Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

8 புதிய ரயில்வே திட்டங்கள்.. 2 கோடி வீடுகள்.. 7 மாநிலத்திற்கு ஜாக்பாட்.. மத்திய அரசு ஒப்புதல்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: டெல்லியில் மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், புதியதாக 8 ரயில்வே திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. வரும் 2031 நிதியாண்டு வரையிலான இந்த பணிகளுக்கு, 24 ஆயிரத்து 657 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். மேலும் 2 கோடி வீடுகளை கட்டுவதற்கு ரூ.3.06 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யவும் கேபினட் கூட்டத்தில் ஒப்புதல் அளித்துள்ளது.

பிரதமா் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், புதிதாக 8 ரயில்வே திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. ரூ.24,657 கோடி மதிப்பீட்டில் இந்த திட்டங்களை செயல்படுத்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

Union Cabinet Meeting Railway PM Modi

8 புதிய ரயில்வே திட்டங்கள்: அமைச்சரவைக் கூட்டத்திற்குபிறகு மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- ரூபாய் 24,657 கோடி மதிப்பீட்டில் 8 ரயில்வே திட்டங்களுக்கு அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. புதிய வழித்தட திட்டங்கள் நேரடி தொடர்பு மற்றும் ரயில்வேயின் சேவை, செயல் திறன், நம்பகத்தன்மை ஆகியவற்றை மேம்படுத்தும்" என்றார்.

7 மாநிலங்களுக்கு பயன்: இந்த ரயில்வே திட்டங்கள் 7 மாநிலங்களில் உள்ள 14 மாவட்டங்கள் வழியாக செல்லும் வழித்தட திறனை மேம்படுத்தும் வகையில் செயல்படுத்தப்பட உள்ளது. அதாவது, ஒடிசா, மகாராஷ்டிரா, ஆந்திரா, ஜார்க்கண்ட், பீகார், தெலுங்கானா மற்றும் மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்கள் வழியாக ரயில்வேயின் 8 திட்டங்களும் செயல்படுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

64 புதிய ரயில் நிலையங்கள்: இந்த திட்டத்தின் மூலம் புதிதாக 64 ரயில் நிலையங்கள் கட்டப்படும். இதன் மூலம், கிழக்கு சிங்கபம், பதாதரி கோதகுடேம், மல்கனகிரி, கல்கண்டி, நபரங்கபூர், ராயகடா, ஆகிய 6 மாவாட்டங்களுக்கு கனெக்டிவிட்டியை மேம்டுத்தும். தோராயமாக 510 கிராமங்களில் உள்ள 40 லட்சம் மக்கள் இதன் மூலம் பயன்பெறுவார்கள்.

விவசாய பொருட்கள், உரங்கள், நிலக்கரி, இரும்பு, சிமெண்ட், சுண்ணாம்பு, அலுமினிய பவுடர், கிரனைட் உள்ளிட்ட பொருட்களை கொண்டு செல்வதற்கும் இந்த வழித்தடம் மிக முக்கியமானதாக இருக்கும். யுனெஸ்கோ உலக பாரம்பரிய தளமான அஜந்தா குகைகள் இந்திய ரயில்வே நெட்வொர்க்குடன் இணைக்கப்பட உள்ளது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

2 கோடி வீடுகள்: இது மட்டும் இன்றி கிராமப்புறங்களில் 2 கோடி வீடுகளை கட்டுவதற்கு ரூ.3.06 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யவும் கேபினட் கூட்டத்தில் ஒப்புதல் அளித்துள்ளது. பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா கிராமின் திட்டத்தின் கீழ் அடுத்த 5 ஆண்டுகளில் கட்டப்படும் வீடுகளின் மூலம் 1 கோடி பேர் பயனடைவார்கள். இந்த திட்டத்தின் கீழ் சமவெளிப் பகுதிகளில் கட்டப்படும் வீடுகளுக்கு 1.2 லட்சமும், வடகிழக்கு மற்றும் மலை மாநிலங்களில் கட்டப்படும் வீடுகளுக்கு ரூ.1.3 லட்சமும் நிதி உதவி வழங்கப்படும் என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+