தமிழ்நாட்டுக்கு வரும் 80 TMC நீரை தடுக்கவே கர்நாடகா புதிய அணை கட்ட முயற்சிக்கிறது - தமிழக அரசு வாதம்
டெல்லி: மேகதாது அணை கட்ட நதிநீர் ஆணையம் ஒப்புதல் தர முடியாது என உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டுக்கு வரும் 80 டிஎம்சி நீரை தடுக்கவே கர்நாடகா புதிதாக அணை கட்ட முயற்சிக்கிறது என தமிழ்நாடு அரசு வாதம் வைத்துள்ளது.
மேகதாது அணை கட்டுவதற்கு ஒப்புதல் அளிக்கக் கோரி கர்நாடக அரசு தொடர்ந்த வழக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, "மேகதாது அணை கட்டப்பட்டால் லட்சக்கணக்கான விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள். அணைக்கான திட்ட அறிக்கை தயாரிக்க மத்திய நீர் ஆணையம் எந்த அனுமதியும் வழங்க இயலாது" என தமிழ்நாடு அரசு தரப்பில் வாதம் வைக்கப்பட்டது.
மேலும், "மேகதாது அணை கட்ட நதிநீர் ஆணையம் ஒப்புதல் தர முடியாது. காவிரியின் குறுக்கே போதுமான அணைகள் கர்நாடகாவில் உள்ளன. புதிய அணை தேவையில்லை. காவிரியில் குறுக்கே புதிதாக அணை கட்டினால் தமிழ்நாட்டுக்கு வரும் 80 டிஎம்சி தண்ணீர் தடுக்கப்படும். உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டும் பல நேரங்களில் காவிரியில் தண்ணீரை திறந்து விடாமல் கர்நாடகா இருந்திருக்கிறது. 80 டிஎம்சி நீரை தடுக்கவே கர்நாடகா புதிதாக அணை கட்ட முயற்சிக்கிறது" எனவும் வாதம் முன்வைக்கப்பட்டுள்ளது.
அணை கட்டும் கர்நாடக அரசின் முடிவுக்கு புதுச்சேரி, கேரள அரசும் நீதிமன்றத்தில் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications