில் எளிதாக ரூ.2 லட்சம் வரை வைக்க முடியும் என்பதால் இதை எளிதாக பதுக்குகிறார்கள் என்று குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ளது. இதனால் அரசுக்கு பெரிய பண புழக்க தட்டுப்பாடு வந்துள்ளதாக குற்றச்சாட்டு வைக்கப்பட்டு இருக்கிறது.

அரிசி மூட்டை குடோன்லயே இருக்கலாம்
பாதுகாப்பு கருதிதான் இந்த 2000 ரூபாய் நோட்டு வந்ததாக பிரச்சாரம் செய்யப்பட்டது. ஆனால் தற்போது அதிலேயே பாதுகாப்பு இல்லை என்று கூறி உள்ளனர். இது மக்கள் மத்தியில் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. சந்தானம் காமெடியில் வருவது போல.. இதுக்கு அந்த அரிசி மூட்டை குடோன்லயே இருந்திருக்கலாம் மிஸ்டர் மோடிஜி!
-
பாஜகவுடன் கூட்டணி வைக்கலாம்.. எழுதிக் கொடுத்த மாவட்டச் செயலாளர்கள்.. நாளை விஜய் எடுக்கும் முடிவு? -
தங்கம் vs ரியல் எஸ்டேட்.. கடைசி காலத்தில் நிம்மதியாக வாழ எது சிறந்தது? ஆனந்த் சீனிவாசன் ஈஸி விளக்கம் -
விரால் மீனின் ஸ்பெஷாலிட்டி இது.. பாம்பு தலையன் மீனுக்குள் அற்புதமான சீக்ரெட்! பெண்களின் வரப்பிரசாதம் -
ஜான் ஆரோக்கியசாமி போட்ட மெகா ஸ்கெட்ச்.. மிரண்டு போன பாஜக மேலிடம்.. B டீம் முத்திரையை உடைப்பாரா விஜய் -
திரிஷா சர்ச்சை அடங்குவதற்குள் மீண்டும் பரபரப்பு… காதல், கள்ளக்காதல் பற்றி பார்த்திபன் ஓபனாக பேச்சு -
அதிமுக எம்பியாக இருந்தபோதே கனிமொழி அக்கா எனக்கு பயிற்சி கொடுத்தார்.. ஓ.பி. ரவீந்திரநாத் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை பழிதீர்த்த கர்மா.. முத்துவால் ஏற்பட்ட குழப்பம்.. சந்தோஷத்தில் ரோகிணி -
மீண்டும் தள்ளிப்போகும் தேர்தல் தேதி அறிவிப்பு.. பின்னணியில் 3 காரணங்கள்.. தமிழகம் உள்பட 5 மாநில வாக்குப்பதிவு எப்போது? -
தவெகவில் பணக்கஷ்டம்.. ரூ.5 கோடி செலவு செய்ய வேட்பாளர்கள் இல்லை.. கூட்டணி செல்வது தான் சரி.. விஜய்க்கு அழுத்தம் -
Rasi Palan: கடகம், சிம்மம், கன்னிக்கு மார்ச் மாதத்தில் அடிக்குமா ஜாக்பாட்.. முழு பலன்கள் விவரம் -
அதில் இருந்தது கோழி கால் இல்லை.. சொமாட்டோ பிரியாணி பார்சலில் இருந்தது? அலற விட்ட 28 நிமிட வீடியோ -
சிங்காநல்லூர் வாய்ப்பில்லை.. பல்லடம் தொகுதியில் அண்ணாமலையை நிற்க சொல்லுங்க.. மறுக்கும் அதிமுக!












Click it and Unblock the Notifications