தீயணைப்பு துறை இயக்குநராக இன்று ஒரு நாள் பணியாற்றிவிட்டு ஓய்வு பெறுங்கள்.. விடாமல் துரத்தும் உள்துறை
டெல்லி: சிபிஐ இயக்குநர் பதவியில் இருந்து வெளியேற்றப்பட்ட ஜனவரி 11-ஆம் தேதியை ஓய்வு பெற்ற நாளாக கருதுமாறு அலோக் வர்மா கடிதம் மூலம் கேட்டுக் கொண்ட நிலையில் புதிதாக மாற்றப்பட்ட தீயணைப்பு துறை இயக்குநர் பதவியில் இன்று ஒரு நாளாவது பணியாற்றிவிட்டு செல்லுங்கள் என மத்திய உள்துறை அமைச்சகம் கடிதம் எழுதியுள்ளது.
சிபிஐ இயக்குநராக இருந்த அலோக் வர்மா, சிறப்பு இயக்குனராக இருந்த ராகேஷ் அஸ்தனா ஆகியோருக்கு இடையே அதிகாரப் போட்டி இருந்ததை தொடர்ந்து, அவர்கள் இருவரும் கட்டாய விடுப்பில் கடந்த 11-ஆம் தேதி அனுப்பி வைக்கப்பட்டனர்.

இந்த நிலையில் பிரதமர் மோடி தலைமையிலான சிபிஐ இயக்குநருக்கான தேர்வு குழு கடந்த 10-ஆம் தேதி ஏற்படுத்தப்பட்டது. அலோக் வர்மா கடந்த 2017-ஆம் ஆண்டு ஜூலை 31-ஆம் தேதியுடன் பணி ஓய்வு பெறும் வயதை எட்டிவிட்டார்.
எனினும் அவருக்கு 2 ஆண்டு கால சிபிஐ இயக்குநராக பதவி வழங்கப்பட்டது. அதன்படி அவர் அப்பதவியிலிருந்து இந்த ஆண்டு ஜனவரி 31-ஆம் தேதி, அதாவது இன்றுடன் ஓய்வு பெற வேண்டும். ஆனால் சிபிஐ இயக்குநர் பதவியில் பல்வேறு இடர்பாடுகளால் அலோக் வர்மா தீயணைப்புத் துறை இயக்குநர் பதவிக்கு மாற்றப்பட்டார்.
ஆனால் தான் அப்பதவியை ஏற்கும் வயதை கடந்து விட்டேன். எனவே சிபிஐ இயக்குநர் பதவியில் இருந்து வெளியேறிய ஜனவரி 11-ஆம் தேதியை நான் ஓய்வு பெற்றவராக அறிவிக்க வேண்டும் என மத்திய பணியாளர் நலத் துறைக்கு அலோக் வர்மா கடிதம் எழுதியிருந்தார்.
இந்நிலையில் இதற்கு உள்துறை அமைச்சகம் பதில் அனுப்பியுள்ளது. அந்த கடிதத்தில் தீயணைப்பு துறை இயக்குநர் பணியில் உடனடியாக சேர உத்தரவிடப்பட்டுள்ளது. இன்று ஒரு நாள் அப்பணியில் சேர்ந்துவிட்டு ஓய்வு பெறுங்கள் என கூறியுள்ளது அலோக் வர்மாவுக்கு வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.
-
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
மொத்த பவரையும் காட்டிய இந்தியா.. கச்சா எண்ணெயுடன் குஜராத் வந்தது இந்திய டேங்கர் கப்பல்! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
29 தொகுதிகள்.. காங்கிரஸை விட 1 கூடுதலாக.. நாளை மறுநாள் அதிமுக - பாஜக ஒப்பந்தம் கையெழுத்து? -
”90 சீட், 2.5 வருடம் முதல்வர்” பேரம் பேசுனாங்க.. விஜய் சொன்ன ஒரே வார்த்தை! போட்டு உடைத்த ஆதவ் அர்ஜுனா -
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
சிறகடிக்க ஆசை: மீனா கண்ட காட்சி.. மீண்டும் ஜெயித்த ரோகிணி.. விஜயா வீட்டில் கொண்டாட்டம்! கடுப்பில் மனோஜ் -
ரெடியாகும் முக்கோண சாலை.. கோவை - திருச்சி - கரூர்.. தமிழ்நாட்டின் மிக முக்கிய பசுமை வழிச்சாலை! -
இந்தியாவில் இறங்கிய 7 வெளிநாட்டவர்.. கைமாறிய ஆயுதங்கள்.. சத்தமே இல்லாமல் தட்டி தூக்கிய என்ஏஐ!












Click it and Unblock the Notifications