Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தனியார்மயமாகும் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி? லாபம் ஈட்டியும் தப்பவில்லை.. மத்திய அரசு திட்டம்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: பொதுத்துறை வங்கிகளான இந்தியன் ஓவர்சீஸ் மற்றும் சென்ட்ரல் வங்கி ஆகியவற்றை தனியார்மயாக்கும் பணிகளை துரிதப்படுத்தும் பணியில் மத்திய அரசு இறங்கியுள்ளது.

பொதுத்துறை நிறுவனங்களை தனியாரிடம் விற்று வரும் மத்திய அரசு பல்வேறு சிறிய வங்கிகளையும், நஷ்டத்தில் இயங்கும் வங்கிகளையும் பெரிய வங்கிகளோடு இணைத்தது.

வங்கி ஊழியர்களின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் இந்த நடவடிக்களை மேற்கொண்ட அரசு, பொதுத்துறை வங்கிகளான இந்தியன் ஓவர்சீஸ் வங்கி மற்றும் சென்ட்ரல் வங்கிகளை தனியாரிடம் விற்க முடிவு செய்து அதற்கான பணிகளை மேற்கொண்டு வருகிறது.

நிதி ஆயோக் பரிந்துரை

நிதி ஆயோக் பரிந்துரை

மத்திய அரசின் நிதி ஆயோக் நிறுவனம் 2 வங்கிகளை தனியார்மயமாக்குவது தொடர்பான பரிந்துரையை ஏற்கனவே சி.ஜி.டி, எனப்படும் அரசு முதலீடுகளை விற்பதற்கான செயலாளர்களிடன் முக்கிய குழுவிடம் பரிந்துரைத்து இருக்கிறது. தற்போது அதற்கான பணிகளை மத்திய அரசு துரிதப்படுத்தி இருக்கிறது.

 வங்கி ஊழியர் போராட்டங்களால் தாமதம்

வங்கி ஊழியர் போராட்டங்களால் தாமதம்

2 வங்கிகளும் முதல் காலாண்டு முடிவுகளை வெளியிட்ட பின் தனியார்மயமாக்கும் பணிகள் துரிதப்படுத்தப்படும் என மத்திய நிதித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. வங்கி ஊழியர்களின் கடும் எதிர்ப்பு காரணமாகவும், வங்கி ஊழியர்களின் தொடர் போராட்டங்களாலும், மாநில தேர்தல் காரணமாகவும் வங்கிகளை தனியார்மயமாக்கும் பணிகளை சில காலம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.

மத்திய அமைச்சரவை ஒப்புதலுக்கு அனுப்ப முடிவு

மத்திய அமைச்சரவை ஒப்புதலுக்கு அனுப்ப முடிவு

ஆனால், டிசம்பர் காலாண்டில் சாதகமான முடிவுகள் வந்திருப்பதால் சி.ஜி.டி. குழு நிதி ஆயோக்கின் பரிந்துரை குறித்து ஆலோசித்து வருகிறது. அந்த குழு இறுது முடிவெடுத்து மத்திய அமைச்சரைவையின் இறுதி ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கும். அதே நேரம் வங்கிகளை தனியார் மயமாக்குவது தொடர்பாக வங்கிகளை தேசியமாக்கும் சட்டத்தில் எந்தவிதமான விதிகளும் இல்லை என்று அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

சட்டத்திருத்தம் தேவை

சட்டத்திருத்தம் தேவை

எனவே அரசுக்கு சொந்தமான வங்கிகளை தனியார்மயமாக்குவதற்கு வங்கிகளை தேசியமயமாக்கும் சட்டத்தில் திருத்தம் தேவைப்படுகிறது. ஏற்கனவே வங்கி ஒழுங்குமுறை சட்டம் மற்றும் வங்கி தேசியமயமாக்கல் சட்டம் ஆகியவற்றில் தனியமயமாக்கலை எளிதாக்கும் வகையில் திருத்தங்கள் செய்யப்பட்டு இருக்கின்றன. இவ்வாறு வங்கிகளை தனியார்மயமாக்குவதை எதிர்த்து ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபடுவதை தவிர்க்க வங்கி ஊழியர்களுக்கு சிறப்பு சலுகைகளை அறிவிக்க வங்கி நிர்வாகங்கள் முடிவு செய்து இருக்கின்றன.

 லாபத்தை ஈட்டும் ஓவர்சீஸ், சென்ட்ரல் வங்கிகள்

லாபத்தை ஈட்டும் ஓவர்சீஸ், சென்ட்ரல் வங்கிகள்


சென்னையை தலைமையிடமாக கொண்டுள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் மொத்த லாபம் அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான காலாண்டில் இரட்டிப்பாகி ரூ.454 ஆக உள்ளது. கடந்த முறை இதே காலாண்டில் அந்த வங்கியின் லாபம் ரூ.213 கோடியாக இருந்தது. மும்பையை தலைமையிடமாக கொண்டு செயல்படும் சென்ட்ரல் வங்கியின் மொத்த லாபம் ரூ.279 கோடியாக உள்ளது. இதன் வளர்ச்சி 69% ஆக இருக்கிறது.

இந்த 2 வங்கிகளை தனியார்மயமாக்கிய பிறகு மற்ற பொதுத்துறை வங்கிகளை தனியார்மயமாக்குவதற்கு மத்திய அரசு அடையாளம் காண உள்ளது. இந்தியாவில் 4 பொதுத்துறை வங்கிகள் மட்டும் போதும் என்பது மத்திய அரசின் திட்டம்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+