இன்றைய ஓமிக்ரான் அப்டேட்ஸ்: கோவா, மணிப்பூரில் முதலாவது ஓமிக்ரான் பாதிப்புகள் உறுதி
டெல்லி: கோவா, மணிப்பூர் மாநிலங்களில் முதலாவாது ஓமிக்ரான் எனும் உருமாறிய கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் கேரளா, உத்தரகாண்ட் மாநிலங்களிலும் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் பஞ்சாப் மாநில அரசு இப்போதைக்கு எந்த கட்டுப்பாடுகளும் விதிக்கப்படாது என தெரிவித்துள்ளது.
இன்று காலை 8 மணியுடனான 24 மணிநேரத்தில் இந்தியாவின் மொத்த ஓமிக்ரான் பாதிப்பு எண்ணிக்கை 578 ஆக உயர்ந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது. டெல்லியில்தான் அதிகபட்சமாக 142 பேருக்கு ஓமிக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டது.

மாநிலங்களில் ஓமிக்ரான்
மகாராஷ்டிராவில் 141; கேரளாவில் 57; குஜராத்தில் 49; ராஜஸ்தானில் 43; தெலுங்கானாவில் 41 பேருக்கு ஓமிக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் 34 பேருக்கும் கர்நாடகாவில் 31 பேருக்கும் ஓமிக்ரான் கண்டறியப்பட்டிருந்தது.

மத்திய அரசு அட்வைஸ்
ஓமிக்ரான் பரவல் அதிகரித்துள்ள நிலையில் மாநிலங்களுக்கு மத்திய அரசு இன்று சுற்றறிக்கையை அனுப்பி இருந்தது. அதில், கொரோனா கால கட்டுப்பாடுகள் ஜனவரி 31-ந் தேதி வரை நீட்டிக்கப்படுகிறது; ஓமிக்ரான் பரவலை கட்டுப்படுத்தும் வகையில் மாநிலங்களே ஊரடங்கு உள்ளிட்டவை குறித்து முடிவெடுக்க அனுமதிக்கப்படுகிறது. பரிசோதனைகள், சிகிச்சைகள், தடுப்பூசிகள் போடுவதில் மாநில அரசுகள் கவனம் செலுத்த வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டிருந்தது.

மாநிலங்களில் ஊரடங்கு அமல்
டெல்லியில் இன்று முதல் இரவு ஊரடங்கு நடைமுறைக்கு வருகிறது. டெல்லியில் இரவு 11 மணி முதல் அதிகாலை 5 மணி வரை ஊரடங்கு அமலில் இருக்கும். மேலும் கேரளா, உத்தரகாண்ட் மாநிலங்களிலும் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று அம்மாநில அரசுகள் அறிவித்துள்ளன. இதனிடையே பஞ்சாப் மாநிலத்தில் தற்போதைய நிலையில் எந்த கட்டுப்பாடுகளும் விதிக்கப்படாது என அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.
Recommended Video

கோவா, மணிப்பூரில் முதல் ஓமிக்ரான்
இதனிடையே கோவா, மணிப்பூர் மாநிலங்களில் முதலாவது ஓமிக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. தான்சானியா நாட்டில் இருந்து மணிப்பூர் திரும்பிய நபருக்கு ஓமிக்ரான் தொற்று உறுதியானது. அந்த நபருக்கு இம்பாலில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இங்கிலாந்தில் இருந்து கோவா வந்த 8 வயது சிறுவனுக்கும் ஓமிக்ரான் கண்டறியப்பட்டது. ராஜஸ்தானில் மேலும் 3 பேருக்கு ஓமிக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அம்மாநிலத்தின் ஓமிக்ரான் பாதிப்பு எண்ணிக்கை 46 ஆக அதிகரித்தது.
-
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுகிறேன்.. அறிவித்தார் செல்வபெருந்தகை! பின்னணி இதுதான் -
ஆளூர் ஷாநவாஸ் செய்த அயோக்கியத்தனம்.. விசிகவில் சீட் கொடுக்காதது ஏன்? கொந்தளித்த சங்க தமிழன் -
திண்டுக்கல் எஸ்ஐக்கு மனமகிழ் மன்றத்தில் இருந்து வந்த அழைப்பு.. கனவிலும் நினைக்காத சம்பவம் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை லெப்ட் ரைட் வாங்கிய மீனா.. அண்ணாமலை கொடுத்த ஐடியா! மாஸ் காட்டிய முத்து -
அடுத்தடுத்து அண்ணாமலையை சந்தித்த கோவை அதிமுக வேட்பாளர்கள்.. டெல்லிக்கு வேலுமணி க்ளியர் மெசேஜ் -
பாஜக சிட்டிங் எம்.எல்.ஏவுக்கு சீட் மறுப்பு.. தொகுதி மாறிய 2 MLAக்கள்! வேட்பாளர் பட்டியலில் ட்விஸ்ட்! -
வில்லிவாக்கத்தில் நானே வேட்பாளர் என நினைத்துக் கொள்ளுங்கள்.. நண்பனுக்காக களம் இறங்கிய சபரீசன் பேட்டி -
கிரவுண்ட் ஜீரோ ரிப்போர்ட்.. தரைதட்டிய களப்பணி.. கிரவுண்டில் திணறும் தவெக.. விஜய்க்கு சிம்ம சொப்பனம் -
பாஜக வேட்பாளர் பட்டியல் வந்ததுமே அண்ணாமலை கொடுத்த முதல் ரியாக்ஷன்!












Click it and Unblock the Notifications