ஹமாஸ் விவகாரம்: கோப்பில் நான் கையெழுத்திடவில்லை.. மத்திய அமைச்சர் மீனாட்சி லேகி விளக்கம்..என்னாச்சு?
டெல்லி: ஹமாஸ் அமைப்பை பயங்கரவாத அமைப்பாக அறிவிக்கும் எந்த ஒரு ஆவணத்திலும் நான் கையெழுத்திடவில்லை என வெளியுறவுத்துறை இணை அமைச்சர் மீனாட்சி லேகி தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் உறுப்பினர்கள் எழுப்பும் கேள்விகளுக்கு சம்பந்தப்பட்ட அமைச்சகங்கள் மூலம் பதில் அளிக்கப்படும். இந்த கேள்வி- பதில்கள் அந்தந்த அமைச்சகங்கள் மற்றும் மக்களவை வெப்சைட்டில் பதிவேற்றம் செய்யப்பட்டு வருகிறது. இதில் நட்சத்திர கேள்விகள் எனப்படும் முக்கியமான கேள்விகளுக்கு அவையில் பதிலளிக்கப்படும். அப்போது சபாநாயகர் அனுமதி அளித்தால் உறுப்பினர்கள் கூடுதல் கேள்விகளை கேட்கலாம். இந்த நடைமுறைதான் நாடாளுமன்றத்தில் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், நாடாளுமன்ற குளிர் கால கூட்டத்தொடர் தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், கேரளாவை சேர்ந்த எம்.பி சுதாகாரன் கேள்வி ஒன்றை எழுப்பியுள்ளார். அதில், பாலஸ்தீனத்தின் ஹமாஸ் அமைப்பை பயங்கரவாத அமைப்பாக அறிவிக்க ஏதேனும் தீர்மானம் கொண்டு வரப்பட உள்ளதா? என்று கேள்வி எழுப்பப்பட்டு அதற்கான பதிலுடன் வெளியுறவுத்துறை அமைச்சக இணையதளத்தில் ஆவணம் ஒன்று பதிவிடப்பட்டு இருந்தது.
அதில், குறிப்பிடப்பட்டுள்ள அமைப்பு சட்டவிரோத செயல்பாடுகள் தடுப்புச் சட்டம், 1967 அல்லது உபா சட்டம் கீழ் தீவிரவாத அமைப்பாக கருதப்படும்" எனக் கூறப்பட்டு இருந்தது. அதில் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் மீனாட்சி லேகியின் கையெழுத்தும் இடம் பெற்று இருந்தது. ஆனால், அத்தகைய எந்த ஒரு கோப்பிலும் நான் கையெழுத்திடவில்லை என்று மீனாட்சி லேகி கூறியுள்ளார். இது பெரும் பரபரப்பையும் விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பாக மீனாட்சி லேகி தனது எக்ஸ் தளத்தில் கூறுகையில், "தவறான தகவல் அளிக்கப்பட்டுள்ளது. இந்த கேள்வி பற்றிய எந்த ஆவணத்திலும் நான் கையெழுத்து இடவில்லை. இதற்கு வெளியுறவுத்தூறை அமைச்சரும், பிரதமரும் பதில் அளிப்பார்கள்" என்று கூறியிருந்தார். மற்றொரு பதிவில், இந்த விவகாரத்தில் குற்றவாளிகள் விரைவில் கண்டுபிடிக்கப்படுவார்கள் எனக் கூறினார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications