உஜ்வாலா திட்ட கேஸ் சிலிண்டருக்கு மானியம் ரூ. 400 ஆக உயர்வு: மத்திய அரசு ஜாக்பாட்
டெல்லி: உஜ்வாலா திட்டத்தின் கீழ் ஆண்டுக்கு 12 சிலிண்டர்களுக்கு மானியமாக ரூ.200 அளிக்கப்பட்டு வரும் நிலையில் தற்போது மேலும் ரூ. 200 கூடுதலாக வழங்கப்பட உள்ளது.
வீட்டு உபயோகத்திற்கு பயன்படுத்தும் 14 கிலோ எடை கொண்ட சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையை மத்திய அரசு இன்று அதிரடியாக குறைத்தது. அதாவது சிலிண்டரின் விலையை ரூ. 200 குறைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது. இதன்படி சென்னையில் தற்போது ரூ.1,118 ஆக உள்ள சிலிண்டர் விலை இனி ரூ.918 க்கு விற்பனை செய்யப்படும். அதேபோல், உஜ்வாலா திட்டத்தின் கீழ் கூடுதலாக 200 மானியம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, உஜ்வாலா திட்ட பயனாளிகளுக்கு சிலிண்டர் ஒன்றுக்கு ரூ.400 மானியம் வழங்கப்படும். மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த மத்திய அமைச்சர் அனுராக் தாகூர் இந்த தகவலை தெரிவித்தார். மேலும் உஜ்வாலா திட்டத்தின் கீழ் 75 லட்சம் புதிய இலவச இணைப்புகள் வழங்கப்படும் என்றும் தெரிவித்தார். உஜ்வாலா திட்டத்தின் கீழ் கேஸ் அடுப்பு மற்றும் முதல் எரிவாயு சிலிண்டர் இலவசமாக வழங்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications