சிங்கம் இஸ் பேக்… பணியில் இணைய ஸ்ரீநகர் திரும்பினார் அபிநந்தன்
Recommended Video

டெல்லி: இந்திய விமானப் படை விங் கமாண்டர் அபிநந்தன் தனது படையில் இணைய ஸ்ரீநகர் திரும்பியுள்ளார்.
நான்கு வார கால மருத்துவ விடுப்பில் சென்ற போர் விமானி அபிநந்தன், முழு உடல் தகுதியுடன், தான் விரும்பிய போது மீண்டும் பணியில் சேர்வார் என்று விமான படை அதிகாரிகள் தெரிவித்திருந்தனர். இந்தநிலையில் பணியில் இணைய மீண்டும் ஸ்ரீநகர் திரும்பியுள்ளார்.
கடந்த பிப்ரவரி மாதம் 14 ஆம் தேதி, ஜம்மு காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் நடந்த தீவிரவாத தாக்குதலில் 40 சிஆர்பிஎஃப் வீரர்கள் உயிரிழந்தனர். இதற்கு எல்லைத் தாண்டி சென்று பாகிஸ்தானில் இந்திய விமானப்படை தக்க பதிலடி அளித்தது.

துரதிஷ்டவசம்
கடந்த மாதம் 27ஆம் தேதி இந்திய எல்லைக்குள் நுழைய முயன்ற பாகிஸ்தான் விமானத்தை புறமுதுகிட்டு ஓடச் செய்து, பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த விங் கமாண்டர் அபிநந்தன் (35), பாகிஸ்தான் எல்லையில் துரதிஷ்டவசமாக பாராசூட்டில் இறங்கினார்.

அபிநந்தன் விடுவிப்பு
பாகிஸ்தான் மேஜரின் கேள்விக்கு வீரமாகவும், விவேகமாகவும் பதிலளித்தார். விமானி அபிநந்தன் பாகிஸ்தானிடம் சிக்கிய சம்பவம் உலக நாடுகளை திரும்பி பார்க்க வைத்தது. இதனை அடுத்து இந்தியா மற்றும் உலக நாடுகளின் அழுத்தத்தை தொடர்ந்து, போர் பதற்றத்தை தணிக்க 2 நாட்களுக்கு பிறகு விமானி அபிநந்தனை விடுவிக்க பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் உத்தரவிட்டார்.

தாயகம் திரும்பினார்
இதனைத் தொடர்ந்து, மார்ச் 1 ம் தேதி சாலை மார்க்கமாக அழைத்துவரப்பட்ட அபிநந்தனை வரவேற்க வாகா - அட்டாரி எல்லையில் ஏராளமான பொதுமக்கள் குவிந்தனர். மேள தாளங்கள் முழங்க பட்டாசுகள் வெடித்து ஆரவாரமாக அபிநந்தனை தாயகம் வரவேற்றனர்.

4 வாரம் மருத்துவ விடுப்பு
இந்த நிலையில், அபிநந்தன் விமானியாக தொடர்வாரா அல்லது விமானப் படையில் வேறேதும் நடை முறைகள் உள்ளனவா என்று பல்வேறு கேள்விகள் எழுந்தன. ஆனால், ராணுவ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அபிநந்தன், 4 வார கால மருத்துவ விடுப்பில் சென்றார்.

மீண்டும் அபிநந்தன்
இந்நிலையில், ஸ்ரீநகர் திரும்பியுள்ள அபிநந்தன், மீண்டும் பணியில் இணைய உள்ளார். சென்னையில் தனது குடும்பத்தினருடன் விடுமுறையைக் கழிப்பார் என்று கருதப்பட்ட நிலையில், அவர் மீண்டும் தமது அணியில் இணைவதற்காக ஸ்ரீநகருக்கே திரும்பியுள்ளார். மருத்துவபரிசோதனைக்கு பிறகு பணியில் இணைவார் என்று கூறப்பட்டுள்ளது.
-
இந்த பாம்பு இங்கே தான் ஒளிஞ்சிருக்கா? இந்தியாவில் மிகப்பெரிய சாதனை.. கீல்பேக் வெல்கம் பேக் -
நாடு முழுவதும் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகள் இன்று தொடக்கம்! தமிழகத்தில் எப்போது? -
மக்கள்தொகை கணக்கெடுப்பு நாளை முதல் தொடக்கம்.. என்னென்ன ஆவணங்கள் வைத்திருக்க வேண்டும்! -
ஒரே நாளில் துடைத்தெறியப்பட்ட ரூ.10 லட்சம் கோடி.. "எல்லாம் போச்சு.." கதறும் முதலீட்டாளர்கள் -
பெற்றோரை பார்த்து கொள்ளவில்லை என்றால் "சம்பளம்" வராது.. வருகிறது புதிய சட்டம்! தண்டனைகள் என்ன? -
வயிறு எரியுது..1 டீ 25 ரூபாயா? ரூ.40க்கு விற்கப்படும் இட்லி வடை! 6,000ஐ தாண்டிய வணிக கேஸ் சிலிண்டர்! -
இலங்கைக்கு இந்தியா வழங்கிய 38,000 டன் பெட்ரோல், டீசல்.. நெகிழ்ந்து போன இலங்கை அதிபர் -
ஒரு மாதமாக இழுக்கும் ஈரான் போர்.. டிரம்ப் சொன்ன பாசிட்டிவ் மேட்டர்! இந்தியாவுக்கு பெரிய நிம்மதி! -
முடங்கும் துபாய், அபுதாபி! அடியோடு மங்கும் தங்கம் மார்க்கெட்! ஆடிப்போன இந்திய ஜுவல்லரி நிறுவனங்கள் -
மனைவி தனது பெற்றோரிடமிருந்து பெற்ற சொத்தில் கணவருக்கு உரிமை உண்டா? ஐகோர்ட் தீர்ப்பு முழு விவரம் -
சென்னை இளைஞர் கொடைக்கானலுக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா?












Click it and Unblock the Notifications