உக்ரைன்- ரஷ்ய போர்- பிரதமர் நரேந்திர மோடி முக்கிய ஆலோசனை
டெல்லி: உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து வரும் நிலையில் பிரதமர் நரேந்திர மோடி முக்கிய ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார்.
Recommended Video
உக்ரைன் மீது ரஷ்ய படைகள் ராணுவ நடவடிக்கை எடுக்க அதிபர் புதின் உத்தரவிட்டிருந்தார். அதன் பேரில் ரஷ்ய படைகள் உக்ரைன் மீது குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தி வருகின்றன.

உக்ரைனில் உள்ள ராணுவ தளங்கள், விமான தளங்கள் மீது ரஷ்ய படைகள் தாக்குதல் நடத்தி வருகின்றன. உக்ரைன் மீதான போரை ரஷ்யா நிறுத்த உலக நாடுகள் உதவ வேண்டும் என உக்ரைன் அரசு கோரிக்கை விடுத்துள்ளது. இந்த நிலையில் உக்ரைன்- ரஷ்யா போர் குறித்து பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை நடத்தி வருகிறார்.
மூத்த அமைச்சர்கள், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தி வருகிறார். ரஷ்யா போர் தொடுத்துள்ள நிலையில் அந்நாட்டு அதிபர் புதினுடன் இந்திய பிரதமர் நரேந்திர மோடி பேச வேண்டும் என உக்ரைனில் உள்ள இந்திய தூதரகம் கேட்டுக் கொண்டுள்ளது.
அது போல் உக்ரைனில் உள்ள தற்போதைய நிலை குறித்தும் அந்நாட்டு அதிபருடன் இந்திய பிரதமர் பேச வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளது.












Click it and Unblock the Notifications