பரபரப்பு.. இரட்டை இலை சின்னம் யாருக்கு.. உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு நாளை விசாரணை

Subscribe to Oneindia Tamil

டெல்லி: இரட்டை இலை சின்னம் தொடர்பாக நாளை உச்சநீதிமன்றத்தில் விசாரணை நடைபெற உள்ளது.

இரட்டை இலைக்கு டிடிவி தினகரன், சசிகலா தரப்பு உரிமை கோரிய நிலையில், 2017 நவம்பர் மாதம் தேர்தல் ஆணையம் வழங்கிய தீர்ப்பில், இரட்டை இலை சின்னம் அதிமுகவின் ஓ.பி.எஸ். இபிஎஸ் தரப்புக்குதான் சொந்தம் என்று தீர்ப்பு வழங்கியது.

Two leaves symbol case on Supreme court

ஓபிஎஸ்-இபிஎஸ் அணிக்கு இரட்டை இலை சின்னத்தை ஒதுக்கியதை எதிர்த்து டி.டி.வி.தினகரன், சசிகலா ஆகியோர் தாக்கல் செய்த மனுவை டெல்லி உயர் நீதிமன்றம் கடந்த பிப்ரவரி 28ல் தள்ளுபடி செய்தது. ஓ.பன்னீர் செல்வம் அணிக்குதான், இரட்டை இலை சின்னம் சொந்தம் என்று தீர்ப்பு வழங்கப்பட்டது.

இதை எதிர்த்து டிடிவி தினகரன் தரப்பு, உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இந்த வழக்கு நாளை விசாரிக்கப்பட உள்ளது. தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், தீபக் குப்தா, சஞ்சீவ் கண்ணா ஆகிய மூன்று நீதிபதிகள் அடங்கிய அமர்வு நாளை இதுபற்றி விசாரிக்க உள்ளது.

லோக்சபா தேர்தல் நெருங்கும் நிலையில், வழக்கு விசாரணைக்கு வந்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+