இந்த நாடு கெஜ்ரிவாலின் தனிப்பட்ட விருப்பங்களுக்கு ஏற்ப இயங்காது.. டெல்லி பிரபல வழக்கறிஞர் பேட்டி

Subscribe to Oneindia Tamil

டெல்லி: டெல்லி மதுபானக் கொள்கை தொடர்பான வழக்கின் விசாரணைக்கு, நீதிபதி ஸ்வரண காந்தா சர்மாவுக்கு ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் கடிதம் எழுதியதும், அதில் அவர் நேரிலோ அல்லது வழக்கறிஞர் மூலமோ ஆஜராக மறுத்ததும் குறித்துப் பேசிய வழக்கறிஞர் மோனிகா அரோரா, "ஒருவருக்கு எதிராக ஏதேனும் ஒரு உத்தரவு பிறப்பிக்கப்பட்டால், அவர் அதற்கு எதிராக மேல்முறையீடு செய்து உயர் நீதிமன்றத்தை நாடுவதுதான் வழக்கம்... ஆனால் அரவிந்த் கெஜ்ரிவால் இதில் மாறுபடுகிறார்; அவர் மேல்முறையீடு செய்வதில்லை, மாறாகச் செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொள்கிறார்... அவர் நீதிமன்றத்தைப் புறக்கணிக்கிறார்...

தனக்கு விருப்பமான ஒரு நீதிபதியே இவ்வழக்கை விசாரிக்க வேண்டும் என்று அவர் விரும்புகிறார்; ஆனால் சட்ட நடைமுறைகள் அவ்வாறு அமைவதில்லை. இந்தியாவின் குற்றவியல் நீதி அமைப்பின்படி, ஒருவர் தனக்கு விருப்பமான நீதிபதியைத் தானே தேர்ந்தெடுத்துக்கொள்ள இயலாது... மகாத்மா காந்தி ஆங்கிலேயர்களுக்கு எதிராகச் 'சத்தியாகிரகம்' மேற்கொண்டார்; ஆனால் அரவிந்த் கெஜ்ரிவாலோ அரசியலமைப்பு நீதிமன்றங்களுக்கு எதிராகச் 'சத்தியாகிரகம்' செய்ய முற்படுகிறார்... இந்த நாடு கெஜ்ரிவாலின் தனிப்பட்ட விருப்பங்களுக்கு ஏற்ப இயங்காது; மாறாக, இந்திய அரசியலமைப்பின்படியே இயங்கும்," என்று கூறினார்.

This country will not function according to Kejriwal s personal whims Delhi Lawyer


கெஜ்ரிவால் எழுதிய கடிதம் என்ன

டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி ஸ்வர்ண காந்தா சர்மா எழுதிய விரிவான கடிதத்தில் கெஜ்ரிவால், "மிகுந்த பணிவுடனும், நீதித்துறையின் மீதுள்ள முழு மரியாதையுடனும்" இந்த முடிவை எடுத்துள்ளேன். ஆனால், இந்த நீதிமன்றத்தின் முன்னால் நடக்கும் நடவடிக்கைகள், 'நீதி வழங்கப்படுவதுடன் மட்டுமல்லாமல், அது வழங்கப்படுவது வெளிப்படையாகவும் தெரிய வேண்டும்' என்ற அடிப்படைத் தத்துவத்தைப் பூர்த்தி செய்யவில்லை என்று நான் கருதுகிறேன். இந்த நடவடிக்கை கோபத்தினாலோ அல்லது அவமரியாதை செய்யும் நோக்கத்திலோ எடுக்கப்படவில்லை , நீதித்துறை செயல்பாட்டின் நடுநிலைமை மீது பொதுமக்களுக்கு இருக்கும் நம்பிக்கையை முன்னிறுத்தியே எடுத்துள்ளேன். எனது இந்த முடிவினால் ஏற்படக்கூடிய சட்ட ரீதியான எதிர்மறை விளைவுகளைச் சந்திக்கத் தயாராக இருக்கிறேன்.

நீதிமன்றத்தில் உங்கள் அமலில் நடைபெற உள்ள மேல்நடவடிக்கைகளில் நான் பங்கேற்க மாட்டேன். இவ்வாறு செய்வதன் மூலம் எனது சட்டப்பூர்வ நலன்களுக்கு பாதிப்பு ஏற்படலாம் என்பதை நான் முழுமையாக உணர்ந்துள்ளேன். அந்த விளைவுகளைச் சுமக்க நான் தயாராக இருக்கிறேன். காந்திய சத்தியாகிரகத்தின் ஒவ்வொரு மனசாட்சிப்பூர்வமான செயலும் சுமக்க வேண்டிய சுமை அது, எனது மனசாட்சி எனக்கு இதைத் தவிர வேறு கண்ணியமான வழி இல்லை" என்று கூறியுள்ளார்.

"மிகவும் வெளிப்படையான முரண்பாடுகள் நிறைந்த இந்த நடவடிக்கைகளில், எல்லாம் சரியாக இருப்பது போலக் கருதி பங்கேற்று என்னால் மனசாந்தியடைய முடியாது. அவ்வாறு செய்வது எனது மனசாட்சிக்கு இழைக்கும் துரோகம், நீதித்துறையின் கண்ணியத்திற்குச் செய்யும் அவமரியாதை மற்றும் அதிகாரத்தின் அத்துமீறலுக்கு எதிராக நீதிமன்றங்களே இறுதிப் புகலிடம் என்று இன்னும் நம்பும் இந்திய மக்களுக்குச் செய்யும் அநீதி," என்று கெஜ்ரிவால் கடிதத்தில் கூறியுள்ளார்.

"எனது எதிர்ப்பு உயர் நீதிமன்றம் என்ற அமைப்புக்கோ அல்லது ஒட்டுமொத்த நீதித்துறைக்கோ எதிரானது அல்ல. மாறாக, உங்கள் நடுநிலைமை குறித்துக் கடுமையான சந்தேகம் ஏற்பட்டுள்ள சூழலில், இந்த வழக்கை நீங்கள் தொடர்ந்து விசாரிப்பதற்கு மட்டுமே எனது எதிர்ப்பு," என்றும் கெஜ்ரிவால் கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+