8 புதிய ரயில்வே திட்டங்கள்.. 2 கோடி வீடுகள்.. 7 மாநிலத்திற்கு ஜாக்பாட்.. மத்திய அரசு ஒப்புதல்
டெல்லி: டெல்லியில் மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், புதியதாக 8 ரயில்வே திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. வரும் 2031 நிதியாண்டு வரையிலான இந்த பணிகளுக்கு, 24 ஆயிரத்து 657 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். மேலும் 2 கோடி வீடுகளை கட்டுவதற்கு ரூ.3.06 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யவும் கேபினட் கூட்டத்தில் ஒப்புதல் அளித்துள்ளது.
பிரதமா் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், புதிதாக 8 ரயில்வே திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. ரூ.24,657 கோடி மதிப்பீட்டில் இந்த திட்டங்களை செயல்படுத்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

8 புதிய ரயில்வே திட்டங்கள்: அமைச்சரவைக் கூட்டத்திற்குபிறகு மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- ரூபாய் 24,657 கோடி மதிப்பீட்டில் 8 ரயில்வே திட்டங்களுக்கு அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. புதிய வழித்தட திட்டங்கள் நேரடி தொடர்பு மற்றும் ரயில்வேயின் சேவை, செயல் திறன், நம்பகத்தன்மை ஆகியவற்றை மேம்படுத்தும்" என்றார்.
7 மாநிலங்களுக்கு பயன்: இந்த ரயில்வே திட்டங்கள் 7 மாநிலங்களில் உள்ள 14 மாவட்டங்கள் வழியாக செல்லும் வழித்தட திறனை மேம்படுத்தும் வகையில் செயல்படுத்தப்பட உள்ளது. அதாவது, ஒடிசா, மகாராஷ்டிரா, ஆந்திரா, ஜார்க்கண்ட், பீகார், தெலுங்கானா மற்றும் மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்கள் வழியாக ரயில்வேயின் 8 திட்டங்களும் செயல்படுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
64 புதிய ரயில் நிலையங்கள்: இந்த திட்டத்தின் மூலம் புதிதாக 64 ரயில் நிலையங்கள் கட்டப்படும். இதன் மூலம், கிழக்கு சிங்கபம், பதாதரி கோதகுடேம், மல்கனகிரி, கல்கண்டி, நபரங்கபூர், ராயகடா, ஆகிய 6 மாவாட்டங்களுக்கு கனெக்டிவிட்டியை மேம்டுத்தும். தோராயமாக 510 கிராமங்களில் உள்ள 40 லட்சம் மக்கள் இதன் மூலம் பயன்பெறுவார்கள்.
விவசாய பொருட்கள், உரங்கள், நிலக்கரி, இரும்பு, சிமெண்ட், சுண்ணாம்பு, அலுமினிய பவுடர், கிரனைட் உள்ளிட்ட பொருட்களை கொண்டு செல்வதற்கும் இந்த வழித்தடம் மிக முக்கியமானதாக இருக்கும். யுனெஸ்கோ உலக பாரம்பரிய தளமான அஜந்தா குகைகள் இந்திய ரயில்வே நெட்வொர்க்குடன் இணைக்கப்பட உள்ளது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
2 கோடி வீடுகள்: இது மட்டும் இன்றி கிராமப்புறங்களில் 2 கோடி வீடுகளை கட்டுவதற்கு ரூ.3.06 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யவும் கேபினட் கூட்டத்தில் ஒப்புதல் அளித்துள்ளது. பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா கிராமின் திட்டத்தின் கீழ் அடுத்த 5 ஆண்டுகளில் கட்டப்படும் வீடுகளின் மூலம் 1 கோடி பேர் பயனடைவார்கள். இந்த திட்டத்தின் கீழ் சமவெளிப் பகுதிகளில் கட்டப்படும் வீடுகளுக்கு 1.2 லட்சமும், வடகிழக்கு மற்றும் மலை மாநிலங்களில் கட்டப்படும் வீடுகளுக்கு ரூ.1.3 லட்சமும் நிதி உதவி வழங்கப்படும் என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
-
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம












Click it and Unblock the Notifications