பிரான்ஸ் தேவாலயத்தில் கத்திகுத்து தாக்குதல்.. 3 பேர் கொலை.. பிரதமர் மோடி கடும் கண்டனம்
பிரான்ஸ் தேவாலயத்தில் நடந்த தாக்குதலுக்கு பிரதமர் மோடி கண்டனம் தெரிவித்துள்ளார்
டெல்லி: இன்று பிரான்ஸ் நாட்டில் சர்ச்சில் நடைபெற்ற கத்திகுத்து தாக்குதலுக்கும், மற்றும் அந்த நாட்டில் சமீப காலமாக நடந்து வரும் தீவிரவாத தாக்குதல் சம்பவங்களுக்கும் பிரதமர் நரேந்திர மோடி கண்டனம் தெரிவித்துள்ளார்.
பிரான்ஸ் நாட்டின் நைஸ் நகரில் நோட்ரி டேமி என்ற தேவாலயத்தில் இன்று மதியம் திடீரென ஒரு மர்மநபர் கத்தியுடன் நுழைந்தார்.. அங்கிருந்த ஒரு பெண் உட்ப 3 பேரை கத்தியால் சரமாரியாக குத்தி கொன்றுவிட்டார்.. அந்த பெண்ணின் தலையை துண்டித்து கொன்றதுடன், மேலும் பலர் படுகாயமடைந்தனர்.

சம்பந்தப்பட்ட பயங்கரவாதியை போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.. இந்த கொடூரம் உலக நாடுகளை அதிர்ரச்சிக்கு உள்ளாக்கி வருகிறது. இதனிடையே நபிகள் நாயகத்தின் கார்டூனை பள்ளி வகுப்பில் மாணவர்களிடம் காட்டிய வரலாற்று ஆசிரியர் சாமுவேல் பெடியின் செயலுக்கு தண்டனை கொடுக்கும் விதமாகவே இந்த தாக்குதலை நடத்தியதாக பயங்கரவாதி தெரிவித்ததாக தகவல் வெளியானது.
இந்நிலையில், இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பிரதமர் மோடி கண்டனம் தெரிவித்துள்ளார்.. இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், "நைஸ் நகரில் தேவாலயத்திற்குள் இன்று நடந்த கொடூரமான தாக்குதல் உட்பட, பிரான்சில் தற்போது நடந்து வரும் பயங்கரவாத தாக்குதல்களை நான் கடுமையாக கண்டிக்கிறேன்.
பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கும், பிரான்ஸ் மக்களுக்கும் எங்கள் ஆழ்ந்த மற்றும் மனமார்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன். பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டத்தில் இந்தியா எப்போதும், பிரான்சுடன் துணை நிற்கும்" என்று குறிப்பிட்டுள்ளார்.
-
வளைகுடா நாடுகளில் வாடி வதங்கும் தமிழர்கள்.. உடனடியாக மீட்க பிரதமருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் -
தமிழகத்தில் 3 முறை பிரச்சாரம்.. அதிமுக பேரே வாயில் வரலை! எடப்பாடிக்கு மோடியின் அரசியல் சிக்னல் என்ன? -
ஆரம்பிக்கும் மூன்றாம் உலக போர்.. வெளியே வந்த டூம்ஸ்டே மீன்.. அலறும் உலக நாடுகள் -
கூட்டுறவு வங்கி தங்க நகை கடன் + மகளிர் உரிமை தொகை! கனிமொழி பிரம்மாஸ்திரம்! ஸ்டாலின் முக்கிய முடிவு -
தேசிய ஜனநாயக கூட்டணியில் விஜய்.. நெருங்கும் பேச்சுவார்த்தை.. ஒரே வார்த்தையில் உடைத்த சரத்குமார் -
7 பொதுத்தொகுதி + 2 தனித்தொகுதி.. அதிமுக கூட்டணியில் டிடிவிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் இதுதான்! -
அமெரிக்காவை அசரடித்த அம்பானி.. ரூ.27 லட்சம் கோடி முதலீடு செய்யும் ரிலையன்ஸ்.. டிரம்ப் அறிவிப்பு -
தேமுதிகவை திமுக கூட்டணிக்கு அனுப்பியதே எஸ்.பி.வேலுமணிதான்! கோவை ஈஷாவில்.. கொளுத்தி போட்ட புகழேந்தி -
Election Exclusive: துணை முதல்வர் விஜய்.. அல்வா மாதிரி ஆஃபர்களை அள்ளி வீசும் அமித் ஷா! செம கடுப்பில் எடப்பாடி பழனிசாமி! -
பிரேமலதாவிற்கு திமுகவின் அடுத்த ‘சர்ப்ரைஸ்'.. தேமுதிகவிற்கு தாராளம் காட்டும் ஸ்டாலின்.. காங்கிரஸ்க்கு அடி -
துணை முதல்வர் எல்லாம் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் வேலை.. 2.5 வருஷம் முதல்வர் பதவி.. பாஜகவிடம் விஜய் டிமாண்ட் -
சிறகடிக்க ஆசை: முத்து மீனாவுக்கு நடந்த நல்ல விஷயம்! விஜயாவுக்கு இனி தான் பிரச்சனை! ரோகிணியின் அடுத்த பிளான்












Click it and Unblock the Notifications