சர்ச்சைக்குரிய உபா சட்ட திருத்த மசோதா.. நாளை ராஜ்யசபாவில் தாக்கல் செய்யப்படுகிறது!
புதிய உபா சட்ட திருத்த மசோதா லோக்சபாவில் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில் நாளை ராஜ்யசபாவில் தாக்கல் செய்யப்பட உள்ளது.
டெல்லி: புதிய உபா சட்ட திருத்த மசோதா லோக்சபாவில் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில் நாளை ராஜ்யசபாவில் தாக்கல் செய்யப்பட உள்ளது.
சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டம் பல்வேறு சிக்கல்களை கொண்ட சட்டம் ஆகும். ஏற்கனவே இந்த சட்டம் மூலம் பலர் பழி வாங்கப்படுவதாக புகார் உள்ளது. இதற்கு எதிராக சமூக ஆர்வலர்கள் பலர் குரல் கொடுத்து வருகிறார்கள்.

இந்த நிலையில் இந்த சட்டத்தை மேலும் வலிமைப்படுத்த மத்திய பாஜக அரசு முடிவெடுத்துள்ளது. சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தில் (UAPA - உபா சட்டம்) மத்திய அரசு மாற்றம் கொண்டு வருவதற்காக தாக்கல் செய்திருக்கும் சட்டத்திருத்த மசோதாவிற்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.
ஒருவரை தீவிரவாதி அல்லது தீவிரவாத இயக்கத்துடன் தொடர்புடையவர் என்று இந்த சட்டம் மூலம் கைது செய்து விசாரிக்கலாம்.இந்த சட்ட திருத்தம் மூலம் என்ஐஏ இனி வரும் காலங்களில் குற்றஞ்சாட்டப்பட்டவர்களின் நிலத்தை, சொத்தை பறிமுதல் செய்யலாம்.
அதேபோல் என்ஐஏ அமைப்பிற்கு இந்த புதிய சட்ட திருத்தம் அளப்பரிய பலத்தை வழங்குகிறது என்று புகார் எழுந்துள்ளது. என்ஐஏ அமைப்பிற்கு இந்த மசோதா கட்டற்ற அதிகாரம் வழங்கும் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் கீழ்நிலை ரேங்க் கொண்ட அதிகாரிகள் கூட இதன் மூலம் முக்கிய நடவடிக்கைகளை எடுக்கலாம்.
இந்த மசோதா ஏற்கனவே லோக்சபாவில் தாக்கல் செய்யப்பட்டு அங்கு நிறைவேற்றப்பட்டுவிட்டது. இந்த நிலையில் நாளை இந்த மசோதா ராஜ்ய சபாவில் தாக்கல் செய்யப்பட உள்ளது. இதற்காக பாஜக கொறடா பாஜக எம்பிக்கள் எல்லோருக்கும் விப் நோட்டிஸ் அனுப்பி உள்ளார்.
பாஜக எம்பிக்கள் எல்லோரும் கண்டிப்பாக நாளை ராஜ்ய சபாவிற்கு வர வேண்டும் என்று இதில் கூறப்பட்டுள்ளது. இந்த மசோதாவிற்கு ஆதரவாக திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் லோக்சபாவில் வாக்களித்தது. இதனால் இந்த கட்சிகளின் ராஜ்யசபா எம்பிக்களும் மசோதாவிற்கு ஆதரவாகவே வாக்களிப்பார்கள் என்று கருதப்படுகிறது.
இந்த மசோதாவை அவையிலும் வெளியிலும் தீவிரமாக மதிமுக எம்பி வைகோ எதிர்த்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
அண்ணாமலை முடிவால் கண்சிவந்த அமித்ஷா.. நயினாரை உடனே டெல்லி அழைத்த பாஜக மேலிடம்.. பாஜகவில் பரபரப்பு -
என் குழந்தையின் முக ஜாடையை தப்பா பேசுறாங்க! முக்தார், சூர்யா சிவா மீது அலிஷா அப்துல்லா புகார் -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
அமித் ஷாவுக்கே அடங்காத அண்ணாமலை! சைலண்டாய் டெல்லியில் பார்த்த வேலை! ஆர்வக்கோளாறில் ஆதரவாளர்கள்! -
முதலில் இயக்கம்.. அடுத்து அரசியல் கட்சி.. உறுதியாக நிற்கும் அண்ணாமலை.. நாளை வெளியாகிறது அறிவிப்பு! -
அண்ணாமலை தலைவராக இருந்தால் இந்த வெற்றி கூட வந்திருக்காது.. பாஜக துணை தலைவர் கேபி ராமலிங்கம் விளாசல் -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
மோடியை சந்தித்த அண்ணாமலை? மீண்டும் தமிழக பாஜக தலைவராக்க டெல்லி தலைமை திட்டம்? -
மோடியை சந்தித்த அண்ணாமலை! புது கட்சியா? பாஜகவில் புதிய பொறுப்பா? நாளை தெரிந்துவிடும் -
மம்தாவிற்கு பேரிடி.. 60 எம்எல்ஏக்களை தொடர்ந்து 20 எம்பிக்களை தூக்கும் பாஜக? காலியாகும் தி.காங்கிரஸ் -
பாஜகவில் இருந்து விலகினாரா அண்ணாமலை? அப்படி எதுவும் தகவல் இல்லையே!முழு பூசணிக்காயை மறைத்த நயினார்! -
அமித் ஷாவிடம் நேரடியாக அண்ணாமலை சொன்ன மேட்டர்.. அடுத்த நொடி அலறிய சென்னை பாஜக அலுவலகம்! என்ன நடந்தது












Click it and Unblock the Notifications