அயோத்தி ராமர் கோவில் பூமி பூஜையில் பங்கேற்கவில்லை.. பிரதமர் கிளம்பி சென்ற பிறகு செல்வேன்- உமா பாரதி
டெல்லி: பிரதமரின் பாதுகாப்பு காரணமாக அயோத்தியில் ராமர் கோவில் அடிக்கல் நாட்டு விழாவில் பங்கேற்கப் போவதில்லை என்று பாஜக மூத்த தலைவர் உமா பாரதி தெரிவித்துள்ளார்.
அயோத்தியில் ராமர் கோவில் கட்டும் விஷயத்தில் பாஜக மூத்த தலைவர்கள் அத்வானி, முரளி மனோகர் ஜோஷி போன்றவர்களைப்போல, உமா பாரதி முன்னிலையில் இருந்தார். இதற்கான தீவிரமான பிரச்சாரங்கள் மற்றும் முன்னெடுப்புகளை அவர் மேற்கொண்டு வந்தார்.
இந்த நிலையில்தான், டுவிட்டரில் இந்த தகவலை அவர் கூறியுள்ளார்.

அமித் ஷாவுக்கு கொரோனா
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் பல பாஜக தலைவர்களுக்கு கொரானா வைரஸ் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டு உள்ளது. எனவே அயோத்தி ராமர் கோவில் அடிக்கல் நாட்டு விழாவில் பங்கேற்கக் கூடிய தலைவர்களுக்கு கொரோனா பரவி விடக் கூடாது என்ற எச்சரிக்கை உணர்வு அதிகரிக்கிறது. குறிப்பாக பிரதமர் நரேந்திர மோடி இதில் பங்கேற்பதால் கூட்டம் சேர்ந்து ஒரு தொற்று பரவிவிடக்கூடாது என்று நினைக்கிறேன்.

பிறகு செல்வார்
நான் மத்தியப்பிரதேச மாநிலம் போபால் நகரிலிருந்து உத்தரப் பிரதேசத்துக்கு ரயில் மூலமாக பயணிக்க உள்ளேன். பிரதமர் உள்ளிட்டோர் பங்கேற்கும் பூமி பூஜை விழாவில், நான், பங்கேற்க போவதில்லை. அவர்கள் கிளம்பிச் சென்ற பிறகு அந்த இடத்துக்கு சென்று வழிபாடு செய்வேன். அதுவரை சரயு நதிக்கரையில் நான் இருப்பேன். இவ்வாறு உமா பாரதி ட்வீட்டுகளை வெளியிட்டுள்ளார்.

அத்வானிக்கு அழைப்பு
அயோத்தியில் ராமர் கோவில் அறக்கட்டளை சார்பில் கடந்த சனிக்கிழமை அத்வானி மற்றும் முரளிமனோகர் ஜோஷி ஆகியோருக்கு தொலைபேசி மூலமாக, பூமி பூஜை விழாவில் பங்கேற்பதற்காக முறைப்படி அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அவர்கள் இருவரும் வீடியோ கான்பரன்ஸ் மூலமாக விழாவில் பங்கேற்பார்கள் என்று கூறப்படுகிறது.

குற்றச்சாட்டு
அயோத்தி பாபர் மசூதி இடிப்பு வழக்கில் குற்றச்சாட்டுக்கு உள்ளாகியுள்ளவர்களில், அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமாபாரதி ஆகிய தலைவர்களும் உண்டு. கடந்த வாரம் இது தொடர்பான விசாரணை நீதிமன்றத்தில் அவர்கள் தங்கள் வாக்குமூலத்தை அளித்தனர். 1992ம் ஆண்டு டிசம்பர் மாதம் பாபர் மசூதி, கர சேவகர்களால் இடிக்கப்பட்டது. இதற்கான தூண்டுதலை இந்த தலைவர்கள் முன்னெடுத்ததாக குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

பூமி பூஜை
வரும், புதன்கிழமை நடைபெற உள்ள அயோத்தி பூமி பூஜை நிகழ்வில் 40 கிலோ எடையுள்ள வெள்ளி செங்கல்லை அடிக்கல்லாக, பிரதமர் நரேந்திர மோடி நாட்டுவார். இந்த விழாவில் பங்கேற்க உள்ள விஐபிகள் எண்ணிக்கை 50ஆக குறைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
-
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம் -
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டாரு அமித் ஷா.. எடப்பாடி பழனிசாமிக்கு 165 சீட் தானா? லீக்கானது உத்தேச பட்டியல் -
கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் தள்ளுபடி யாருக்கெல்லாம் உறுதி? இந்த ஒரு தப்பு மட்டும் செஞ்சுடாதீங்க -
அப்போவே வார்னிங் கொடுத்தேன்.. அமெரிக்காதான் கேட்கல! போட்டு உடைத்த கத்தாரின் எரிசக்தித்துறை அமைச்சர் -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
கண்ட்ரோல் எடுத்த அமித் ஷா.. பவர் போன எடப்பாடி.. இனி டெல்லி தர்பார்.. அதிமுகவின் பிடி நழுவுகிறது? -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
1 மணி ஃப்ளைட்.. இரவே வீடியோ கால்.. தாமரையில் போட்டியிடுங்க.. டிடிவி, அன்புமணிக்கு அமித் ஷா செக்? -
என்னது தனித்து போட்டியா? உங்க சீட்டே வேண்டாம்.. விஜய் முடிவால் தெறித்து ஓடும் தவெக நிர்வாகிகள்












Click it and Unblock the Notifications