நெருங்கும் 5 மாநில தேர்தல்.... கட்சி பலவீனமாகிக் கொண்டே போகிறது... காங். தலைவர்கள் சர்ச்சை பேச்சு
டெல்லி: ஐந்து மாநிலங்களில் நடைபெறும் தேர்தலைச் சந்திக்கக் காங்கிரஸ் கட்சி தயாராகி வரும் சூழ்நிலையில், கட்சி பலவீனமாகி வருவதாக அக்கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான கபில் சிபல் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட ஐந்து மாநிலங்களில் அடுத்த மாதம் முதல் தேர்தல் நடைபெறவுள்ளது. அதில் புதுச்சேரி, கேரளா, அசாம் ஆகிய மாநிலங்களில் காங்கிரஸ் கட்சி முக்கிய எதிர்க்கட்சியாக உள்ளது. இந்த 5 மாநில தேர்தலை முன்னிட்டு ராகுல் காந்தி தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார்.
இந்நிலையில், காஷ்மீர் மாநிலத்தில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் பலரும் கலந்துகொண்டனர். இந்த நிகழ்ச்சியில் பேசிய காங்கிரஸ் மூத்த தலைவர்கள் பலரும் கட்சி தலைமையை விமர்சிக்கும் வகையில் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

அனைவரும் சமம்
முதலில் பேசிய குலாம் நபி ஆசாத், "ஜம்மு காஷ்மீர் அல்லது லடாக் என எந்தப் பகுதியாக இருந்தாலும் எல்லா மதங்களையும், மக்களையும், அனைத்து சாதிகளையும் நாங்கள் மதிக்கிறோம். நாங்கள் எல்லோரையும் சமமாகவே பார்க்கிறோம். இதுதான் எங்கள் பலம், இதையே தான் நாங்கள் தொடருவோம்" என்றார். கடந்த சில நாட்களுக்கு முன் தான், கேரளாவையும் வட இந்தியர்களையும் ஒப்பிட்டு ராகுல் காந்தி பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

பலவீனமாகிக் கொண்டே வருகிறது
அத் பின்னர் பேசிய கபில் சிபல், "உண்மை என்னவென்றால், காங்கிரஸ் தொடர்ந்து பலவீனம் அடைந்து வருவதை நாங்கள் காண்கிறோம். அதனால்தான் நாங்கள் இங்குக் கூடியிருக்கிறோம். நாங்கள் ஒன்றாக இணைந்து காங்கிரஸ் கட்சியைப் பலப்படுத்த வேண்டும்" என்றார். காங்கிரஸ் கட்சியின் தலைமை மீது அதிருப்தியில் உள்ள 23 தலைவர்கள் இது குறித்து சோனியா காந்திக்குக் கடிதம் எழுதியிருந்தனர். அப்படி அதிருப்தியில் உள்ள தலைவர்களே இந்தக் கூட்டத்தில் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.

குலாம் நபி ஆசாத்திற்கு பாராட்டு
தொடர்ந்து குலாம் நபி ஆசாத்தை பாராட்டிப் பேசிய கபில் சிபல், "ஒரு விமானத்தைப் பறக்கும் நபர் அனுபவம் வாய்ந்தவராக இருப்பார். இயந்திரத்தில் ஏதேனும் பிரச்சனையைக் கண்டால் அதைச் சரி செய்ய அவரும் கூடவே செல்வார். அதுபோல குலாம் நபி அனுபவமும் கொண்டவர் பிரச்சனையைச் சரி செய்யவும் ஆற்றல் உடையவர்.

பயன்படுத்திக் கொள்ளவில்லை
இந்தியா முழுவதும் ஒவ்வொரு மாநிலத்திலும் காங்கிரஸ் எந்த நிலையில் உள்ளது என மாவட்டம் வாரியாக தெரிந்து வைத்திருப்பவர் குலாம் நபி ஆசாத். நாடாளுமன்றத்திலிருந்து அவர் ஓய்வு பெற்றுவிட்டார் என்பதை நினைக்கும்போது வருத்தமாக உள்ளது. இதை நாங்கள் விரும்பவில்லை. அவரது அனுபவத்தைக் காங்கிரஸ் ஏன் பயன்படுத்திக்கொள்ளவில்லை என்பது எனக்குப் புரியவில்லை"என்றும் அவர் பேசினார்.
-
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
முடிவுக்கு வந்த சித்தராமையா யுகம்! கர்நாடகாவின் புதிய முதலமைச்சராக பதவியேற்றார் டிகே சிவக்குமார் -
அமைச்சரவையில் காங்கிரஸ் இடம்பெற.. மாணிக்கம் தாகூர் தான் முக்கிய காரணமாம்.. சொல்கிறார் விஸ்வநாதன்! -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
CBSE: மொபைல்களில் ஸ்கேன் செய்யப்பட்ட விடைத்தாள்கள்! குற்றச்சாட்டுகளை அடுக்கும் ராகுல் காந்தி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக!












Click it and Unblock the Notifications